Tag: கழுத்தில் கத்தி
மகிந்த குடும்பம் கழுத்தில் கத்தி
மகிந்த குடும்பம் கழுத்தில் கத்தி
மகிந்த குடும்பம் கழுத்தில் கத்தி ,இங்கே சிலருக்கு இந்த பதிவை புரிந்து கொள்ள முடியவில்லை.
இன்று, இந்த ஜனாதிபதி தேர்தல் தொடர்பில், மகிந்த கட்சியின் மனநிலை இதுவாகும் என்பது மட்டுமே இங்கே கூற படுகிறது.
மற்றபடி, எனக்கு மகிந்தவின் கட்சியோ, கழுத்தோ பொருட்டல்ல. அவரை போர் குற்றவாளி ஆக்கி சர்வதேச நீதி மன்றில் நிறுத்த வேண்டும் என்ற ஓலமிட்டவர்களே, இன்று மூடி கொண்டு இருக்கிறார்கள்.
புலம் பெயர்ந்த இலங்கையர் பலர் மகிந்தவுடன் கூட்டு பிசினஸ் கூட செய்கிறார்கள்.
“உன் ஒக்கம யாலுவோ” என்ற சொல்லாடலை இங்கே பயன் படுத்தும் தமிழ், முஸ்லிம் நண்பர்களின் அறிவு பரிதாபமாக இருக்கிறது. இப்படி சொன்னவர் உண்மையில் யார்? அவர் எவர்? என்ன செய்தார்? என்று கூட இவர்களுக்கு தெரியவில்லை.
ஈழ தமிழ், மலையக தமிழ், முஸ்லிம் மக்கள் இந்நாட்டில் ஆளும் வர்க்கம் அல்ல என்பதும், இந்த இனங்களை சேர்ந்த எவரும் இந்நாட்டில் ஜனாதிபதி, பிரதமர், பிரதான அமைச்சர்கள் ஆவதில்லை என்பதும், இந்நாட்டு தேர்தல்
பெரிய கட்சிகளுடன் கூட்டு
முறையின்படி பெரிய கட்சிகளுடன் கூட்டு சேர்ந்தே ஆட்சியில் பங்கு பெற முடியும் என்பதும், இந்நாட்டு சிஸ்டம். இந்த யதார்த்தத்தை கூட புரிந்து கொள்ள முடியாமை, அடிப்படை அரசியல் அறிவு இல்லாத முட்டாள்தனம்.
எப்போதும் எதிர்கட்சியில்தான் இருப்போம் என்று வடக்கு கிழக்கு தமிழ் தேசிய கட்சிகள் முடிவு செய்வது அவர்களது விருப்பம்.
அதேபோல், பொது தமிழ் வேட்பாளரை நிறுத்தவும் தமிழ் தேசிய கட்சிகளுக்கு உரிமை உண்டு என நான் கூறி உள்ளேன்.
இவை பற்றி ஈழ தமிழ் மக்களே இறுதி முடிவு எடுக்க வேண்டும். ஆனால், பொது தமிழ் வேட்பாளரை அழைத்து கொண்டு வடக்கு கிழக்குக்கு வெளியே வர வேண்டாம் என்றும் நான் கூறி உள்ளேன்.
அது இங்கு வாழும் தமிழ் மக்களுக்கு சிக்கலை உருவாக்கும் என தூர நோக்கில் கூறி உள்ளேன்.
எங்களை பொறுத்த வரையில், வரலாற்றில் இல்லாத வகையில் கொடும் போர் செய்த ராஜபக்சர்களுடன் ஒரு போதும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ
ஒன்றாக உட்கார முடியுமா? அதேபோல், பாவம் என தெரிந்து கொண்டே ஜனசாக்களை எரித்த கும்பலை மன்னிக்க முடியுமா? நேற்று ரணில் மகிந்தவின் ஆதரவை வீடு தேடி போய் கெஞ்சி கேட்கிறார்.
சிங்கள மொழியில் கடிதம் எழுதி கேட்கிறார். ஆகவே ரணில் முறை தவறி விட்டார்.
ராஜபக்சர்களின் ஊழல், திருட்டு,
ராஜபக்சர்களின் ஊழல், திருட்டு, பற்றி பெரும்பான்மை சிங்கள இளையோர் பார்த்து கொள்ளட்டும்.
இவர்கள்தான் கோட்டாவை 69 இலட்சம் வாக்குகளை கொடுத்து, இனவாத ஆட்சியில் அமர்த்தினார்கள்.
அப்புறம் இவர்களே அரகல என்று அவரை விரட்டினார்கள். இந்த சிங்கள இளையோர் தமிழ், முஸ்லிம் மக்களின் அடிப்படை கோரிக்கைகளை ஏற்க வில்லை.
ஆகவே ராஜபக்சர்களின் ஊழல் பற்றியும் அவர்களே பார்த்து கொள்ளட்டும். தமிழ், முஸ்லிம் இளையோர் சும்மா தடுமாற தேவை இல்லை.
என்னை பொறுத்த வரை, சிறுபான்மை மக்கள் தமது குறைந்த பட்ச சமூக அபிலாசைகளை சாதூர்யமாக தேடி பெற வேண்டும். இருப்பவர்கள் சரியில்லை என்றால், புதிய கட்சிகளை உருவாக்கி கொள்ள வேண்டும்.
இதற்காக, அப்பாவி மக்களை கொன்று குவித்தவனுடன் சென்று அமர முடியாது. போரை நோக்கி ராஜபக்சரை தள்ளியவர்களுடனும் உடனடியாக உட்கார முடியாது.
ஆட்சிக்கு வர கூடிய வாய்ப்பு உள்ள, இருப்பவர்களில் சிறந்தவருக்கு ஆதரவு வழங்க வேண்டும். அவ்வளவுதான்.
இவ்வாறு மனோ கணேசன் தெரிவித்துள்ளார் .
- தேசத்தின் குரலப்பா தேனிசை செல்லப்பா|710|தேனிசை செல்லப்பா ||Thenisai Chellappa

