Posted in சினிமா முக்கிய செய்திகள்

அரசியல் கட்சி தொடங்கிய விஜய் – சூடாகும் தமிழகம்

அரசியல் கட்சி தொடங்கிய விஜய் – சூடாகும் தமிழகம்

இளையதளபதி நடிகர் விஜய் அவரது பெயரில் அவரது தந்தை

சந்திரசேகர் புதிய அரைசியல் கட்சி ஒன்றை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார்

ரஜனி ,கமல் ,விஷால் ,என பலர் காட்சிகளை தொடங்கிய நிலையில்

விஜய் இதே ஆடு களத்தில் இப்பொழுது குதித்திருப்பது பெரும் பர பரப்பை கிளப்பியுள்ளது

ரஜனி ,கமல் சீமானுக்கு எதிராக விஜய் களத்தில் ,அரசியலுக்கு நுழைந்ததினால்

அவரது திரைப்பயணம் பாதிக்குமா ..? காணாமல் போவாரா எதிர்காலம் தான் அந்த பதிலை சொல்ல வேண்டும்

Posted in சினிமா

விஜய் சேதுபதி பட இயக்குனருக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர்

விஜய் சேதுபதி பட இயக்குனருக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர்

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்த படத்தின் இயக்குனருக்கு தயாரிப்பாளர் கார் பரிசளித்துள்ளார்.

விஜய் சேதுபதி பட இயக்குனருக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர்
இயக்குனர் விருமாண்டி


விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த அக்டோபர் மாதம் வெளியான திரைப்படம் க/பெ ரணசிங்கம். இதில் விஜய் சேதுபதியுடன்

ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து இருந்தார்கள்.

ஓடிடி தளத்தில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இயக்குனர் விருமாண்டி

இந்த மகிழ்ச்சியின் வெளிப்பாடாக படத்தின் தயாரிப்பாளர் கே ஜே ராஜேஷ், இயக்குனர் பெ.விருமாண்டிக்கு கார் ஒன்றை பரிசாக

அளித்துள்ளார். இதன் புகைப்படங்கள் தற்போது வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் சேதுபதி பட இயக்குனருக்கு
விஜய் சேதுபதி பட இயக்குனருக்கு
Posted in சினிமா

பிக்பாஸ் வீட்டுக்கு செல்லும் மேலும் ஒரு பிரபலம்… யார் தெரியுமா?

பிக்பாஸ் வீட்டுக்கு செல்லும் மேலும் ஒரு பிரபலம்… யார் தெரியுமா?

கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனா சுசித்ராவை தொடர்ந்து மேலும் ஒரு பிரபல நடிகர் செல்ல இருக்கிறார்.

பிக்பாஸ் வீட்டுக்கு செல்லும் மேலும் ஒரு பிரபலம்… யார் தெரியுமா?
கமல்
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் ஆரி, சனம் ஷெட்டி, சம்யுக்தா, பாலாஜி, சுரேஷ் சக்ரவர்த்தி, சோம் சேகர், ரியோ, அனிதா சம்பத், ஷிவானி, ஆஜீத், ரம்யா

பாண்டியன், நிஷா, ஜித்தன் ரமேஷ், ரேகா, வேல் முருகன், கேபிரில்லா உள்ளிட்ட 16 பேருடன் தொடங்கப்பட்டது.

வைல்ட் கார்ட் என்ட்ரியாக அர்ச்சனாவும், பாடகி சுசித்ராவும் இணைந்துள்ளனர். இதில் நடிகை ரேகா, வேல்முருகன் ஆகியோர்

வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில் மேலும் ஒரு பிரபல நடிகர் வீட்டுக்குச் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆசிம்

சின்னத்திரை நடிகரான ஆசிம் அடுத்ததாக பிக்பாஸ் வீட்டுக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் ஆசிம்

பகல் நிலவு உள்ளிட்ட சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். இந்த தொடரில் ஷிவானிக்கு ஜோடியாக ஆசிம் நடித்திருந்தார்.

Posted in சினிமா

சதீஷ் – சிந்து தம்பதியினருக்கு குழந்தை பிறந்தது.

சதீஷ் – சிந்து தம்பதியினருக்கு குழந்தை பிறந்தது.

பிரபல நகைச்சுவை நடிகை சதீஷ் – சிந்து தம்பதியினருக்கு குழந்தை பிறந்துள்ளது.

