Tag: கொடுமை
பெண்ணுக்கு சவுதியில் நடந்த கொடுமை
பெண்ணுக்கு சவுதியில் நடந்த கொடுமை
பெண்ணுக்கு சவுதியில் நடந்த கொடுமை ,பணிப்பெண்ணாக சவுதிக்கு சென்ற எனக்கு இரண்டு மாத சம்பளம் தரவில்லை. பேசியதை விட அதிகமாக வேலை வாங்கி துன்பப்படுத்திவிட்டு நாட்டுக்கு அனுப்பி விட்டார்கள்.
அங்குள்ள விசேட தேவைக்குட்பட்ட பிள்ளையையும் மீளுங்கள் என துணுக்காய், ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த கலாநாதன் கிருஸ்ணவேணி கோரிக்கை விடுத்துள்ளார்.
தனது அவல நிலை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இடம்பெயர்ந்து மீள் குடியேறிய பின்னர்
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து மீள் குடியேறிய பின்னர் குடும்ப வறுமை காரணமாக பணிப்பெண்ணாக வெளிநாடு சென்றேன். அதுவும் மன்னராட்சி நடந்த, சட்டம் நிறைந்த இஸ்லாமிய நாடு என சவுதியை தெரிவு செய்தேன். ஏஜென்சி மூலமாக சட்ட பூர்வமாகவே சென்றேன்.
நான் ஏழு பேர் கொண்ட குடும்பத்தின் வீட்டு வேலைக்கு தான் சென்றேன். மேலதிக வேலை செய்ய என்னால் முடியாது.
போகும் போது எனக்கு 49 வயது. ஆரம்ப சம்பளம் அவர்களது பணத்தில் 900 தந்தார்கள். முதல் மாத சம்பளம் இன்னும் தரவில்லை. பின்னர் எனக்கு மேதிலக சமையல் வேலைகள் தந்தார்கள்.
தோட்டம் வேலை உட்பட பல வேலைகளை அவர்களது தாய் இறந்ததும் செய்தேன். நான் சிரமப்பட்டேன். என்னை துன்பப்படுத்தினார்கள்.
காலில் அடித்தார்கள். இரண்டு வருடத்தில் திரும்பி வருவதாகவே சென்றிருந்தேன்.
ஆனால் என்னை வர அவர்கள் விடவில்லை. 2015 ஆம் ஆண்டு 7 ஆம் மாதம் போன நான் கடைசியாக என்னை துன்பப்படுத்தி அங்கு பொலிசில் நிறுத்தி இறுதியாக அரசாங்கத்தால் 2024 ஆம் ஆண்டு தான் அழைத்து வந்தனர்.
எனக்கு இறுதி மாத சம்பளமும் தரவில்லை. நான் உழைக்க சென்று தற்போது பணமும் இல்லை. உடலும் இயலாத நிலையில் உள்ளேன்.
அந்த குடும்பத்தில் விசேட தேவையுடைய ஒரு பிள்ளை உள்ளது. அதுவும் அங்கு துன்பப்படுகிறது.
அதனையும் காப்பாற்ற வேண்டும். எனது இரண்டு மாத சம்பளமும் தேவை எனத் தெரிவித்தார்.
- பெண்ணை தாக்கி தலை முடியை வெட்டிய கொடூரம்

- வெள்ளை மாளிகையில் நடைபெற்ற பௌத்த சமய நிகழ்ச்சி

- மே மாதம் முழுவதும் தடையற்ற எரிவாயு விநியோகத்திற்கு லிட்ரோ உறுதி

- எரிசக்தி அமைச்சர் செயலாளரின் ராஜினாமா ஒரு கண் துடைப்பு

- ஒரு பேரல் டீசல் 286 அமெரிக்க டாலர்

- இன்று பல மாகாணங்களில் பிற்பகல் மழை

- மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பிறகு முதல் கச்சா எண்ணெய் கப்பல் இன்று வருகை

- 1 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது குறித்து அமைச்சு அறிவிப்பு

- அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு

- புத்தாண்டுக்குப் பிறகு கொழும்பு திரும்பும் பயணிகளுக்காக சிறப்புப் பேருந்து சேவை

சீனாவில் சிறுவர்களுக்கு நடக்கும் கொடுமை – வெளியான புகைப்படங்கள்
சீனாவில் சிறுவர்களுக்கு நடக்கும் கொடுமை – வெளியான புகைப்படங்கள்
சீனா உலக நாடுகளில் இடம் பெறும் விளையாட்டு போட்டிகளில் கணிசமான தங்க பதக்கத்தை
தட்டி செல்கிறது ,கடினமான பயிற்சியும் ,திறமையான நெறி படுத்தாலும் இதற்கு காரணமாக உள்ளது
அவ்விதம் சிறுவர்கள் முதல் வாலிபர்கள் வரை கடுமையான பயிற்சிகள் வழங்க படுகின்றன
சொல்ல போனால் இவை இராணுவத்திற்கு வழங்க படும் பயிற்சிக்கு ஒப்பான ஒன்றாகவே உள்ளது
அவ்விதம் அழுத படியும் சிரித்த படியும் தமது பயிற்சிகளை முடித்து திறம்பட களமாடும் சிறுவர்கள் புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
உலகில் யாவிலும் முதல் இடத்தில் நிற்பதுசீனா தான் ,அதற்கு காரணம் இவ்வாறான செழுமை படுத்தும் பயிற்சிகள் தான் என்பதை மறுக்க முடியாது
இந்த பயிற்சிகள் வேதனையா ..? சாதனையா ..? நீதிபதிகள் நீங்கேள ,முடிவு உங்கள் கையில் ..!
read more 20 world news click here











