Posted in இலங்கை செய்திகள்

இலங்கைக்கு -ஜேர்மன் அரசாங்கம் 11 மில்லியன் யூரோ தொழில்நுட்ப நிதி உதவி

இலங்கைக்கு -ஜேர்மன் அரசாங்கம் 11 மில்லியன் யூரோ தொழில்நுட்ப நிதி உதவி

ஜேர்மன் அரசாங்கத்திடமிருந்து 11 மில்லியன் யூரோ தொழில்நுட்ப நிதி உதவியை பெற்றுக்கொள்வதற்காக இலங்கை

அரசாங்கத்தினால் கீழ் கண்ட திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக இன்று உடன்படிக்கை செய்துக்கொள்ளப்பட்டுள்ளது.

1 . தொழில் பயிற்சித் திட்டம் – 7 மில்லியன் யூரோ இளைஞர்களுக்காக அவர்களின் கோரிக்கைக்கு அடிப்படையிலான

தொழில் பயிற்சியை வழங்குவதே இந்த திட்டத்தின் எதிர்பார்ப்பாகும்.

2 . சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறை அபிவிருத்தித் திட்டம் – 3.5 மில்லியன் யூரோ இலங்கையில் சிறிய மற்றும் நடுத்தர தொழில்

துறையினருக்கு சர்வதேச சந்iதையில் நிலவும் போட்டித்தன்மைக்கு ஈடுகொடுக்கக்கூடிய வசதிகளை செய்துகொடுப்பதற்கு இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.

  1. கல்வி மற்றும் மேலாண்மை நிபுணத்துவ நிதி– 0.5 மில்லியன் யூரோ புதிய திட்டங்களை வகுக்கும்போது தேவையான
  2. ஆய்வுகளை மேற்கொள்வதற்கும், சிறிய அளவிலான
  3. திட்டத்திற்கு நிதியை ஒதுக்குவதற்கும், ஜேர்மன் நிபுணர்களின் சேவைகளை பெற்றுக்கொள்வதற்கும் இந்த நிதி பயன்படுத்தப்படும்.

மேலே குறிப்பிடப்பட்ட திட்டங்கள் GIZ நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படும். தொழில் பயிற்சி மற்றும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான துறைகளின் அபிவிருத்திக்காக இலங்கை

அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு பல வழிகளில் பங்களிப்பு செய்து தொழில் நுட்பம் மற்றும் நிதி

உதவிகளை வழங்கி ஜேர்மன் அரசாங்கம் ஒத்துழைப்பை வழங்கிவருகிறது.

மேற்படி விடயங்களுக்கான உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று நிதி மற்றும் கொள்ளை அபிவிருத்தி அமைச்சில்

இடம்பெற்றது. நிதி அமைச்சின் செயலாளர், திரு.எஸ்.ஆர்.ஆடிகல இலங்கையின் சார்பிலும் இலங்கையிலுள்ள ஜேர்மன் தூதுவர்

திரு.ஜோன் ரோட் (Mr. Jorn Rohde) ஜேர்மன் அரசாங்கத்தின் சார்பிலும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர். வெளிநாட்டு

வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு. அஜித் அபேசேகர மற்றும் GIZ நிறுவனத்தின் இலங்கைகான பிரதிநிதி

திருமதி. கிறிஸ்டின் இயன்வ்ல்ட் (Christiane Einfeldt) ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

      Posted in இலங்கை செய்திகள்

      மத வழிபாட்டுத்தலங்களில் தனிநபர்கள் ஒன்றுகூடஅனுமதி

      மத வழிபாட்டுத்தலங்களில் தனிநபர்கள் ஒன்றுகூடஅனுமதி

      மத வழிபாட்டுத்தலங்களில் தனிநபர்கள் ஒன்றுகூடல் மற்றும் தனியார் வகுப்புக்களை மீள ஆரம்பித்தல் தொடர்பில் சுகாதார

      சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க அவர்கள் விடுத்துள்ள அறிவிப்பு கீழ்வருமாறு அமையும்:

      1. மதவழிபாட்டுத் தலங்கள்
        மத வழிபாடுகளுக்காக கீழ்கண்ட வரையறைக்குட்பட்டதாக தனிநபர்கள் ஒன்று கூடுவதற்காக 2020ஆம் ஆண்டு ஜுன்
      2. மாதம் 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் அனுமதி வழங்கப்படுகின்றது.