- செல்லப்பா செல்லப்பா நீங்க எங்கள் தாயகத்தின் செல்லப் பிள்ளை |தேனிசை செல்லப்பா |709|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா இறுதி நிகழ்வு காட்சிகள்

- செல்லப்பா உன்ன தேசம் மறக்குமா |709|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

- பாணரே எங்க பாணரே |707|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

- செல்லப்பா செல்லப்பா தேனிசை செல்லப்பா |706| Thenisai Chellappa

- செல்லப்பா எங்க செல்லப்பா |705| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேசம் மறக்குமா எங்க தேசம் மறக்குமா செல்லப்பா |704| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்

- வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

யாழில் 4 மாத குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து அரங்கேறிய கொடூரம்
யாழில் 4 மாத குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து அரங்கேறிய கொடூரம்
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் மாகியப்பிட்டி பகுதியில் உள்ள வீடு ஒன்றினுள் நேற்று அதிகாலை வீட்டினை உடைத்து
உட்புகுந்த கொள்ளை கும்பல், குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து 11 பவுண் நகை, 3 தொலைபேசி, 2 இலட்சம் ரூபாய் காசு, ஒரு மோட்டார் சைக்கிள் என்பவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளதாக மானிப்பாய் பொலிசார் தெரிவித்தனர்.
இது குறித்து மேலும் தெரிய வருவதாவது,
யாழில் 4 மாத குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து அரங்கேறிய கொடூரம்
சண்டிலிப்பாய் மாகியப்பிட்டி பகுதியில் உள்ள வீடொன்றில் கணவன், மனைவி, இரு சிறுபிள்ளைகள் இருந்த நிலையில் வீட்டின் கதவினை உடைத்து முகமூடி அணிந்து உட்புகுந்து கொள்ளையடித்து.
பின்னர் பொலிஜாருக்கு அறிவித்தால் பின் விளைவுகளை எதிர்நோக்க நேரிடும் என தெரிவித்து வீட்டின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் வாகனத்தில் நால்வரும் தப்பி சென்றுள்ளனர்.
இதனையடுத்து இது மானிப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
- தேசத்தின் குரலப்பா தேனிசை செல்லப்பா|710|தேனிசை செல்லப்பா ||Thenisai Chellappa
by நிருபர் காவலன் - செல்லப்பா செல்லப்பா நீங்க எங்கள் தாயகத்தின் செல்லப் பிள்ளை |தேனிசை செல்லப்பா |709|Thenisai Chellappa
by நிருபர் காவலன் - தேனிசை செல்லப்பா இறுதி நிகழ்வு காட்சிகள்
by நிருபர் காவலன் - செல்லப்பா உன்ன தேசம் மறக்குமா |709|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa
by நிருபர் காவலன் - பாணரே எங்க பாணரே |707|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa
by நிருபர் காவலன்