பிரபல நகைச்சுவை நடிகர் சதீஷ். இவர் மெரினா, தமிழ் படம், மதராச பட்டணம், வாகை சூடவா, தாண்டவம், எதிர்நீச்சல், கத்தி,

மான்கராத்தே, ரெமோ, வேலைக்காரன், மிஸ்டர் லோக்கல், கலகலப்பு-2, சிக்ஸர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

சதீசுக்கும், வைபவ் நடித்த சிக்ஸர் படத்தின் இயக்குனர் சாக்சியின் தங்கை சிந்துவுக்கும் கடந்த டிசம்பர் மாதம் திருமணம்

நடைபெற்றது. இவர்கள் திருமணத்தில் ஏராளமான நடிகர் நடிகைகள் கலந்து கொண்டனர்.

சதீஷின் பதிவு

இந்நிலையில் நடிகர் சதீஷ்-சிந்து தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதை நடிகர் சதீஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

Posted in சினிமா

விபத்தில் உயிர் தப்பிய விஜய் ஜேசுதாஸ்

விபத்தில் உயிர் தப்பிய விஜய் ஜேசுதாஸ்

பிரபல பின்னணி பாடகரான விஜய் ஜேசுதாஸ் கார் விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி இருக்கிறார்.

விபத்தில் உயிர் தப்பிய விஜய் ஜேசுதாஸ்
விஜய் ஜேசுதாஸ்


பிரபல பின்னணி பாடகரான ஜேசுதாசின் மகன் விஜய் ஜேசுதாஸ். இவர் இரவு 10 மணியளவில் திருவனந்தபுரத்தில் இருந்து கொச்சிக்கு

காரில் சென்றார். தரவூர் அருகே வந்தபோது எதிரே வந்த கார் மீது விஜய் ஜேசுதாஸ் சென்ற கார் மீது மோதியது.

விஜய் ஜேசுதாஸ்

இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போன்று நொறுங்கியது. எனினும் காருக்குள் இருந்த விஜய் ஜேசுதாஸ் அதிர்ஷ்டவசமாக

உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விஜய் ஜேசுதாஸ்
விஜய் ஜேசுதாஸ்
Posted in சினிமா

கேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த கனிகா

கேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த கனிகா

தமிழில் பைவ் ஸ்டார் படம் மூலம் அறிமுகமான நடிகை கனிகா உருவ கேலி செய்பவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

கேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த கனிகா
கனிகா
‘பைவ் ஸ்டார்’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்

அறிமுகமானவர் கனிகா. அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம்

வந்தார். டப்பிங் கலைஞராகவும், பாடகியாகவும் கனிகா பணிபுரிந்துள்ளார்.

2008-ம் ஆண்டு ஷ்யாம் ராதாகிருஷ்ணன் என்ற பொறியாளரைத் திருமணம் செய்து அமெரிக்காவில் குடியேறினார் கனிகா. இருவருக்கும் ஒரு மகன் இருக்கிறார். குழந்தைப் பிறந்த பிறகும்

திரையுலகில் கவனம் செலுத்தி வருகிறார் கனிகா. அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடலமைப்பு, உடற்பயிற்சி உள்ளிட்டவை குறித்து கருத்துகள் தெரிவித்து வருபவர் கனிகா.

தற்போது, அவருடைய பழைய புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து கனிகா கூறியிருப்பதாவது: “உங்களில் பலரைப் போல நானும் எனது பழைய புகைப்படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

நான் எவ்வளவு ஒல்லியாக இருந்தேன், வயிறு எவ்வளவு தட்டையாக, தலைமுடி எவ்வளவு அழகாக இருந்தது என்பது போல சொல்லிக் கொண்டிருந்தேன். திடீரென ஒரு விஷயத்தை உணர்ந்தேன்.

நான் ஏன் அப்படிச் செய்தேன்? இப்போது எனது தோற்றம் எனக்குப் பிடிக்கவில்லை என்பதாலா? கண்டிப்பாக இல்லை. ஏன் முன்னெப்போதையும் விட இப்போதுதான் என்னை நான் அதிகமாக நேசிக்கிறேன்.

