ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையில் சிக்க போகும் இலங்கை
Posted in இலங்கை செய்திகள்

ஐ.நா பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்

ஐ.நா பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78 ஆவதுகூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது

இந்த கூட்டத்தொடர் வரும் 21ம் திகதிவரை நடைபெறவுள்ளது.

2030 நிகழ்ச்சி நிரலுக்கான அமைதி, சுபீட்சம், முன்னேற்றம் மற்றும் நிலைபேற்றுத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான நடவடிக்கைகளை

துரிதப்படுத்துவதற்கான நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பை மீண்டும் உருவாக்குதல் என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த ஆண்டு கூட்டத்தொடர் இடம்பெறவுள்ளது.

ஐ.நா பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்

இதில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று 17) அதிகாலை நியூயோர்க் நகரைச் சென்றடைந்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி கூட்டத்தொடரில் பங்கேற்று, தனது விசேடஉரையை ஆற்ற உள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத்தொடருக்கு இணையாக செப்டம்பர் இன்று நடைபெறவுள்ள, 2030 ஆம் ஆண்டிற்கான மாற்றம் மற்றும் விரைவான நடவடிக்கைகள் என்பவற்றுக்காக உலக தலைவர்களினால் வழிகாட்டுதல்கள்
வழங்கப்படும் 2023 நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் உச்சி மாநாட்டின் அரச தலைவர்கள் சந்திப்பிலும் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளார்.

மேலும், அன்று ஜனாதிபதி, உச்சி மாநாட்டில் பங்கேற்கும் பல அரச தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதுடன், கடல்சார் நாடுகளுக்கான ஆசிய-பசுபிக் தீவு நாடுகள் கலந்துரையாடலிலும் பங்கெற்கவுள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது

Posted in இலங்கை செய்திகள்

ஐ.நா பொதுச் சபையின் முக்கிய பதவியை ஏற்றுக்கொள்ளும் இலங்கை.!!

ஐ.நா பொதுச் சபையின் முக்கிய பதவியை ஏற்றுக்கொள்ளும் இலங்கை.!!

ஐ.நா பொதுச் சபையின் 78வது கூட்டத் தொடரின் துணைத் தலைவர்களாக ஆசிய-பசிபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த ஈரான், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி 2023 செப்டெம்பர் முதல் 2024 செப்டெம்பர் வரை ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் சார்பாக இலங்கை முக்கியமான பதவியை ஏற்றுக்கொள்கின்றது.

இதன்போது ஆபிரிக்கா சார்பாக காங்கோ, காம்பியா, மொராக்கோ, செனகல், உகாண்டா, சாம்பியாவும் ஆசியா பசிபிக் நாடுகளுக்கு ஈரான், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, உஸ்பெகிஸ்தானும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

ஐ.நா பொதுச் சபையின் முக்கிய பதவியை ஏற்றுக்கொள்ளும் இலங்கை.!!

கிழக்கு ஐரோப்பியாவிற்கு எஸ்டோனியாவும், லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன் தீவுகளுக்கு பொலிவியாவின் ப்ளூரினேஷனல் ஸ்டேட், சுரினாம் போன்ற நாடுகளும் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

ஐ.ந. பொதுச் சபையின் 78வது அமர்விற்கு துணைத் தலைவர்களாக மேற்கு ஐரோப்பிய மற்றும் பிற மாநிலங்களுக்கு ஐஸ்லாந்து, நெதர்லாந்தும் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட துணைத் தலைமை நாடுகள், ஐ.நா.பாதுகாப்பு சபையின் வீட்டோ அதிகாரம் கொண்ட ஐந்து நிரந்தர உறுப்பு சீனா, பிரான்ஸ், ரஷ்யா, பிரித்தானியா மற்றும் அமெரிக்காவுடன் இணைந்து செயற்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No posts found.
Home » ஐ.நா பொதுச் சபை
Home » ஐ.நா பொதுச் சபை