பொலிசாரால் கைது 529 சாரதிகள்
Posted in இலங்கை செய்திகள்

பொலிசாரால் கைது 529 சாரதிகள்

பொலிசாரால் கைது 529 சாரதிகள்

பொலிசாரால் கைது 529 சாரதிகள், நாட்டில் திடீரென போலீசாரால் நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் பொழுது , போதையில் வாகனங்களை ஒட்டிய 529 சாரதிகளே தாங்கள் கைது செய்துள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்டு திடீர் சோதனை முற்றுகை நடவடிக்கையின் போது வாகன சாரதிகள் திடீரென சோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர் .

அவ்வாறு உள்ளாக்கப்பட்ட பொழுது 529 சாரதிகள் மதுபோதையில் வாகனங்களை செலுத்தி சென்றது கண்டறியப்பட்டது

இதனை அடுத்து கைது செய்யப்பட்ட அத்தனை சாரதிகளும் தற்போது நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

வீடியோ

போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பில் சட்டத்தை அமல்படுத்தி தற்போது வரை 264 சார்ர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சாரதிகள் அலட்சிய தன்மையும் அத்துமரிய சட்டவிதிகளும் காரணமாகவே வீதிகளில் விபத்துக்கள் ஏற்படுவதாகவும் மக்கள் பாதிக்கப்படுவதாகவும் போலீசார் இப்படி தெரிவித்து இந்த சாரதிகளை கைது செய்து உரிய நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

Posted in இலங்கை செய்திகள்

போதைக்கு அடிமையான சாரதிகள்

போதைக்கு அடிமையான சாரதிகள்

வாகன சாரதி அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்காக வருவோரில் 10

சதவீதமானவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.

வாகன சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்காக வருகைத்தந்தோரை

தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்தின் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோதே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

ஒருநாளில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 1 ஆயிரத்து 213 பேரில் 145 பேர் போதைபொருளை பயன்படுத்தியிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு போதைபொருளை பயன்படுத்தி வாகனங்களை செலுத்தும் நபர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக

சிரேஸ்ட பொலிஸ் ஊடகபேச்சாளரும், சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.