Tag: சிறுத்தைகளால்
Posted in இலங்கை செய்திகள்
வீடுகளுக்குள் நுழையும் சிறுத்தைகளால் பீதியில் மக்கள்
Author: நிருபர் காவலன் Published Date: 09/01/2023
வீடுகளுக்குள் நுழையும் சிறுத்தைகளால் பீதியில் மக்கள்
தலவாக்கலை, அகரபத்தனை பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் தமது கிராமங்களுக்குள் புகுந்து வீடுகளுக்குள் நுழையும் சிறுத்தைகளால் ஏதேனும் ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சத்தில் தொடர்ந்தும் வாழ்ந்து வருகின்றனர்.
நாய்களை வேட்டையாடுவதற்காக அடிக்கடி வீடுகளுக்குள் இந்த புலிகள் நுழைவதாக மக்கள் தெரிவித்தனர் .
வீட்டு கதவுகளை திறந்து ,புலி வீடுகளுக்குள் நுழைவதாக மக்கள் தெரிவித்துள்ளனர் .
வீடொன்றில் பொருத்த பட்ட கமராவில் இந்த காட்சிகள் பதிவாகிய நிலையில்,அந்த கிராம மக்கள் பெரும் பீதியில் உறைந்துள்ளனர் .

