      • சுகாதார பாதுகாப்பு தனிநபர்களின் இடைவெளியைப் பாதுகாத்து எத்தகைய மதவழிபாட்டுத் தலங்களிலும் (அந்த வழிபாட்டு

      தலத்திற்குட்பட்ட கட்டிடத் தொகுதி மற்றும் திறந்தவெளி உள்ளிட்டவை) ஒன்றுகூடக்கூடிய ஆகக்கூடிய எண்ணிக்கை 50 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.


      • இருப்பினும் சமூக இடைவெளியை பாதுகாத்து 50 தனிநபர்கள் அல்லது ஒன்றுகூடக்கூடிய இடவசதி இல்லாத மதவழிபாட்டுத்

      தலங்களில் பொதுவாக அந்த நிலப்பகுதியில் கூடியிருக்கக்கூடிய எண்ணிக்கையில் அரைவாசிக்கு மாத்திரம் ஒரு சந்தர்ப்பத்தில் ஒன்றுகூட முடியும்.

      1. தனியார் வகுப்புக்கள்

      கீழ் குறிப்பிடப்பட்டுள்ள வரையறுக்குட்பட்டவகையில் தனியார் வகுப்புக்களை 2020 ஜுன் மாதம் 29ஆம் திகதி தொடக்கம் மீள ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்படுகின்றது.

      • சம்பந்தப்பட்ட மேலதிக வகுப்புக்கள் நடத்தப்படும் இடத்தில் இட அளவிற்கு அமைவாக சமூக இடைவெளியை பாதுகாத்து ஒரு மேலதிக வகுப்புக்காக கலந்துகொள்ளக்கூடிய ஆகக்கூடிய

      மாணவர்களின் எண்ணிக்கை 100 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மாணவர்கள் 100 பேருக்கு (100) அல்லது சம்பந்தப்பட்ட வகுப்பறைக்குள்/ மண்டபத்திற்குள் கற்பித்தலுக்கு வசதியற்ற

      இடத்தில் பொதுவாக அந்த இடத்தில் மேலதிக வகுப்பில் கலந்துகொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கையில்

      அரைப்பங்கினர் மாத்திரம் பங்குகொள்வதற்கு அனுமதி வழங்கப்படும்.

      இந்த அனைத்து அனுமதியும் வழங்கப்படுகின்றமை COVD 19 வைரசு தொற்று பரவுவதை தடுப்பதற்காக வெளியிடப்பட்டுள்ள சுகாதார

      வழிகாட்டிகளில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினராலும் முழுமையான வகையில் ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கு அமைவாகவேயாகும்.

          Posted in இலங்கை செய்திகள்

          கொரனோவால் மயங்கி வீழ்ந்த பெண் – வீட்டை போக கதறும் பரிதாபம் – வீடியோ

          கொரனோவால் மயங்கி வீழ்ந்த பெண் – வீட்டை போக கதறும் பரிதாபம் – வீடியோ

          இன்று சற்று முன்னர் பிரான்ஸ் அந்தோணி மருத்துவ மனைக்கு சிகிச்சை பெற சென்ற தமிழர் ஒருவர் அங்கு கதிரையில்

          அமர்ந்திருந்த ஆபிரிக்க இன குழுமத்தை சேர்ந்த கறுப்பின பெண் ஒருவர் திடீரென மயங்கி வீழ்ந்து வீட்டார் .

          சோதனையில் அவருக்கு கொரனோ நோயுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது .


          அந்த அதிர்ச்சியில் உறைந்து போன அவர் தான் வீடு செல்ல போவதாக ,வீட்டை விடும் படி கதறும் காட்சியே இவை

          ஆனால் இந்த காணொளியை படம் பிடித்த தமிழருக்கு இது தொற்றியுள்ளதாக என்பது தொடர்பாக தெரிய வரவில்லை full video

          https://www.facebook.com/vannimainthan/videos/2842838425813714/

          Posted in இலங்கை செய்திகள்

          மக்களுக்கு அவசர எச்சரிக்கை

          மக்களுக்கு அவசர எச்சரிக்கை

          மழை நிலைமை:
          கிழக்கு – மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்பிற்கு மேலாக ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம்விருத்தியடைந்துள்ளதுடன் அது

          மேலும் விருத்தியடையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.ஆழம் கூடிய கடற்பரப்புகளில் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக

          அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.
          புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் சில இடங்களில்

          நாட்டிற்கு கிழக்காக மற்றும் வடகிழக்காக உள்ள கடற்பரப்புகளில்சில இடங்களில் பலத்த மழையோ அல்லது

          இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

          காற்று :
          நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது

          தென்மேற்குதிசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 35-45 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

          கொழும்பிலிருந்து புத்தளம் மற்றும் காங்கேசந்துறை ஊடாக திருகோணமலை வரையானஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த

          கடற்பரப்புகளிலும்காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த

          கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

          கடல் நிலை:
          கொழும்பிலிருந்து புத்தளம் மற்றும் காங்கேசந்துறை ஊடாக திருகோணமலை வரையானஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த

          கடற்பரப்புகளும் காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக்காணப்படும்.

          நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள்அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

          இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது (மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரையும்)

          பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள்மிகவும் கொந்தளிப்பாகவும்காணப்படும்.

          கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

              செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
              Posted in இலங்கை செய்திகள்

              குண்டு வெடித்ததில் ஒருவர் பலி

              குண்டு வெடித்ததில் ஒருவர் பலி

              திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியாற்று முனை கரையோரப் பகுதியில் டைனமெட் வெடி

              மருந்து வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

              குறித்த சம்பவம் இன்று (09) மதியம் 1.15 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

              மீன் பிடிக்காக டைனமட் வெடி தயார் செய்யும் போது டைனமைட் வெடித்து சிதறியதில் டைனமைட் தயார் செய்தவர் உட்பட இருவர்

              படுகாயமடைந்து கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக ஆரம்ப கட்ட விசாரனை மூலம் தெரியவருகிறது.

              இவ்வாறு வெடிப்புச் சம்பவத்தின் போது கிண்ணியா இடிமன் -5, கிண்ணியா பகுதியை சேர்ந்த செயினுலாப்தீன் நவாஸ் வயது (35),

              உடைய குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார் எனவும் மற்றொருவர் கிண்ணியா, பெரியாற்றுமுனையை சேர்ந்த ஜௌபர் ரிசான் வயது

              (26) உடைய குடும்பஸ்தர் படுகாயமடைந்தவர் எனவும் தெரியவருகிறது.

              படுகாயமடைந்த ரிசான் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்திசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார் என கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

                  Posted in இலங்கை செய்திகள்

                  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 53 விடுதலை

                  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 53 விடுதலை

                  நீதிமன்ற உத்தரவு மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி கொள்ளுபிட்டியில் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்ட குற்றச்சாட்டில்

                  கைது செய்யப்பட்ட முன்னிலை சோசலிசக் கட்சியின் 53 உறுப்பினர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

                  கொழும்பு கோட்டை நீதவானினால் பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

                      Posted in இலங்கை செய்திகள்

                      அதிரடிப் படையின் புதிய கட்டளை தளபதியாக பிரதி பொலிஸ் மா அதிபர் நியமனம்

                      அதிரடிப் படையின் புதிய கட்டளை தளபதியாக பிரதி பொலிஸ் மா அதிபர் நியமனம்

                      பொலிஸ் விசேட அதிரடிப் படையின் புதிய கட்டளை தளபதியாக பிரதி பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர

                      நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

                          Posted in இலங்கை செய்திகள்

                          மாலைதீவிலுள்ள இலங்கையர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள்

                          மாலைதீவிலுள்ள இலங்கையர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள்

                          மாலைதீவிலுள்ள மிகவும் பாதிக்கப்படக்கூடிய இலங்கையர்களுக்கான அத்தியாவசியப் பொருட்களை வெளிநாட்டு உறவுகள் அமைச்சு அனுப்பி வைத்துள்ளது.

