Tag: தடுப்பு
ரசியா விமானம் ஏன் தடுப்பு -இலங்கை விளக்கம்
ரசியா விமானம் ஏன் தடுப்பு -இலங்கை விளக்கம்
இலங்கை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரித்து நிற்கும் ஏரோஃப்ளோட் என்ற ரசியா பயணிகள் விமானம் SU-289 பற்றிய குறிப்புடன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு பின்வருவனவற்றைக் குறிப்பிட விரும்புகின்றது.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படுவதைத் தடுக்கும்
வகையில் ஏரோஃப்ளோட் விமானத்திற்கு மேல் மாகாண வர்த்தக உயர் நீதிமன்றம் 2022 ஜூன் 02ஆந் திகதி தடை உத்தரவு பிறப்பித்தது.
இந்த வழக்கு ஐரிஷ் நிறுவனமான செலஸ்டியல் ஏவியேஷன் டிரேடிங் 10 லிமிடெட் வாதியால் முதல் பிரதிவாதியான பொதுக் கூட்டுப் பங்கு நிறுவனமான ‘ஏரோஃப்ளோட்
‘ மற்றும் இரண்டாவது பிரதிவாதியான எயார் நேவிகேஷன் மற்றும் இலங்கையின் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள், கட்டுநாயக்கவின் பதில் தலைவர், திரு.
ரசியா விமானம் ஏன் தடுப்பு -இலங்கை விளக்கம்
என். சி அபேவர்தன ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வணிகப் பிணக்கு தொடர்பான வழக்கு ஆகும்.
இந்த விடயம் இன்னும் நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்காக நிலுவையில் உள்ளது. இந்த விடயம் வழக்கமான தூதரக வழிகளிலும் ஆலோசனையில் உள்ளது. என இணை வெளிநாட்டு அமைச்சு அவசர அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது
இந்த சம்பவம் இரு நாடுகளுக்கு இடையில் முறுகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் பிரதமர் ரணில்,விக்கிரமசிங்கவும் கருத்து பகிர்ந்துள்ளார்
இது இரு நாடுகளுக்கு இடையிலான இராயதந்திர தொடர்பண விடயம் அல்ல என குறிப்பிட்டு இருந்தமை ரசியாவை சமாதான படுத்த ரணில் விக்கிரமசிங்கா மேற்கொண்ட கபாட நாடகம் என்பது அப்பட்டமாக தெரிகிறது
இந்தியாவுடன் ரசியா தற்போது உக்கிரேன் மீது மேற்கொண்டுள்ள போர்க் காலத்திலும் நெருங்கி உறவாடி வருகிறது
இவ்வேளை இலங்கையை வைத்து அமெரிக்கா காய்களை நகர்த்தி ,இந்த விமானத்தை நிறுத்தியதா என உள்வீட்டு அரசியல் சித்தாந்த வாதிகள்சந்தேகத்தை கிளறி வருகின்றனர்
இது இலங்கை ஆட்சியாளர்களினால் தனித்து எடுக்க பட்ட அரசியல் ஆடுகள விளையாட்டாக அமைய பெறாது என்பதே விடயம் அறிந்த வட்டாரங்களிள் ஆழமான கருத்து பகிர்வாக உள்ளது
- வன்னி மைந்தன் –
சிறுநீர் தொற்று பாதிப்பை தடுக்க இதை சாப்பிடுங்க
சுரைக்காய் இளநீர் ஜூஸ் சிறுநீர் தொற்று பாதிப்பை சரிப்படுத்தும். ரத்தத்தில் யூரியாவின் அளவை சீராக வைத்துக்கொள்ள உதவும்.
ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க துணை புரியும். சிறுநீரகத்தையும், ஈரலையும் பாதுகாக்கும். மூச்சுதிணறலையும் சரிசெய்யும்.
தேவையான பொருட்கள் :
சுரைக்காய் – ¼ கிலோ
புதினா – சிறிதளவு
இளநீர் – 200 மி.லி
செய்முறை:
சுரைக்காயின் மேற்பரப்பு தோலை முழுவதுமாக நீக்கிக்கொள்ளவும்.
பின்னர் பொடியாக நறுக்கி மிக்சியில் போட்டு அதனுடன் புதினா சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
அதனுடன் இளநீர் சேர்த்து வடிகட்டி பரிமாறவும்.
தேவையெனில் இந்து உப்பு சேர்த்துக்கொள்ளலாம்.
ஆரோக்கிய பலன்:
சிறுநீர் தொற்று பாதிப்பை சரிப்படுத்தும். ரத்தத்தில் யூரியாவின் அளவை சீராக வைத்துக்கொள்ள உதவும். ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க துணை புரியும். சிறுநீரகத்தையும், ஈரலையும் பாதுகாக்கும். மூச்சுதிணறலையும் சரிசெய்யும்.
குறிப்பு:
இது குளிர்ச்சி தன்மை அதிகம் கொண்டது. சளி பிடித்திருந்தால் இதை பருகக்கூடாது. கர்ப்பிணிகள் குறைந்த அளவிலே பருகவேண்டும்.
புத்தளம் பகுதியில் கிருமி நாசினி தெளிக்கும் இராணுவம் – படம் உள்ளே
புத்தளம் பகுதியில் கிருமி நாசினி தெளிக்கும் இராணுவம் – படம் உள்ளே
இலங்கை புத்தளம் பகுதியில் உள்ள பொது கட்டடங்கள் ,மற்றும்
வனவிலங்கு பாதுகாப்பபு திணைக்களம் போன்றவற்றுக்கு
இலங்கை இராணுவத்தினர் சென்று கிருமி நாசினிகள் தெளிக்கும்
பணியில் ஈடுபட்டுளனர்
பரவும் நோயினை கட்டு படுத்தும் நோக்கில் இந்த முன் தடுப்பு நடவடிக்கையில் இராணுவம் ஈடுபட்டுள்ளது
இதன் ஊடக இந்த நோயினை கட்டு படுத்த முடியும் என இலங்கை சுகாதார அமைச்சு நம்புவதன் விளைவே இந்த மருந்தடி நிகழ்வாக உள்ளது
இவ்வாறு மாவட்டங்கள் தோறும் சென்று இராணுவம் தனது பணியினை மேற்கொண்டு வருவதாக இராணுவம் அறிவித்துள்ளது
மக்கள் சேவையில் தமது இராணுவம் என சிங்கள அரசு கூறி மகிழ்கிறது










