Tag: சமையலறை
பாராளுமன்ற சமையலறைக்குள் எலிகள்
பாராளுமன்ற சமையலறைக்குள் எலிகள்
பாராளுமன்ற சமையலறைக்குள் எலிகள் ,நேற்று (24) மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது, பாராளுமன்ற சமையலறைக்குள் எலிகள் அல்லது .
சுகாதாரமற்ற நிலைமைகள்
சுகாதாரமற்ற நிலைமைகள் இருப்பதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பிரசாத் சிறிவர்தன தெரிவித்தார்.
சேமிப்புப் பகுதிகள் கண்ணாடி மற்றும் வலைகளால் பாதுகாக்கப்பட்டதாகவும், ஊழியர்கள் தொடர்ந்து தூய்மையைப் பராமரித்து வருவதாகவும் சிறிவர்தன கூறினார்.
உணவின் தரம் குறித்து எந்த முறைப்பாடும் வரவில்லை
கடந்த 35 ஆண்டுகளில் பாராளுமன்றத்தில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து எந்த முறைப்பாடும் வரவில்லை என்றும், சபாநாயகரின் கருத்துக்கள்
ஊழியர்களின் கண்ணியம் மற்றும் மரியாதைக்கு தீங்கு விளைவிப்பதாகவும் அவர் கூறினார்.
இருப்பினும், வசதிகள் பழுதடைந்த நிலையில் இருப்பதாகவும் சிறிவர்தன சுட்டிக்காட்டினார். ஏழு அடுப்புகளில் ஆறு அடுப்புகள் செயலிழந்து,
உபகரணங்கள் உடைந்து, ஓடுகள் தேய்ந்து, வெளியேற்றும் மின்விசிறிகள் செயல்படவில்லை, கழிப்பறைகள் கூட மோசமான நிலையில் இருப்பதை அவர் கவனித்தார்.
ஊழியர்கள் மேலும் சிரமத்திற்கு ஆளாகாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, இந்தக் குறைபாடுகளை உடனடியாக நிவர்த்தி செய்யுமாறு அவர் அதிகாரிகளை வலியுறுத்தினார்.
பத்தரமுல்ல சுகாதார மருத்துவ அதிகாரியின் ஆய்வில், பாராளுமன்ற உணவகத்தில் எலிகள் மற்றும் கரப்பான் பூச்சிகளின் தடயங்கள், சேதமடைந்த சமையல் பாத்திரங்கள், உடைந்த தரை மற்றும் மனித நுகர்வுக்கு
பொருத்தமற்ற உணவு சேர்க்கைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன சமீபத்தில் வெளியிட்ட தகவலைத் தொடர்ந்து அவரது கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
பொது சுகாதார ஆய்வாளர்களின் அறிக்கை இன்னும் பகிரங்கமாக வெளியிடப்படவில்லை என்றும், ஆனால் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு
பங்கு வாக்கெடுப்பு போன்ற ஒரு முக்கியமான நாளில் உணவு விஷம் ஏற்பட்டால் எம்.பி.க்களுக்கு ஏற்படும் ஆபத்துகள் குறித்து எச்சரித்ததாகவும் சபாநாயகர் கூறினார்.
சமையலறையில் எரிந்து பெண் பலி
சமையலறையில் எரிந்து பெண் பலி
சமையலறையில் எரிந்து பெண் பலி ,சமையலறையில் எரிந்து பெண் பலியான சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
யாழ்ப்பாணம் புலவர் வீதி நவாலி வடக்கு மாணிப்பாய் சேர்ந்த கயன் தனுஷா 23 வருட ஒரு வயது குழந்தையின் தாயே சமையலறையில் தீ பற்றி பிடித்ததால் உடல் கருகி பலியாகி உள்ளார்.
மண்ணெண்ணையை ஊற்றி அடுப்பை பற்ற வைக்க முற்பட்ட பொழுது தீ பற்றி எரிந்ததில் அவர் உடல் கருகி பலியாகி உள்ளார்.
குழந்தையுடன் தாய் இருந்த பொழுது அடுப்பு எரியாத காரணத்தால் அடுப்பை மூட்டை மண்ணெண்ணையை ஊற்றிய பொழுது பெண்ணின் உடலில் மன்னனை சிந்தியதன் காரணத்தால் ,
தீக்காயம் ஏற்பட்டு அவர் யாழ்ப்பாவதென்ன வைத்தீஸ்வரர் அனுபவிக்கப்பட்டு இருந்து நேத்து சிகிச்சை பெற வேண்டி பலியாகி உள்ளார்.
இந்த மரணம் தொடர்பில் மாவட்ட திடீர் வர்ண விசாரி அதிகாரிகள் ஆறுமுகம் ஜெயபால சிங்கம் விசாரணையை மேற்கொண்டுள்ளார்.
இளம் பெண் ஒருவர் தீயில் கருகி பலியான சம்பவம் நவாலி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அலட்சியப் போக்கின் காரணமாக நடந்த ஒரு உயிர் இழப்பு என இதனை மக்கள் பேசிக் கொள்கிறார்கள்
சம்பவங்கள் உங்களுக்கு இடம் பெற்று விடாது இருக்க மக்களை ஒழிப்பாக இருங்கள்.
