                          மாலைதீவிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தினூடாக மாலி மற்றும் மாலிக்கு வெளியிலிருக்கும் இலங்கைச் சமூகத்தினருக்கு

                          மத்தியில் விநியோகிக்கும் பொருட்டு, உலர் உணவுப் பொருட்கள் உட்பட 10,000 கிலோ (2000 பொதிகள்) அத்தியாவசியப்

                          பொருட்களை வெளிநாட்டு உறவுகள் அமைச்சு அனுப்பி வைத்துள்ளது. குறிப்பாக கோவிட்-19 தொற்றுநோய் பரவலின் காரணமாக மாலைதீவு அரசாங்கத்தால் சிவப்பு எச்சரிக்கை

                          அறிவிக்கப்பட்டுள்ளதும், உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகளுக்கான அணுகல் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுமான

                          கிரேட்டர் மாலியில் பாதிப்படைந்தவர்களால் முகங்கொடுக்கப்பட்டு வரும் பல சிக்கல்களைத் தணிக்கும் முயற்சி இதுவாகும்.

                          2020 ஜூன் 7, ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் சரக்கு விமானத்தினூடாக கட்டணங்கள் எதுவுமின்றி இலவசமாக இந்த உதவிப் பொருட்களை மாலைதீவுக்கு எடுத்துச் சென்றதனுடாக

                          இந்த நோக்கத்திற்காக வெளிநாட்டு உறவுகள் அமைச்சுடன் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் ஒத்துழைத்துள்ளது. வழங்கப்பட வேண்டிய இந்த தனிப்பட்ட உதவிப் பொருட்கள் ஒவ்வொன்றும் 18

                          பொருட்களை உள்ளடக்கியதுடன், இதில் உடனடி உணவுப் பொதிகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் போன்ற அடிப்படைப்

                          பொருட்கள் மற்றும் சமூகத்தால் பொதுவாகப் பயன்படுத்தப்படும் மருந்துகள் ஆகியவை உள்ளடங்கும்.

                          ஏறத்தாழ 7000 இலங்கையர்கள் தற்போது மாலைதீவிலிருந்து மீள நாடு திரும்ப எதிர்பார்த்துள்ளதுடன், அவர்களுள் கிட்டத்தட்ட 2000 பேர் கிரேட்டர் மாலியில் காணப்படுகின்றனர். இலங்கையர்கள்

                          புறப்படுவதற்கு முன்னர், பணம் செலுத்தும் அடிப்படையில் அவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான வசதிகளை மேற்கொள்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ள மாலைதீவு

                          அதிகாரிகளுடன் வெளிநாட்டு உறவுகள் அமைச்சு ஏற்கனவே கலந்தாலோசனைகளில் ஈடுபட்டுள்ளது.

                          பெரும்பாலான தலைநகரங்களில், இலங்கை அரசாங்கத்தினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியின் மூலமாகவும், இலங்கை சமூகத்தைச் சேர்ந்த சங்கங்கள் மற்றும் உள்ளூர் நிறுவனங்களுடன்

                          ஒன்றிணைந்தும் உலர் உணவுப் பொருட்கள் மற்றும் மருத்துவப் பொருட்களை வழங்குவதனூடாக வெளிநாடுகளில் குடியேறிய சமூகங்களுக்கு வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்கள்

                          தொடர்ந்தும் ஆதரவளித்து வருகின்றன. நாட்டிற்கு மீளத் திரும்பி வர எதிர்பார்ப்போரை மீள அனுப்பி வைப்பதற்கான பணிகளில் தொடர்ந்தும் உதவி வரும் அதே வேளையில், சாத்தியமான

                          சந்தர்ப்பங்களில் குறித்த இடங்களில் ஏற்படும் மருத்துவ அவசரநிலைகளுக்கும் அவர்கள் உதவிகளை மேற்கொள்கின்றார்கள்.

                              Posted in இலங்கை செய்திகள்

                              விஸ்வமடு வெடிபொருள் கடற்படையினரால் மீட்பு

                              விஸ்வமடு வெடிபொருள் கடற்படையினரால் மீட்பு

                              விஸ்வமடு, உடையார் கட்டு பிரதேசத்தில் சுமார் 40 கிலோகிராம்

                              டிஎன்டி ரக வெடிபொருள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

                              உடையார்கட்டு பகுதியில் புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பீப்பாயிருந்து குறித்த வெடிபொருள் மீட்கப்பட்டுள்ளது.