கனிகா

அந்தத் தழும்புகள், அடையாளங்கள், பிழைகள் எல்லாவற்றுக்கும் ஒரு அழகான கதை இருப்பதாக நான் நம்புகிறேன். எல்லாமே கச்சிதமாக இருந்துவிட்டால் அதில் என்ன சுவாரசியம்

இருந்துவிடப்போகிறது? நம்மை ஏற்றுக்கொண்டு நம் உடலை விரும்புவது மிக மிக முக்கியமானது. உங்களை மற்றவர்களுடன்

ஒப்பிடுவதை நிறுத்துங்கள். அனைவரின் கதைகளும் வித்தியாசமானது.

தயவு செய்து உங்களைக் குறைவாக நினைப்பதை நிறுத்துங்கள். உங்கள் உடலை நேசியுங்கள். யாராவது உங்கள் உருவத்தைக்

கிண்டல் செய்தால் அவர்களை வாயடைக்கச் செய்துவிட்டு விலகிச் செல்லுங்கள்” இவ்வாறு கனிகா தெரிவித்துள்ளார்.

Posted in சினிமா

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் – அமீர்கான் மகள்

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் – அமீர்கான் மகள்

தனது 14 வயதில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக நடிகர் அமீர் கானின் மகள் ஐரா கான் கூறியுள்ளார்.

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் – அமீர்கான் மகள்
அமீர் கான் – ஐரா கான்


நடிகர் அமீர் கானுக்கும், முதல் மனைவி ரீனாவுக்கும் பிறந்தவர் ஐரா கான். இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்

பகிர்ந்துள்ள வீடியோவில் தனது பெற்றோரின் விவாகரத்து குறித்தும், தனக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல் குறித்தும் பேசியுள்ளார்.

“என் சிறு வயதில் என் பெற்றோர் விவாகரத்து செய்து கொண்டனர். அதனால் நான் அதிர்ச்சிக்குள்ளாகவில்லை. ஏனென்றால்

இணக்கமான முறையில் விவாகரத்து நடந்தது. அவர்கள் இன்னும் நண்பர்களே. ஒட்டுமொத்தக் குடும்பமும் அப்படித்தான். எங்கள் குடும்பம் உடைந்துவிடவில்லை.

எனக்கு 14 வயதாக இருந்தபோது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன். அந்த நேரத்தில் சூழல் சற்று வித்தியாசமாக இருந்தது.

ஏனென்றால் அந்த நபர் என்ன செய்கிறார், அதைத் தெரிந்துதான் செய்கிறாரா என்பது குறித்து எனக்குத் தெரியவில்லை. அது

தினமும் நடக்கவில்லை. அதனால் என்ன நடந்தது என்பதைப் புரிந்துகொள்ளவே எனக்கு ஒரு வருடம் ஆனது.

அமீர் கான்

எனது பெற்றோர் என்னை அந்தச் சூழலிலிருந்து மீட்டனர். அதிலிருந்து வெளியே வந்த பின் நான் மோசமாக உணரவில்லை. பயப்படவில்லை. எனக்கு அதன்பிறகு அப்படி எதுவும்

நடக்கவில்லை, முடிந்துவிட்டது என்று நான் கடந்து வந்துவிட்டேன். யாரிடமும் இதுகுறித்து நான் பேசவில்லை.

ஏனென்றால் நானே அதைக் கையாள வேண்டும் என்று நினைத்தேன். மேலும், எனது உணர்வுகளை வைத்து மற்றவர்களைத்

தொந்தரவு செய்யக் கூடாது என்று நினைத்தேன். எந்தப் பிரச்சினையுமே நீண்ட நாட்கள் நாம் சிந்திக்கும் அளவு பெரியதல்ல” என்று ஐரா கூறியுள்ளார்.

Posted in சினிமா

Sethu போனது என் Life-ல எனக்கு மிகப்பெரிய இழப்பு video

Sethu போனது என் Life-ல எனக்கு மிகப்பெரிய இழப்பு video

அவர் குடும்பத்தில் இவ்வளவு சிறிய வயதில் இறந்து மிகப்பெரிய

இழப்பு அவர்கள் குடும்பத்திற்கு , ஆழ்ந்த இரங்கல்.

https://www.youtube.com/watch?v=ZxjCQpR6fFI
Posted in சினிமா

பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற பிரபல பாடகி – ‘அய்யோ இவரா’ என ஷாக்கான போட்டியாளர்கள்

பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற பிரபல பாடகி – ‘அய்யோ இவரா’ என ஷாக்கான போட்டியாளர்கள்

கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் பிரபல பாடகி ஒருவர் 2-வது வைல்ட் கார்ட் என்ட்ரியாக சென்றுள்ளார்.

பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற பிரபல பாடகி – ‘அய்யோ இவரா’ என
கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த அக்டோபர் 4-ந் தேதி தொடங்கியது. இந்த சீசனில்

போட்டியாளர்களாக, ரியோ, சனம் ஷெட்டி, ரேகா, பாலா, அனிதா சம்பத், ஷிவானி, ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல் முருகன், ஆரி அர்ஜுனன், சோம் சேகர், கேப்ரில்லா, அறந்தாங்கி நிஷா, ரம்யா

பாண்டியன், சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாடகர் ஆஜித் ஆகிய 16 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

இதனிடையே முதல் வைல்ட் கார்ட் என்ட்ரியாக தொகுப்பாளினி அர்ச்சனா பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார். இதுவரை ரேகா மட்டும் வெளியேற்றப்பட்டுள்ளார்.

சுசித்ரா

இந்நிலையில், 2-வது வைல்ட் கார்ட் என்ட்ரியாக பிரபல பாடகி சுசித்ரா, பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளார். சுசித்ராவின்

என்ட்ரியை பார்த்து சில போட்டியாளர்கள் சந்தோஷப்பட்டாலும், பலர் ஷாக் ஆகினர். பாடகி சுசித்ரா கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் பிரபலங்களின் அந்தரங்கப்

புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in சினிமா

3 வயதில் பாலியல் தொல்லைக்கு ஆளானேன்: கமல் பட நடிகை

3 வயதில் பாலியல் தொல்லைக்கு ஆளானேன்: கமல் பட நடிகை

கமல் பட நடிகை ஒருவர் தான் 3 வயதில் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகையான பாத்திமா சனா ஷேக், அமீர்கானின் தங்கல் படம் மூலம் பிரபலமானார். இவர் தமிழில்

வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற அவ்வை சண்முகி படத்தின் இந்தி ரீமேக்கான சாக்சி 420 படத்தில் கமலின் மகளாக நடித்தவர். .

இந்நிலையில், படவாய்ப்புகளுக்காக படுக்கைக்கு வரச் சொல்லி திரையுலகைச் சேர்ந்தவர்கள் தன்னைக் கட்டாயப்படுத்தியதாக பேட்டி ஒன்றில் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.

மேலும் அப்பேட்டியில் அவர் கூறியதாவது: “3 வயதில் பாலியல் தொல்லைக்கு ஆளானேன். எப்போதுமே பாதிக்கப்பட்டவர்கள் அது

குறித்து பேசுவது இல்லை. ஆனால் தற்போது இந்த உலகம் மாறும் என நம்புகிறேன். பாலியல் சீண்டல்கள் குறித்து தற்போது அதிகம்

விழிப்புணர்வு உள்ளது. பட வாய்ப்புக்காக படுக்கைக்கு வரச் சொல்லிய பிரச்சனையை நானும் சந்தித்துள்ளேன்.

பாத்திமா சனா ஷேக்

பாலியல் உறவு வைத்துக் கொண்டால் மட்டுமே பட வாய்ப்பு தருவோம் என்று என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். படுக்கைக்கு

செல்ல மறுத்ததால் பல முறை பட வாய்ப்புகளை இழந்திருக்கிறேன். மேலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமான பிறகு சிலர் பரிந்துரை

செய்ததால் எனக்கு பதில் வேறு ஒரு நடிகையை நடிக்க வைத்ததும் நடந்திருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார். பாத்திமா சனா ஷேக்கின் இந்தப் பேட்டி பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Posted in சினிமா

பிக்பாஸ் 4-ல் இந்த வாரம் எலிமினேட் ஆனது யார் தெரியுமா?

பிக்பாஸ் 4-ல் இந்த வாரம் எலிமினேட் ஆனது யார் தெரியுமா?

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் எலிமினேட் ஆனது யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் 4-ல் இந்த வாரம் எலிமினேட் ஆனது யார் தெரியுமா?
பிக்பாஸ் 4 போட்டியாளர்கள்


தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த அக்டோபர் மாதம் 4-ம் தேதி தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன்

தொகுத்து வழங்குகிறார். 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் இதுவரை அர்ச்சனா, சுசித்ரா ஆகிய இரண்டு பேர் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே சென்றுள்ளனர்.

