Tag: ஆசிய அபிவிருத்தி வங்கி
இலங்கை வந்தடைந்தார் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர்
இலங்கை வந்தடைந்தார் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர்
இலங்கை வந்தடைந்தார் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசடோ கந்தா, உத்தியோகப்பூர்வ பயணமாக இன்று காலை (23) உத்தியோகப்பூர்வ பயணமாக இலங்கை வந்தடைந்தார்.
நாடு நெருக்கடிக்கு பதிலளிக்கும் நிலையிலிருந்து மீட்சி
நாடு நெருக்கடிக்கு பதிலளிக்கும் நிலையிலிருந்து மீட்சி மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சியை நோக்கி மாறும் ஒரு “முக்கியமான தருணத்தில்” கொழும்பு வந்தடைந்ததாக அவர் குறிப்பிட்டார்.
X (முன்னர் ட்விட்டர்) தளத்தில் பகிரப்பட்ட ஒரு பதிவில், இலங்கையின் தொழிலாளர் அமைச்சரும், நிதி பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த
பெர்னாண்டோவால் விமான நிலையத்தில் தான் அன்புடன் வரவேற்கப்பட்டதாக கந்தா குறிப்பிட்டார்.
அடுத்தகட்ட அபிவிருத்திக்கான முன்னுரிமைகளை நன்கு புரிந்துகொள்வதற்காக, அரசாங்கப் பிரதிநிதிகள், தனியார் துறை மற்றும்
உள்ளூர் சமூகத்தினருடன் கலந்துரையாட இந்த பயணம் ஒரு வாய்ப்பை வழங்குகிறது என்று அவர் வலியுறுத்தினார்.
மேலும், உள்கட்டமைப்பு மற்றும் இணைப்பை வலுப்படுத்துவதன் மூலமும், தனியார் துறை தலைமையிலான வளர்ச்சியைச் சாத்தியமாக்குவதற்காக
முதலீடுகளைத் திரட்டுவதன் மூலமும்
முதலீடுகளைத் திரட்டுவதன் மூலமும், இலங்கையின் இந்த மாற்றத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி தொடர்ந்து ஆதரவளித்து வருவதாக கந்தா எடுத்துரைத்தார்.
இந்த முன்னுரிமைகளை முன்னெடுத்துச் செல்வதற்காக, வரும் நாட்களில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் நெருக்கமாகப் பணியாற்ற ஆவலுடன் இருப்பதாகவும் அவர் கூறினார்.
8 பில்லியனை வழங்கியது ஆசிய அபிவிருத்தி வங்கி
8 பில்லியனை வழங்கியது ஆசிய அபிவிருத்தி வங்கி
ஜனாதிபதியின் வேண்டுகோளின் பேரில் 8 பில்லியன் ரூபாவினை ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, ஒரு ஹெக்டேருக்கு குறைவாக சாகுபடி செய்யும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10,000 ரூபாவும் மற்றும் ஒரு ஹெக்டேருக்கு மேல் சாகுபடி செய்யும் குடும்பங்களுக்கு 20,000 ரூபாவும் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
அடுத்த வாரம் முதல் விவசாயிகளின் கணக்கில் பணம் வைப்பு செய்யப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு 203 மில்லியன் வழங்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி
இலங்கைக்கு 203 மில்லியன் வழங்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி
இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 203 மில்லியன் அமெரிக்கா டொலர்களை கடனாக வழங்குகிறது .
தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ,வாழ்வா தாரத்தில் நெருக்கடியில் சிக்கியுள்ள ஏழை மக்களுக்கு உதவுகிறது .
ஏழை மக்களின் , உணவு மற்றும் அவர் பாதுகாப்பு தொடர்பில், அதிக அக்கறை கொண்டுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கி .
ஏழைகளின் நலன் கருதி , 203 ம்மில்லியன் அமெரிக்கா டொலர்களை கடனாக வழங்குகிறது .
இந்த கடன் வழங்கும் ஒப்பந்தத்தில் ,ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கை கைச்சாத்திட்ட நிலையில் ,இந்த உதவி இலங்கைக்கு வந்தடைகிறது .
கடன் மேல் கடனை வாங்கி ,கடனில் நாட்டை ஒட்டி செல்லும் இலங்கை, வாழ்வியலில் எப்பொழுது மாற்றம் ஏற்பட போகிறது ..?
என்பதே இன்றைய மக்களின் கேள்வியாக உள்ளது.














