அதிபர்கள் ஆட்சேர்ப்பு வர்த்தமானியில் திருத்தம்
Posted in இலங்கை செய்திகள்

அதிபர்கள் ஆட்சேர்ப்பு வர்த்தமானியில் திருத்தம்

அதிபர்கள் ஆட்சேர்ப்பு வர்த்தமானி திருத்தம்

அதிபர்கள் ஆட்சேர்ப்பு வர்த்தமானியில் திருத்தம் ரயில் நிலைய அதிபர்கள் ஆட்சேர்ப்பு வர்த்தமானியில் திருத்தம்.

ரயில் நிலைய அதிபர்கள் பதவி

ரயில் நிலைய அதிபர்கள் பதவிகளுக்கான ஆட்சேர்ப்புக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு .

திருத்தத்திற்காக அமைச்சரவைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர், உயர் நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தியுள்ளார்.

குறித்த முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனு மூன்று நீதியர்கள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு முன் அழைக்கப்பட்ட

போது, ​​சிரேஸ்ட அரச சட்டத்தரணி இதனை அறியப்படுத்தியுள்ளதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சிரேஸ்ட அரச சட்டத்தரணி

சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சிரேஸ்ட அரச சட்டத்தரணி நயநதாரா பாலபட்டபெந்தி, குறித்த வர்த்தமானி அறிவிப்பு திருத்தத்திற்காக அமைச்சரவைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த மனுவின் முன்னேற்றம் குறித்து அறிவிக்க மற்றொரு திகதியில் அழைக்கப்பட வேண்டும் என்றும் அரச சட்டத்தரணி கோரினார்.

அதன்படி, குறித்த மனுவை ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு நீதியரசர்கள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.

ரயில் நிலைய அதிபர்கள் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு செய்வதற்காக சமீபத்தில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பில் ஆண்கள் மட்டுமே

பொருத்தமான பதவிக்கு விண்ணப்பிக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் கூறுகின்றனர்.

இதன் ஊடாக தகுதிவாய்ந்த பெண்கள் அந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்கவும் தேர்ந்தெடுக்கப்படவும் உள்ள வாய்ப்பு இழக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதன் ஊடாக தமது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறும், பெண்களும் விண்ணப்பிக்கும் வகையில் குறித்த

வர்த்தமானி அறிவிப்பைத் திருத்துமாறு பிரதிவாதியான ரயில்வே திணைக்களத்திற்கு உத்தரவு பிறப்பிக்குமாறும் மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்திடம், கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிபர்கள் நாளை போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

அதிபர்கள் நாளை போராட்டம்

அதிபர்கள் நாளை போராட்டம்

அதிபர்கள் நாளை போராட்டம் ,ஆசிரியர்கள் அதிபர்கள் நாளை தமது பாடசாலைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர் .

தமது ஊதியத்தை அதிகரிக்குமாறு கேட்டு அவர்கள் இந்த போராட்டத்தை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

நாளை பல்வேறுபட்ட பகுதிகளில் தமது பாடசாலைக்கு முன்பாக ஆசிரியர்கள் அதிபர்கள் தனது போராட்டத்தை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

கல்வி அமைச்சுக்கு எதிராக திரும்பிய அதிபர் ஆசிரியர்கள்

கல்வி அமைச்சுக்கு விடுக்கப்பட்ட வேண்டுதல் தட்டிக்கழிக்கப்பட்டு வருகின்ற நிலையில் ,நமக்கான அனைத்து விடயங்களும் தட்டுக் கழிக்கப்பட்டு காணப்படுவதால் இந்த போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதாக தெரிவித்துள்ளனர் .

போதிய ஆசிரியர்கள் இல்லாத இடத்தை நிரப்புமாறு கூறியதாகவும் ,ஆசிரியர் அவர்களுடைய ஊதியத்தை அதிகரிக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர் .

அதனை அடுத்து தற்போது இந்த போராட்டம் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிரந்தரமான தீர்வுகளை தமக்கு ஏற்படுத்தி தருமாறும் எமது மாணவர் செல்வங்கள் உரிய முறையில் கல்வி கற்பதற்கு ஏற்ற வழிமுறைகளை செய்து தரும்படியும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சம்பளத்தினை அரசாங்கம் வெட்டுவதாக குற்றசாட்டு

சம்பளத்தினை அரசாங்கம் வெட்டுவதாகவும் , ஆசிரியருடைய ஊதியத்தில் ஒரு பகுதியை கல்வி திணைக்களம் பிடித்து வைப்பதாகவும் ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது .

தற்பொழுது தேர்தலுடன் இடம்பெற உள்ள நிலையில் பாரிய பொருட்களின் விலைகள் குறைப்பு இடம்பெற்று வருகின்ற நிலையில், மக்கள் தமது போராட்டங்களையும் தீவிர படுத்தியுள்ளன.

இந்த போராட்டங்களின் பின்புலத்தில் எதிர்கட்சிகளுடைய சூழ்ச்சிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை ஆளும் ரணில் விக்கிரம சிங்காவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் ஒரு போராட்டமாகவே பார்க்கப்படுகின்றது.