ஒவ்வொரு வாரமும் மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் குறைந்த வாக்குகளை பெற்ற போட்டியாளர் வெளியேற்றப்படுவார்

. அந்தவகையில் இந்த சீசனில் இதுவரை ரேகா மட்டும் வெளியேற்றப்பட்டுள்ளார். இந்த வாரம் வெளியேற்றப்படுவோர்

பட்டியலில் 11 பேர் இடம்பெற்று இருந்தனர். அவர்களில் 6 பேர் காப்பாற்றப்பட்டுவிட்டனர்.

வேல்முருகன்

மீதமுள்ள ஆஜித், வேல்முருகன், நிஷா, சோம் சேகர், சுரேஷ் ஆகிய ஐந்து பேரில் இருந்து ஒருவர் வெளியேற்றப்படுவார். அந்தவகையில்,

இன்று வெளியான புரோமோவில் வேல்முருகனை தவிர்த்து அனைவரும் வீட்டில் இருப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.

இதன்மூலம் வேல்முருகன் எலிமினேட் ஆனது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.

Posted in சினிமா

மறைந்த நண்பனின் மருத்துவமனையை திறந்து வைத்த சந்தானம்.

மறைந்த நண்பனின் மருத்துவமனையை திறந்து வைத்த சந்தானம்.

மறைந்த டாக்டரும், நடிகருமான சேதுராமன் கட்டிய மருத்துவமனையை நடிகர் சந்தானம் திறந்து வைத்துள்ளார்.

மறைந்த நண்பனின் மருத்துவமனையை திறந்து வைத்த சந்தானம்
சேதுராமனின் கட் அவுட் அருகே சந்தானம்


தமிழில் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ ‘வாலிராஜா’ ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தவர் டாக்டர் சேதுராமன்.

இவர் கடந்த மார்ச் மாதம் மாரடைப்பால் திடீரென மரணமடைந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

36 வயதே ஆன சேதுராமனுக்கு உமா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

சேதுராமன் உயிருடன் இருக்கும் போது ஈ.சி.ஆர் சாலையில் மருத்துவமனை ஒன்றை கட்டி வந்ததாகக் தெரிகிறது.

அந்த மருத்துவமனையின் பணிகள் அண்மையில் முடிவடைந்தது. இந்நிலையில், சேதுராமனின் பிறந்ததினமான இன்று அந்த

மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையை சேதுராமனின் நெருங்கிய நண்பரும், நடிகருமான சந்தானம் திறந்து வைத்துள்ளார்.

திறப்பு விழாவின் போது சேதுராமனின் ஆளுயர கட் அவுட் அருகே நின்று எடுத்த புகைப்படத்தை, சந்தானம் தனது சமூக வலைத்தள

பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நட்பின் அடையாளமாக மறைந்த தனது நண்பரின் மருத்துவமனையை துவக்கி வைத்த சந்தானத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Posted in சினிமா

காதலில் விழுந்தது எப்படி? காஜல் அகர்வால் பற்றி நிஷா அகர்வால்

காதலில் விழுந்தது எப்படி? காஜல் அகர்வால் பற்றி நிஷா அகர்வால்

முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் காதலில் விழுந்தது எப்படி என்று அவரது தங்கை நிஷா அகர்வால் கூறியுள்ளார்.

காதலில் விழுந்தது எப்படி? காஜல் அகர்வால் பற்றி நிஷா அகர்வால்
காஜல் அகர்வால் – நிஷா அகர்வால்


காஜல் அகர்வாலுக்கும், தொழில் அதிபர் கவுதம் கிட்ச்லுவுக்கும் நாளை மும்பையில் திருமணம் நடக்கவிருக்கிறது. கொரோனா

வைரஸ் பிரச்சனை இன்னும் தீராததால் திருமணத்தை பிரமாண்டமாக நடத்தாமல் வீட்டிலேயே நடத்துகிறார்கள். காஜலும்,

கவுதம் கிட்ச்லுவும் கடந்த சில ஆண்டுகளாகவே காதலித்து வந்தனர். இந்நிலையில் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்கள்.

காஜல், கவுதமை எங்கு சந்தித்தார், எப்படி காதல் ஏற்பட்டது, யார் காதலை முதலில் சொன்னது என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள்

ஆவலாக இருக்கிறார்கள். திருமணத்தில் இரு வீட்டாரும், நண்பர்கள் ஒரு சிலர் மட்டுமே பங்கேற்கவிருக்கிறார்கள். காஜலின் உறவினர்கள் ஏற்கனவே அவர் வீட்டிற்கு வரத் துவங்கிவிட்டனர்.

