Tag: ஐவர் பாதிப்பு
Posted in இலங்கை செய்திகள்
குளவி கொட்டு ஐவர் பாதிப்பு
Author: நிருபர் காவலன் Published Date: 02/05/2023
குளவி கொட்டு ஐவர் பாதிப்பு
பொகவந்தலாவ எல்பட தமிழ் வித்தியாலய கட்டடத்துக்கு அருகில் உள்ள ஆலமரத்தில் கட்டியிருந்த குளவி கூடு இன்று (02) காலை கலைந்து கொட்டியதில் ஐவர் பாதிப்பு. பாதிக்கப்பட்டவர்களில் மூவர் மாணவர்கள்,
ஏனைய இருவரும் காப்பாற்றச் சென்றவர்கள் என அறியமுகின்றது. குளவி கூடுகள் பல கட்டப்பட்டிருக்கும் அந்த ஆலமரத்தை அடியோடு அறுத்து
தள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும். ஆலமரத்தை அறுத்தால் அது சாமி குற்றமாகிவிடும் என பலரும் அஞ்சுகின்றனர்.













