Tag: அனுரவின்
அனுரவின் அதிரடிஉத்தரவு களத்தில் முப்படைகள்
அனுரவின் அதிரடிஉத்தரவு களத்தில் முப்படைகள்
அனுரவின் அதிரடிஉத்தரவு களத்தில் முப்படைகள் ,இலங்கை ஜனாதிபதி அனுர குமார திஸநாயக்க மீண்டும் களத்தில் முப்படைகளை இறங்குமாறு அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
நாடு முழுவதும் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக முப்படைகளை அழைக்க ஜனாதிபதி சிறப்பு உத்தரவை பிறப்பித்துள்ளார்.
பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 40வது அத்தியாயத்தின் பிரிவு 12ன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களின்படி அவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார் .
என்று சபாநாயகர் டொக்டர் ஜகத் விக்ரமரத்ன இன்று (03) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
விழுந்து போய் கிடக்கின்ற பொருளாதாரத்தை நிமிர்த்த முடியாது திணறி வருகின்ற ஆளும் அனுரா அரசு .
இராணுவ குவிப்பு
இந்த இராணுவ குவிப்பு கொரோனவை அடையாளம் காட்டுவதன் மூலமும் களத்தில் இறக்கி மக்களை அச்சுறுத்தும் ஒரு நடவடிக்கையாக இதை பயன்படுத்த போகிறதா என்கின்ற பரபரப்பு நிலவுகிறது.
இராணுவ பாதுகாப்பு செலவினத்தையும் இராணுவ படைகளின் எண்ணிக்கையும் குறைத்து வைத்திருந்த அனுரா அரசு ,திடீரென ராணுவத்தை வீதிகளில் இறக்கி பாதுகாப்பு நடவடிக்கை தீவிரப்படுத்துவதில் இருந்து, தமது அரசை தக்கவைத்துக் கொள்வதற்கு நடவடிக்கையாக உள்ள நோக்கமுடிகிறது .
ஆளும் அரசு அதிகாரங்கள் தமது அரசாட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காக ,மக்களை அடக்கி ஆளும் தந்திரோபாயத்தை கையாண்டு வருகிறது.
அவ்விதமான ஒரு நடவடிக்கையின் ஒரு வெளிப்பாட்டு தன்மையாகவே, இந்த இராணுவ குவிப்பும் கொரோனா நோய் பரவல் கதைகள் காணப்படுவதாக பார்க்கப்படுகிறது.
வீதிகள் எங்கும் இராணுவம் போலீசார் குவிப்பு
எதிர்காலத்தில் வீதிகள் எங்கும் இராணுவம் போலீசார் குவிக்கப்பட்டு ,பாதுகாப்பு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு அதனால் மக்கள் கைது செய்யப்படக்கூடிய அபாயம் காணப்படுகிறது.
வரி அதிகரிப்பு காரணமாக பொருட்களின் விலை அதிகரிப்பு ஏறக்கூடும் என்ற நிலையில் அவ்வேளை மக்கள் தன்னெழுச்சியாக ஆளும் அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்துவர்.
விதமான போராட்டங்களை தடுப்பதற்காகவே தற்போது கொரோனா நோய் காட்டி இராணுவத்தை வீதியில் இறக்கும் சந்துருபாய் நடவடிக்கை அனுராசு மேற்கொண்டு வருவதையே இதனூடாக காண முடிகிறது
அப்படி என்றால் விரைவில் அனுரா ஆட்சி கவிழ்க்க பட போவதையும் மக்கள் அவருக்கு எதிராக போராட்டத்தில் குதிக்க போவதையும் இவை எடுத்துக்காட்டுகின்றன.
அனுரவின் ஓய்வூதியம் நிறுத்தம்
அனுரவின் ஓய்வூதியம் நிறுத்தம்
அனுரவின் ஓய்வூதியம் நிறுத்தம் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராகப் பெற்று வந்த ஓய்வூதியம் அடுத்த மாதம் முதல் நிறுத்தப்படும் என்று பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இது குறித்து பாராளுமன்ற நிதி இயக்குநருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
ஒரு ஜனாதிபதி பாராளுமன்ற உறுப்பினராக ஐந்து ஆண்டுகள் நிறைவு செய்திருந்தால், அவர் பாராளுமன்ற ஓய்வூதியத்திற்கு உரிமையுடையவர், மேலும் அவர் ஓய்வு பெற்றவுடன், அவர் ஜனாதிபதி ஓய்வூதியத்திற்கும் உரிமையுடையவர்.
இந்த வழியில் இரண்டு ஓய்வூதியங்களை விரும்பவில்லை என்று அனுர குமார திசாநாயக்க கடந்த 21ஆம் திகதி பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினராகப் பெறும் ஓய்வூதியப் பலன்களை நீக்குவதாக அனுரகுமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் அறிவிப்பதற்கு முன்பு, அவர் பாராளுமன்றச் செயலாளர் நாயகத்திற்கும் கடிதம் மூலம் தகவல் தெரிவித்திருந்தார்.
பாராளுமன்றச் செயலாளர் நாயகம் அந்தக் கடிதத்தை அதன் நிதி இயக்குநருக்கு அனுப்பியுள்ளார்.

