இந்நிலையில் இது குறித்து காஜலின் தங்கை நிஷா அகர்வால் கூறியதாவது, கொரோனா பிரச்சினையால் நாங்கள் திருமணத்தை

எளிமையாக நடத்துகிறோம். ஹல்தி மற்றும் மெகந்தி சடங்குகள் வீட்டிலேயே நடக்கும். இரண்டுமே இன்று நடக்கிறது. காஜலை

நினைத்து நாங்கள் அனைவரும் சந்தோஷத்தில் இருக்கிறோம். அவர் புது வாழ்க்கையை தொடங்குவது மகிழ்ச்சியாக இருக்கிறது.

காஜல் அகர்வால்

காஜலின் திருமணத்தை பார்க்கத் தான் என் தந்தை பல காலமாக காத்துக் கொண்டிருந்தார். அதனால் இது எங்கள் அனைவருக்கும்

முக்கியமான தருணம். விரைவில் காஜல் திருமணம் செய்து கொண்டு புகுந்த வீட்டிற்கு சென்றுவிடுவார் என்பதால்

கவலையாகவும் இருக்கிறது. அதனால் எங்களால் முடிந்த அளவுக்கு காஜலுடன் நேரம் செலவிட்டுக் கொண்டிருக்கிறோம்.

மணமகள் என்பதால் அனைவரும் காஜலுடன் நேரம் செலவிட விரும்புகிறார்கள். அதனால் என்னால் அக்காவுடன் அதிக நேரம் இருக்க முடியவில்லை. நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள்

மட்டுமே திருமணத்தில் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். திருமண நாள் அன்றே சங்கீத் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம்.

அதனால் அன்று ஆட்டம், பாட்டம் என்று செமயாக இருக்கும். கவுதம் நல்லவர். அவரை எங்கள் குடும்பத்திற்கு வரவேற்பதில் மகிழ்ச்சி

அடைகிறேன். அவர்களின் காதல் கதையை நான் சொல்ல மாட்டேன். அதை காஜல் தான் இந்த உலகத்திற்கு சொல்ல வேண்டும்’ இவ்வாறு அவர் கூறியுள்ளார்

Posted in சினிமா

வலிமை’க்காக உடல் எடையை குறைத்த அஜித்….. ‘தல’யா இது என ரசிகர்கள் வியப்பு

வலிமை’க்காக உடல் எடையை குறைத்த அஜித்….. ‘தல’யா இது என ரசிகர்கள் வியப்பு

வலிமை படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் அஜித், ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

‘வலிமை’க்காக உடல் எடையை குறைத்த அஜித்….. ‘தல’யா இது என ரசிகர்கள் வியப்பு
அஜித்


நடிகர் அஜித்தின் 60-வது படம் வலிமை. ஹெச்.வினோத் இயக்கும் இப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். அதிரடி ஆக்‌ஷன் படமாக

இது தயாராகி வருகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 6 மாதமாக தடைபட்டிருந்த இதன் படப்பிடிப்பு கடந்த மாதம்

சென்னையில் மீண்டும் தொடங்கியது. இதில் அஜித் தவிர்த்து இதர நடிகர்கள் பங்கேற்கும் காட்சிகள் படமாக்கப்பட்டது.

ரசிகருடன் அஜித்

இந்நிலையில், தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வரும் வலிமை படத்தின் படப்பிடிப்பில் நடிகர் அஜித் கலந்து கொண்டுள்ளார்.

அப்போது ரசிகர்களுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அஜித்

மெலிந்த தோற்றத்தில் உள்ளார். இந்த லாக்டவுன் சமயத்தில் வீட்டில் இருந்தவாரே தீவிரமாக உடற்பயிற்சி செய்து அஜித் உடல் எடையை குறைத்ததாக கூறப்படுகிறது.