                              இந்த வெடிபொருள் தொகுதி, மனிதாபிமான நடவடிக்கையின் போது

                              தமிழீழ விடுதலை புலிகளினால் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் கைவிடப்பட்ட

                              கைவிடப்பட்டிருக்கலாம் என நம்ப படுவதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

                              குறித்த வெடிபொருட்கள் இலங்கை கடற்படையின் வெடிபொருள் அகற்றும்

                              பிரிவினரால் பாதுகாப்பாக அகற்றப்பட்டதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  விசா இன்றி தங்கி இருந்த ஆறு இந்தியர்கள் கைது

                                  விசா இன்றி தங்கி இருந்த ஆறு இந்தியர்கள் கைது

                                  இலங்கைக்கு உல்லாச பாயணிகளாக வருகை தந்து விசா இயன்றி தங்கி இருந்த ஆறு இந்தியர்கள்


                                  காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளனர்

                                  கைதானவர்கள் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர்

                                      Posted in இலங்கை செய்திகள்

                                      மலையக மக்கள் முன்னணியின் பிரதி செயலாளர் நாயகமாகவிஜயசந்திரன் ஏகமனதாக நியமனம்

                                      மலையக மக்கள் முன்னணியின் பிரதி செயலாளர் நாயகமாகவிஜயசந்திரன் ஏகமனதாக நியமனம்

                                      ம.ம.மு யின் பதில் பிரதி செயலாளர் நாயகமாக பேராசிரியர் விஜயசந்திரன் ஏகமனதாக நியமனம்.
                                      செயலாளர் நாயகம் ஏ.லோரன்ஸ்

                                      மலையக மக்கள் முன்னணியின் பதில் பிரதி செயலாளர் நாயகமாக கட்சியின் சிரேஸ்ட உறுப்பினரும்

                                      நிதிச்செயலாளருமான பேராசிரியர் விஜயசந்திரன் ஏகமனதாக மத்திய குழவிலும் அரசியல் உயர் பீடத்திலும் தெரிவு

                                      செய்யப்பட்டுள்ளார் என கட்சியின் செயலாளர் நாயகம் ஏ.லோரன்ஸ் ஊடகங்களுக்கு நேற்று (08.06.2020) தெரிவித்துள்ளார்.

                                      இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில்

                                      ஏற்கனவே கட்சியின் பிரதி செயலாளராக பேராசிரியர் விஜயசந்திரன் கட்சியின் உயர் பீடத்தால்

                                      நியமிக்கப்பட்டிருந்தார்.அவர் பிரதி செயலாளராக நியமிக்கப்பட்ட பின்பு என்னுடன் இணைந்து சிறப்பாக செயற்பட்டு வந்தார்.நான்

                                      சுகவீனமுற்றிருந்த காலப் பகுதியில் அவர் பதில் செயலாளராக நாகமாக என்னுடைய வேலைகளையும் அவரே பாரத்து வந்தார்.

                                      ஆனால் நாங்கள் அனுசா சந்திரசேகரனை கட்சிக்குள் உள்வாங்கிய பின்பு அவருக்கு பொறுத்தமான பொறுப்பான ஒரு பதவியை

                                      வழங்க வேண்டும் என எங்களுடைய மத்திய குழு தீர்மானித்த பொழுது பேராசிரியர் விஜயசந்திரன் தானாக முன்வந்து தன்னுடைய பிரதி செயலாளர் பதவியை விட்டுக் கொடுத்தார்.

                                      அதன் பின்பே அனுசா சந்திரசேகரன் கட்சியின் பிரதி செயலாளராக நிமிக்கப்பட்டார்.ஆனால் அவர் தன்னுடைய

                                      பதவியை பொறுப்பாக நிறைவேற்றவில்லை.கூட்டங்களுக்கு முறையாக சமூகமளிக்கவில்லை.நான் மிகுந்த சிரமத்திற்கு மத்தியிலேயே என்னுடைய பொறுப்புகளையும்

                                      நிறைவேற்றினேன்.ஆனால் இன்று அவர் கட்சியின் மத்திய குழு அரசியல் உயர்பீடங்களின் தீரமானத்திற்கு எதிராக தண்ணிச்சையாக தனியாக சுயேச்சை குழுவில் தலைமை

                                      வேட்பாளராக போட்டியிடுவதன் காரணமாக பிரதி செயலாளராக அவர் செயற்படுவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.

