Tag: குளிப்பதை
பெண் குளிப்பதை பார்வையிட்ட பொலிஸ்
பெண் குளிப்பதை பார்வையிட்ட பொலிஸ்
பெண் குளிப்பதை பார்வையிட்ட பொலிஸ் ,3.4.2024 அன்று நான் என் குடும்ப உறுப்பினர் சகிதம் 8 பேர் கன்னியா வெந்நீர் ஊற்றுக்கு சென்றோம் .
ஒரு தலைக்கு 50 ருபா கொடுக்க வேண்டும் அங்கு குளித்து உடுப்பு மாற்றுவதற்கு இடம் இருக்கவில்லை .
முன்பு உடுப்பு மாற்றுவதற்கு என ஆண்கள் பெண்கள் இருவருக்கும் ஒவ்வொரு பகுதிகள் காணப்பட்டன, அதை நினைத்து நாமும் குளித்து உடுப்பு மாற்றுவதற்கு போனோம் .
குளித்த பின் பார்த்தபோது எல்லா இடங்களும் தகரத்தாலும் பரல்களாலும் அடைக்கப்பட்டு இருந்தது எமக்கு என்ன செய்வதென தெரியவில்லை.
பின்பு பற்றை காடுகள் இருந்தது அதற்குள் மறைந்திருந்து உடுப்பை மாற்றினோம் .
மேலே போலீச இருந்தார்கள் நாம் அவர்களுக்கு தென்படாதபடி உடுப்புகளை மாற்றிவிட்டு எமக்கு டிக்கெட் தந்தவருடன் கதைத்தோம் .
நீங்கள் டிக்கெட் தரும்போது எங்களுக்கு சொல்லி இருக்க வேண்டும் அல்லவா நாம் குளிக்காது திரும்ப வந்திருப்போம்.
அதற்கு அவர் சொன்னார் பார்க்க போவதற்கு தான் 50 ரூபாய் என நான் சொன்னேன் நீங்கள் இதில் விளம்பரப்படுத்தி இருந்தால் நாங்கள் குளிக்க போயிருக்க மாட்டோம் என நீங்கள் இதில் எழுதி போட்டோ இருக்க வேண்டும் உடுப்பு மாற்றுவதற்கு இடம் இல்லை என.
அப்படி எழுதி போட்டிருந்தால் நாங்கள் குளிக்காம வந்து இருப்போம் இது சம்பந்தமாக நீங்கள் நடவடிக்கை எடுத்தீர்களா என்று கேட்டபோது ஓம் என்று சொன்னார்.
இது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் இதுவரை ஏன் எடுக்கவில்லை என கேட்டோம் .
இவ்விடயம் தொடர்பாக இது சம்பந்தமாக யாருடன் கதைக்க வேண்டும் என்று தொல்பொருள் திணைக்களத்துடன் கதைக்க வேண்டும் என்று சொன்னார்.
அப்போது நான் சொன்னேன் இதனை ஊடகங்களுக்கு தெரிய ப்படுத்தவா என்று ஓம் என தெரிவித்தார் .
உண்மையில் எங்களுக்கு முன் மூன்று பெண் பிள்ளைகள் உடுப்பு மாற்றினவர்கள் அவர்கள் மேலே இருக்கிற போலீஸ்காரர்களை அவதானித்தார்களோ தெரியவில்லை.
திருகோணமலை வெந்நீர் ஊற்றில் நடக்கின்ற இந்த விடயம் அங்கு செல்லும் மக்களுக்கு பெரும் இடர்களை ஏற்படுத்தியுள்ளது .
இவ்வாறு அங்கு சென்று பாதிக்க பட்டவர்கள் அனுப்பி வைத்துள்ளார்கள் .
- பிரென்ட் எண்ணெய் விலை 90 டாலரைத் தாண்டியது

- 40000 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் தொழில்நுட்ப அதிகாரி கைது

- பிரிட்டன் உள்ளிட்ட 40 நாடுகளுக்கு விசா இலவசம்

- 1948 ஆம் ஆண்டு சட்டத்திற்குப் பதிலாக புதிய குடிவரவு மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது

- கொழும்பு உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ரஜித சேனரத்ன

- 14 சுரங்கத் தொழிலாளர்கள் பலி

- 30,000 மெட்ரிக் டன் நெல் அரைக்கப்பட்டு விநியோகிக்கப்பட உள்ளது

- சிரியாவின் முன்னாள் அதிபர் அசாத்துக்கு அவர் இல்லாத நிலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டது

- லங்கா மெட்ரோ டிரான்சிட்டை விரிவுபடுத்த ரூ. 1 பில்லியனுக்கும் அதிகமான நிதிக்கு ஒப்புதல்

- நொரோச்சோலை நிலக்கரி கொள்முதலுக்கு இரண்டு விநியோகஸ்தர்கள் தேர்வு