Posted in சினிமா

ஓட்டலில் இருந்து அலறி ஓடிய சுசித்ரா

ஓட்டலில் இருந்து அலறி ஓடிய சுசித்ரா

பிரபல பின்னணிப் பாடகியும் நடிகையுமான சுசித்ரா தான்

தங்கியிருந்த ஓட்டலில் இருந்து அலறியடித்து ஓடியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஓட்டலில் இருந்து அலறி ஓடிய சுசித்ரா?
சுசித்ரா


கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த அக்டோபர் 4-ந் தேதி தொடங்கியது. இந்த சீசனில்

போட்டியாளர்களாக, ரியோ, சனம் ஷெட்டி, ரேகா, பாலா, அனிதா சம்பத், ஷிவானி, ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல் முருகன், ஆரி

அர்ஜுனன், சோம் சேகர், கேப்ரில்லா, அறந்தாங்கி நிஷா, ரம்யா பாண்டியன், சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாடகர் ஆஜித் ஆகிய 16

பேர் கலந்து கொண்டுள்ளனர். இதனிடையே வைல்ட் கார்ட் என்ட்ரியாக தொகுப்பாளினி அர்ச்சனா கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார்.

அடுத்த வைல்ட் கார்ட் என்ட்ரியாக பாடகி சுசித்ரா பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுசித்ரா

இந்நிலையில் அவர் ஒரு தனியார் ஹோட்டலில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளார். இதனையடுத்து தற்போது ஒரு பரபரப்பான

செய்தி வைரலாகி வருகிறது. அதாவது பாடகி சுசித்ரா ஹோட்டல் அறையில் இருந்து தன்னை யாரோ கொலை செய்ய வருவதாக,

கத்திக்கொண்டே வரவேற்பறைக்கு ஓடியதாகவும், அவரது அறை கதவை

சிலர் தட்டியதாகவும் அருகில் இருந்தவர்கள் அதை பார்த்ததாகவும் ஒரு செய்தி உலா வருகிறது.

Posted in சினிமா

விவேக்கா இது..? ஷாக்கான ரசிகர்கள்

விவேக்கா இது..? ஷாக்கான ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவரான

விவேக்கின் சால்ட் அண்ட் பெப்பர் லுக் போட்டோஷூட் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் விவேக். காமெடி

நடிகர் மட்டுமில்லாமல் குணசித்திர கதாபாத்திரத்திலும் நடித்து அசத்தி இருக்கிறார்.

கருத்தோடு காமெடி சொல்லும் இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

மேலும் தமிழ் சினிமாவில் சின்ன கலைவாணர் என்ற அழைக்கப்பட்டு வருகிறார்.

இந்நிலையில், நடிகர் விவேக் போட்டோஷூட் ஒன்றை எடுத்துள்ளார்.

வெள்ளை நிற உடையில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் ஸ்டைலிஷாக

இருக்கும் விவேக்கின் இந்த போட்டோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

விவேக்கின் புதிய தோற்றம்

என்னுடைய இந்த தோற்றத்திற்கு முழு காரணம் காஸ்ட்யூம் ஸ்டைலிஷ்

சத்யாவும், அவர் குழுவும் தான் காரணம் என்று கூறி அவர்களுக்கு நன்றி கூறியிருக்கிறார் விவேக்.

Posted in சினிமா

காதலனுடன் கொஞ்சி விளையாடும் நடிகை

தமிழில் சேவல் படம் மூலம் அறிமுகமான பூனம் பாஜ்வா, காதலருடன்

நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருக்கிறார்.

காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட
தமிழ் சினிமாவில் சேவல், தெனாவட்டு, துரோகி, அரண்மனை 2,

குப்பத்து ராஜா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பூனம் பாஜ்வா. இவர் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

படம் வாய்ப்பு அதிகம் இல்லாததால் சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். தற்போது பூனம் பாஜ்வா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது

வாழ்க்கைத்துணை குறித்து பதிவிட்டுள்ளார். சுனில் ரெட்டி எனும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை பதிவிட்டுள்ள பூனம், அவருடனான காதல் குறித்து மனம் திறந்துள்ளார்.

காதலருடன் பூனம் பாஜ்வா

மேலும் இருவரும் நெருக்கமாக எடுத்து கொண்ட புகைப்படங்களையும் அவர் பதிவிட்டுள்ளார். இந்த

புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பாஜ்வாவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

காதலனுடன் கொஞ்சி
காதலனுடன் கொஞ்சி
Posted in சினிமா

தளபதி 65 படத்தில் இருந்து ஏ.ஆர்.முருகதாஸ் விலகல்

தளபதி 65 படத்தில் இருந்து ஏ.ஆர்.முருகதாஸ் விலகல்

தளபதி 65 படத்தில் இருந்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் விலகி உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

தளபதி 65 படத்தில் இருந்து ஏ.ஆர்.முருகதாஸ் விலகல்?
விஜய், ஏ.ஆர்.முருகதாஸ்


விஜய் நடிப்பில் தற்போது மாஸ்டர் திரைப்படம் உருவாகி உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் ரிலீசுக்காக

