எனக்கொரு பதில் சொல்லாயோ
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

எனக்கொரு பதில் சொல்லாயோ

எனக்கொரு பதில் சொல்லாயோ

கொஞ்சி பேசும் மொழி தனையே
மனம் கெஞ்சி கேட்க துடிக்குதடி
வஞ்சி உந்தன் பேரழகை – உன்
வளையல் சத்தம் காட்டுதடி

அஞ்சி அஞ்சி பேசி விடும்
அச்ச நாணம் பிடிக்குதடி
கொள்ளை பிரியம் வைத்திடவே
கொடி கூந்தல் அழைக்குதடி

சிந்தி வழியும் புன்னகையில்
சிறைச்சாலை நொறுங்குதடி
வெட்டி பார்க்கும் விழி அசைவில்
வெடி குண்டு வெடிக்குதடி

சாலையில் ஓடும் வண்டிகளை – உன்
சலங்கை சத்தம் ஒதுக்குதடி
உலக போரை தணித்திடவே
உன் உள்ள அமைதி துடிக்குதடி

இத்தனை பேறு கொண்டவளே
இதயம் நுழைந்த மர்மம் என்ன
எத்தனை நாள் எனை தொடர்வாய்
எனக்கொரு பதில் சொல்லாயோ ..?

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 19-10-2024
0044 7536707793