                                      எனது உடல்நிலையை கருத்தில் கொண்டு இது தேர்தல் காலம் என்பதால் செயலாளருடைய தேவை அதிகமாக இருக்கும் எனவே இந்த விடயங்களை கருத்தில் கொண்டு பதில் பிரதி செயலாளர்

                                      நாயகமாக மீண்டும் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினரும் நிதிச்செயலாளருமான பேராசிரியர் விஜயசந்திரன் பிரதி பொது செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

                                      அனுசா சந்திரசேகரன் கட்சியின் நடவடிக்கைகளில் இருந்து தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளார்;.அவரை

                                      கட்சியில் இருந்து வெளியேற்றியிருப்பதாக வெளியான தகவல் தவறானது என்பதையும் இந்த நேரத்தில் நான் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்..

                                          Posted in இலங்கை செய்திகள்

                                          இலங்கை கல்வி திட்டத்தில் மாற்றம்

                                          இலங்கை கல்வி திட்டத்தில் மாற்றம்

                                          தயாரிக்கப்பட்டு வரும் தேசிய கல்விக் கொள்கையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பரிசீலித்துள்ளார்.

                                          இலங்கையின் கல்வி நடவடிக்கைகளுக்கான ஜனாதிபதி செயலணி நேற்று ஜனாதிபதி செயலகத்தில் கூடியது. இதில் தேசிய கல்விக் கொள்கையை வகுக்கும் பணிகளின் முன்னேற்றம் ஆராயப்பட்டது.

                                          சுபீட்சத்தின் தொலைநோக்கு என்ற கொள்கைப் பிரகடனத்திற்கு அமைய, சகல பிள்ளைகளுக்கும் சமமான கல்வி வாய்ப்புக்கள்

                                          என்ற தொனிப்பொருளில் புதிய கல்விக் கொள்கை தயாரிக்கப்படுகிறது.

                                          இந்த முயற்சியில் எட்டப்படும் தீர்மானங்கள் நாட்டின் மீதும்இ எதிர்கால சந்ததி மீதும் தாக்கம் செலுத்துவதால்இ சகலரும்

                                          இணங்கக்கூடிய கொள்கையைத் தயாரிப்பது முக்கியமானது என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

                                          இந்தக் கொள்கை பற்றிய இறுதி அறிக்கையை அங்கீகரிப்பதற்கு முன்னதாகஇ அதனை குறைந்தபட்சம் இரு மாதங்களேனும் சமூகக்

                                          கருத்தாடலுக்கு உட்படுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தினார். எதிர்காலத்தில் ஒன்லைன் கல்வி முறைமையை கூடுதலாக

                                          பிரபலப்படுத்துவதன் அவசியத்தையும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதன் போது சுட்டிக்காட்டினார்

                                              Posted in இலங்கை செய்திகள்

                                              பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது

                                              பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது

                                              பாதாள உலக குழு உறுப்பினரான அமில பிரசன்ன ஹெட்டிஹேவா என அழைக்கப்படும் ´சன்சைன் சுத்தா´ மீது துப்பாக்கிப்

                                              பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபருக்கு

                                              உதவி புரிந்த சந்தேகத்தின் பேரில் தலங்கம பொலிஸ் நிலைய கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

                                              கடந்த மாதம் 30 ஆம் திகதி மாத்தறை மிரிஸ்ஸ மீன்பிடி துறைமுகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக வைத்து

                                              மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் சன்சைன் சுத்தா காயமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

                                                  Posted in இலங்கை செய்திகள்

                                                  சிறைச்சாலையில் 61 கைப்பேசிகள் கண்டுபிடிப்பு

                                                  சிறைச்சாலையில் 61 கைப்பேசிகள் கண்டுபிடிப்பு

                                                  இன்று (09) காலை நீர்க்கொழும்பு சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது 61

                                                  கைப்பேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

                                                      Posted in இலங்கை செய்திகள்

                                                      தென்னங்காணிகளை பதிவுசெய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது

                                                      தென்னங்காணிகளை பதிவுசெய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது

                                                      நாட்டில் தற்பொழுதுள்ளஅனைத்து தென்னங்காணி தொடர்பான 1921ஆண்டு இலக்கம் 46 இன் கீழான தெங்கு அபிவிருத்திசட்டத்தின்

                                                      கீழ் பதிவுசெய்வது கட்டாயமாக்கப்பட்டிருப்பதாக தெங்கு உற்பத்தி சபை அறிவித்துள்ளது.

