Tag: கொல்ல
என்னை கொல்ல ஈரான் முயற்சித்தால் ஈரானை அழிப்பேன் டிரம்ப்
என்னை கொல்ல ஈரான் முயற்சித்தால் ஈரானை அழிப்பேன் டிரம்ப்
என்னை கொல்ல ஈரான் முயற்சித்தால் ஈரானை அழிப்பேன் டிரம்ப் ,தன்னைக் கொல்ல ஈரான் சதித்திட்டம் தீட்டினால், அந்நாட்டை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என டிரம்ப் சூளுரைத்தார்.
தனது படுகொலைக்கு ஈரான்
தனது படுகொலைக்கு ஈரான் தலைவர்கள் முயன்றாலோ அல்லது அதனைச் செயல்படுத்தினாலோ, அமெரிக்க இராணுவம் இஸ்லாமியக் குடியரசின்
“அனைத்துப் பகுதிகளையும் முற்றிலுமாக அழித்துவிடும்” என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானை எச்சரித்தார்.
ஜூலை 10 ஆம் தேதி பிற்பகுதியில் ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் வெளியான அதிபரின் இந்தச் செய்தி, இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்ட தற்காலிக
உடன்பாடு நீடிக்கும் என்ற நம்பிக்கையை அணைத்துவிட்டதாகத் தோன்றிய மோதல்கள் நிகழ்ந்த ஒரு வாரத்தின் முடிவிலும், முன்னாள் உச்ச தலைவர் அலி கமேனியின் பல நாட்கள் நீடித்த இறுதிச் சடங்கிற்குப் பின்னரும் வெளிவந்தது.
பிப்ரவரி மாத இறுதியில் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கியபோது நடந்த ஒரு தாக்குதலில், தனது மகன் மொஜ்தபா கமேனியால் பதவியேற்ற கமேனி கொல்லப்பட்டார்.
ஈரானிய அரசாங்கம்
“ஈரானிய அரசாங்கம், உலகின் பல மூலைகளிலும் அறிவிக்கப்பட்டுள்ள, அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதியை, அதாவது என்னை,
படுகொலை செய்வோம் அல்லது படுகொலை செய்ய முயற்சிப்போம் என்ற தனது அச்சுறுத்தலைச் செயல்படுத்தினால், 1,000 ஏவுகணைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு ஈரான் இஸ்லாமியக் குடியரசை நோக்கி
குறிவைக்கப்பட்டுள்ளன; மேலும் ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் உடனடியாகப் பின்தொடரும்!” என்று டிரம்ப் எழுதினார்.
“உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன, மேலும் அமெரிக்க இராணுவம் தயாராகவும், விருப்பத்துடனும், திறமையுடனும் உள்ளது,” என்றும் அவர் மேலும் கூறினார்.
இந்த வாரத் தொடக்கத்தில் துருக்கியில் நடந்த நேட்டோ உச்சிமாநாட்டிலிருந்து திரும்பும் வழியில், டிரம்ப் ஒரு பிரிட்டிஷ் இராணுவத் தளத்தில் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானங்களை மாற்றினார்.
பிரிட்டனிலிருந்து புறப்பட்ட பிறகு, இந்த முடிவுக்குப் பாதுகாப்பு குறித்த கவலை காரணமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, டிரம்ப், “இல்லை, இல்லை, ஏன் அப்படி இருக்க வேண்டும்?” என்று பதிலளித்தார்.
ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்திற்கு எதிராக ஈரானிடமிருந்து நம்பகமான அச்சுறுத்தல் ஏதேனும் உள்ளதா என்று கேட்டதற்கு, டிரம்ப்,
“சரி, எனக்கு எல்லா நேரமும் அச்சுறுத்தல் இருக்கிறது. அவர்களின் பட்டியலில் நான் தான் முதலிடத்தில் இருக்கிறேன்,” என்று பதிலளித்தார்.
டிரம்ப் பல படுகொலை முயற்சிகளுக்கு இலக்காகியுள்ளார். 2024 ஜனாதிபதித் தேர்தலின் போது, அவரைக் கொல்வதற்கு ஈரானிடமிருந்து “உண்மையான
மற்றும் குறிப்பிட்ட அச்சுறுத்தல்கள்” இருப்பதாக பைடன் நிர்வாக அதிகாரிகள் அவருக்கு விளக்கமளித்ததாக அவரது பிரச்சாரக் குழு தெரிவித்தது.