காத்திருக்கிறது. இதனிடையே விஜய்யின் 65-வது படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்குநாள் அதிகரித்த

வண்ணம் உள்ளது. அந்த வகையில், விஜய்யின் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

முருகதாஸ் அப்படத்தை இயக்க உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தளபதி 65 படத்தில்

இருந்து விலகி உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் சொன்ன கதை விஜய்க்கு

பிடித்திருந்தாலும், தயாரிப்பு தரப்பு சில மாற்றங்களை செய்ய சொன்னதாம்.

அதில் ஏ.ஆர்.முருகதாஸுக்கு உடன்பாடு இல்லாததால் அவர் அப்படத்திலிருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது.

ஏ.ஆர்.முருகதாஸ்

விஜய்யை வைத்து துப்பாக்கி, கத்தி, சர்கார் என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ் தளபதி 65 படத்திலிருந்து

விலகி உள்ளதாக கூறப்படுவதால் ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர். சிலரோ இது வெறும் வதந்தியாக இருக்கும் என கூறி வருகின்றனர்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் தான் எது உண்மை என்பது தெரியவரும்.

Posted in சினிமா

ஹாலிவுட் நடிகர் அர்னால்டுக்கு இதய அறுவை சிகிச்சை

ஹாலிவுட் நடிகர் அர்னால்டுக்கு இதய அறுவை சிகிச்சை.

பிரபல ஹாலிவுட் நடிகரான அர்னால்டு, தான் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும், தற்போது நலமுடன் இருப்பதாகவும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஹாலிவுட் நடிகர் அர்னால்டுக்கு இதய அறுவை சிகிச்சை – நலமுடன் இருப்பதாக டுவிட்


அர்னால்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது எடுத்த புகைப்படம்


நுரையீரல் வால்வை மாற்றுவதற்காக கடந்த 2018 ஆம் ஆண்டில் அர்னால்டுக்கு முதல் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இந்நிலையில், அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர், தான் இரண்டாவது இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும், தற்போது நலமுடன் இருப்பதாகவும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள டுவிட்டில், மருத்துவ குழுவுக்கு நன்றி. நான் தற்போது அருமையாக உணர்கிறேன். ஏற்கனவே

கிளீவ்லேண்டின் தெருக்களில் உள்ள அற்புதமான சிலைகளை கண்டுகளித்தவாறு

நடைபயிற்சி செய்தேன். எனக்கு சேவை செய்த செவிலியர்களுக்கும் மருத்துவர்களுக்கும் நன்றி” என கூறி உள்ளார்.

அர்னால்டின் டுவிட்டர் பதிவு

மேலும் தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது எடுக்கப்பட்ட

புகைப்படத்தையும், நடைபயிற்சி செய்த போது எடுத்த புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

Posted in சினிமா

நயன்தாராவுக்காக மகேஷ் பாபு செய்யும் உதவி

நயன்தாராவுக்காக மகேஷ் பாபு செய்யும் உதவி

தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் மகேஷ் பாபு, நயன்தாராவின் படத்துக்காக உதவி செய்ய உள்ளாராம்.

நயன்தாராவுக்காக மகேஷ் பாபு செய்யும் உதவி
மகேஷ் பாபு, நயன்தாரா


நடிகை நயன்தாரா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மூக்குத்தி

அம்மன்’. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ள ஆர்.ஜே.பாலாஜி, இயக்குனர் என்.ஜே.சரவணனுடன்

இணைந்து இயக்கி உள்ளார். வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில்

ஐசரி கே.கணேஷ் தயாரித்து இருக்கும் இப்படம் வருகிற தீபாவளி பண்டிகையன்று ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

நயன்தாரா, ஆர்.ஜே.பாலாஜி

இப்படத்தின் டிரெய்லர் தமிழ் மற்றும் தெலுங்கில் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,

இப்படத்தின் தெலுங்கு டிரெய்லரை வெளியிடப்போவது யார் என்ற தகவலை ஆர்.ஜே.பாலாஜி வெளியிட்டுள்ளார்.

அதன்படி பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு டிரெய்லரை வெளியிட உள்ளார்.

இதன் தமிழ் டிரெய்லர் நாளை நடைபெறும் ஐபிஎல் போட்டியின் இடையில் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது