Tag: எலும்புகூடாக
Posted in இலங்கை செய்திகள்
எலும்புகூடாக காணப்பட்ட சடலம்
Author: நிருபர் காவலன் Published Date: 29/09/2023
எலும்புகூடாக காணப்பட்ட சடலம்
மன்னார் – சிலாவத்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முத்தரிப்புத்துறை கடற்கரை ஓடைப் பகுதியில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்து பல நாட்கள் ஆகி சிதைவடைந்து எலும்புகள் தெரியும் வண்ணம் குறித்த சடலம் காணப்படுகின்றது.
எலும்புகூடாக காணப்பட்ட சடலம்
முத்தரிப்புத்துறை மீனவர்களால் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (29) இந்த சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
கடலுக்குள் வலை பாய்ச்சுவதற்காக சென்ற மீனவர்கள் குறித்த சடலத்தை கண்டுபிடித்துள்ளனர்.
கண்டுபிடிக்கப்பட்ட சடலம் தொடர்பாக சிலாவத்துறை பொலிஸாருக்கு மீனவர்களால் தகவல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது
- கபில சந்திரசேன மரணம் தொடரும் அனுரா படுகொலைகள்by நிருபர் காவலன்
- சலாவ எஸ்டேட்டில் கொள்ளைby நிருபர் காவலன்
- இணையவழித் திருட்டுகள் குறித்த விசாரணைக்கு ஆதரவளிக்க அமெரிக்கா தயார்by நிருபர் காவலன்
- அத்தமஸ்தானத்தின் பிரதம மந்திரி கைதுby நிருபர் காவலன்
- நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்by நிருபர் காவலன்