ஈரானின் புதிய சதித்திட்டம் குறித்து இஸ்ரேல் டிரம்பை எச்சரித்ததாக இந்த வாரம் செய்திகள் வெளியாகின.
தப்பிய மருத்துவர் கணேஷ் கொல்ல வந்த கும்பல்
தப்பிய மருத்துவர் கணேஷ் கொல்ல வந்த கும்பல்
தப்பிய மருத்துவர் கணேஷ் கொல்ல வந்த கும்பல் , வன்னி மைந்தன் டிக் டாக் நேரலையில் பேசி வரும் மருத்துவர் கணேஷ் அவர்களை கும்பல் ஒன்று கொலை மிரட்டல் விடுத்தது சென்றுள்ளது .
பிரிட்டன் பகுதியில் உளவியல் மருத்துவராக விளங்கி வரும் மருத்துவர் கணேஷ் மீது விடுதலை புலிகள் என கூறி வரும் கும்பல் இந்த கொலை வெறி தாக்குதல் நடத்திட முயற்சித்துள்ளது .
பிரிட்டன் மற்றும் உலக நாடுகளில் இடம்பெறும் தமிழீழ விடுதலை புலிகள் என கூறி வரும் புலிகள் குழுவின் மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் .
அந்த விடயம் தொடர்பாக வன்னி மைந்தன் டிக் டக் நேரலையில் பேசி வருகின்றார் .
அதனை எதிர்கொள்ள முடியாத இந்த குழுவினர் ,தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு உள்ளார் எனவும் அவர் மீள வந்து ஆயுத போராட்டத்த்தை நடத்துவர் எனவும் ,
அவ்வாறு தலைவர் பிரபாகரன் உயிரோடு உள்ளார் எனவும் ,தாமே விடுதலை புலிகளின் தலைமை செயல்பாட்டு தலமை குழுவும் எனவும் தெரிவித்து மிரட்டியுள்ளனர் .
தொடர்ந்து தலைவர் பிரபாகரன் உயிரோடு இல்லை என கூற முற்பட்டாலோ ,அல்லது தமிழீழ விடுதலை புலிகள் பெயரில் பணம் சேகரிக்கும் விடயம் தொடர்பில் பேசினாலோ ,மருத்துவர் கணேஷிற்கு தகுந்த தண்டனை வழங்க படும் என கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளது .
பிரிட்டனுக்கு தலைமை தங்கிய செயல் பட்ட தமிழீழ விடுதலை புலிகளின் பிரிட்டன் பொறுப்பாளர் தனம் மீது தாக்குதல் நடத்திய அதே நெட்டையனும் ,குட்டையனும் ,இணைந்து தாக்குதல் நடத்த முற்பட்டுள்ளனர் என்ற சந்தேகம் எழுந்துள்ளது .
மருத்துவராக பணிபுரியும் மருத்துவ கார் திருப்பிடத்திற்கு சென்ற குழுவினர் ,இவரது காருக்கு அருகில் சென்று காருக்குள் வருமாறும் ,காருக்குள் வைத்து பேசுவோம் என மிரட்டியுள்ளனர் .
மருத்துவர் கணேசோ வெளியில் நின்றவாறே உரையாடலாம் விடயத்தை கூறுங்கள் என கூறி மிரட்டி விட்டு குறித்த குழு சென்றுள்ளது .
பிரிட்டன் தமிழீழ விடுதலை புலிகள் பெயரால் செயல் படும் இவ்வாறான பணம் பறிக்கும் மோசடி கும்பல் ,
பிரிட்டனில் புலிகள் தளபதிகள் என கூறியவாறு கேள்வி கேட்கும் மகளையோ மிரட்டி கொலை செய்திடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள செயல் அதிகரித்து வருகிறது அவதனமாக செயல்படுங்கள் .
மக்கள் பணத்தை கொள்ளையடித்த சுக போக வாழ்க்கை வாழ்ந்து வரும் புலிகள் பெயரில் இயங்கும் குழு மக்களை மிரட்ட ஆரம்பித்துள்ளது இதன் ஊடக மீளவும் அம்பல பட்டுள்ளது .
















