Tag: எமனாக வந்த ரயில்
இளம் யுவதிக்கு எமனாக வந்த ரயில்
இளம் யுவதிக்கு எமனாக வந்த ரயில்
கையடக்கத் தொலைபேசியில் பேசிக் கொண்டே புகையிரதத்தில் பயணித்த யுவதி ஒருவர் (19) மாலை 4.30 மணியளவில் புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளதாக திம்புள்ள- பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
ஹட்டன் குடாகம பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் மேகா என்ற (17) வயதுடைய யுவதியே புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளார்.
ஹட்டனிலிருந்து கொட்டகலை நோக்கிப் பயணித்த யுவதி புகையிரதப் பாதையில் கையடக்கத் தொலைபேசியில் பேசிக் கொண்டு வீடு திரும்பிக்
கொண்டிருந்த வேளையில், ஹட்டனுக்கும் கொட்டகலைக்கும் இடையிலான 60 அடி பாலத்திற்கு அருகில் பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் சென்ற 1008 ஆம் இலக்க ரயிலில் யுவதி உயிரிழந்துள்ளார்
இளம் யுவதிக்கு எமனாக வந்த ரயில்
புகையிரதத்தில் உயிரிழந்த யுவதியின் சடலத்தை புகையிரத பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ரயிலில் ஏற்றிவிட்டு மீண்டும் கொட்டகலை நிலையத்திற்கு ரயில் செலுத்தப்பட்டு சடலம் அந்த நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
உயிரிழந்த யுவதியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா-கிளங்கன் ஆரம்ப வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் திம்புள்ள- பத்தனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
- ஒன்பது சீன இணையக் குற்றவாளிகள் கைதுby நிருபர் காவலன்
- பண்டிகைக் காலத்தில் 400-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கைby நிருபர் காவலன்
- தனியார் பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள் மீள் இயக்கம்by நிருபர் காவலன்
- பயணிகளுக்கு அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கைby நிருபர் காவலன்
- விமான நிலையத்தில் சிக்கிய சீன நாட்டவர்by நிருபர் காவலன்