                                                      இதற்கமைவாக எதிர்காலத்தில் தெங்கு உற்பத்தி சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் மூலமான சேவைகள்

                                                      மற்றும் ஏனைய நிதியுதவி வேலைத்திட்டத்திற்கு தெங்கு உற்பத்தி சபையில் பதிவுசெய்யப்பட்ட தென்னங்காணிகள் மாத்திரமே தகுதிபெறும்.

                                                      நாட்டில் தற்பொழுதுள்ள தென்னங்காணிகள் தொடர்பாக சரியான தரவுகளை முன்னெடுத்தல், காணிஅபிவிருத்தி திட்டத்தை வகுத்தல்

                                                      , தென்னங்காணிகள் மூலமான அறுவடைகளை சரியான முறையில் கண்காணித்தல் மற்றும் தென்னங்காணிகளை

                                                      பாதுகாத்தல் போன்ற நோக்கங்களை முன்னிலைப்படுத்தி தெங்கு உற்பத்தி சபையினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

                                                      இது தொடர்பாக மேலதிக தகவல்களை பிரதேச தெங்கு அபிவிருத்தி அதிகாரிகள் மூலமும், 0112861011 மற்றும் 0766904804 என்ற

                                                      தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தெங்கு உற்பத்தி சபையின் தகவல் பிரிவுடன் தொடர்பு கொண்டு அல்லது 1920 என்ற உடனடி

                                                      தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்வதன் மூலம் பெற்றுக்கொள்ளமுடியும்.

                                                          Posted in இலங்கை செய்திகள்

                                                          மகிந்தவுக்கு சுப்பிரமணிய சுவாமி வக்காளத்து

                                                          தமிழ் மக்கள் சம்பந்தமாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் எந்தவொரு வைராக்கியமும் இல்லை என்பது தனக்கு நன்கு

                                                          தெரியும் என்று இந்திய பிரதமரின் சிரேஷ்ட ஆலோசகரும் அந்;நாட்டின்

                                                          ராஜ் சபை உறுப்பினருமான பேராசிரியர் சுப்பிரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.

                                                          இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்ற போதே அவர் அவ்வாறு குறிபிபிட்டுள்ளார்..

                                                          எச்சரிக்கை நிலவிய சந்தர்ப்பங்களில் அவற்றை வெற்றிகரமான முறையில் எதிர்கொள்ளும் திறன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

                                                              Posted in இலங்கை செய்திகள்

                                                              வவுனியாவில் தீ வைத்து எரிக்க பட்ட இளம் பெண்

                                                              வவுனியாவில் தீ வைத்து எரிக்க பட்ட இளம் பெண்

                                                              வவுனியா பகுதியில் இருபத்தி ஒன்பது வயதுடைய இளம் பின்

                                                              ஒருவர் அயல் வீட்டாரினால் தீ வைத்து எரிக்க பட்ட நிலையில்

                                                              மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்

                                                              இரு வீட்டாருக்கு இடையில் ஏற்பட்ட சண்டை காரணமாக இந்த படுகொலை முயற்சி இடம்பெற்றுள்ளது
                                                              பெண்ணின் மீது மண் எண்ணெய் ஊற்றி தீ வைக்க பட்டுள்ளது

                                                              இந்த தீவிபத்தை ஏற்படுத்திய நபரை கைது செய்யும் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் ,மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது

                                                                  Posted in இலங்கை செய்திகள்

                                                                  சிறிலங்காவின் ஜனாதிபதி நோக்கி விரலை நீட்டியுள்ள கயானா நாட்டு முன்னாள் ஜனாதிபதி டொனல்டு ரமோத்தர் !

                                                                  சிறிலங்காவின் ஜனாதிபதி நோக்கி விரலை நீட்டியுள்ள கயானா நாட்டு முன்னாள் ஜனாதிபதி டொனல்டு ரமோத்தர் !

                                                                  2009ம் ஆண்டு போருக்கு பின்னராக நடந்தேறிய பாரிய தொடர்பில் சரியானதொரு புலனாய்வு விசாரணையினை அனைத்துலக சமூகம் பெரிதாக செய்திடவில்லை என்பதோடு, பல

                                                                  ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொலையுணக் காரணமாக, சிறிலங்காவின் தற்போதைய ஜனாதிபதியே இறுதிப்போரின் போது பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர் என மத்திய அமெரிக்க

                                                                  கயானா நாட்டு முன்னாள் ஜனாதிபதி டொனல்டு ரமோத்தர் தெரிவித்துள்ளார்.


                                                                  கடந்த தேர்தலுக்கு பின்னராகவும் தமிழ்மக்கள் அச்சங்கொண்டு வாழ்வதைப் தன்னால் புரிந்து கொள்ள முடிவதறகு இப்போது

                                                                  நாட்டின் அதிபராக இருப்பவர்தான் உள்நாட்டுப் போரின் குருதி தோய்ந்த காலக்கட்டத்தில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர்

                                                                  என்பதே காரணம் எனவும் முன்னாள் ஜனாதிபதி டொனல்டு ரமோத்தர் தெரிவித்துள்ளார்.

                                                                  சமீபத்தில் நடந்து முடிந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இணையவழி அரசவை அமர்வின் தொடக்கநாள் நிகழ்வின் போது

                                                                  சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுப்போதே இக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

                                                                  நடந்த குற்றங்களுக்கான உரிய புலானய்வுவிசாரணையினை செய்யப்படாமல் இருக்கின்றமை இன்னமும் தொடர்வதோடு, அனைத்துலக சமூகம் கூடுமான விரைவில் இதனைச் சரிசெய்தாக

                                                                  வேண்டும் எனவும் சர்வதேச சமூகத்தினை நோக்கி கோரிக்கையினை விடுத்துள்ள அவர், தற்போதை உலகின்

                                                                  ஆபத்தான போக்குள்ளேயே ஈழத்தமிழ் மக்கள் தமது போராட்டத்தை நடத்தியாக வேண்டிய நிலை உள்ளதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

                                                                  அவரது உரையின் முழுவடிவம் :

                                                                  நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உயர்பேரவையில் உரையாற்ற என்னை அழைத்தமைக்காக முதற்கண் நன்றி சொல்ல

                                                                  விழைகிறேன். எனக்களித்த தனிப் பெருமையெனக் கொண்டு, உங்கள் அன்பழைப்பை ஆழ்ந்து போற்றி மகிழ்கிறேன்.

                                                                  உங்களது அரசவை ஈழத்தமிழ் மக்களை ஒன்றுசேர்ப்பதிலும் அமைதிக்கும் விடுதலைக்கும் நீதிக்குமான பெருமுயற்சியில்

                                                                  அவர்களை ஒற்றுமைப்படுத்துவதிலும் முதன்மைப் பங்கு வகிக்கும் தனித்துவமான ஓரமைப்பு ஆகும்.

                                                                  இந்த அரசவையின் பிறப்பு தமிழர்களின் தாயகத்திலும் புலம்பெயர் தமிழுலகிலும் வாழும் தமிழர்களின் நெஞ்சகத்தே சுடர் விடும் உறுதிக்கும் ஊக்கத்துக்கும் எதிர்ப்புணர்வுக்கும் சான்றாகும்.


                                                                  இந்தச் சீரிய பேரவை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத் தலைமையின் மகத்தான அமைப்புத் திறன்களையும் படைப்பாற்றலையும் மெய்ப்பித்துக் காட்டுவதாக உள்ளது.

                                                                  பன்னாட்டுச் சூழல்

                                                                  அநேகமாய் வாழ்க்கைத் துறைதோறும் விரைவான மாற்றங்கள் ஏற்பட்டு வரும் பன்னாட்டுலகச் சூழலில் அரசவை கூடியுள்ளது. மாற்றங்கள் மட்டுமல்ல, உறுதியின்மைகளும் பேராபத்துகளும்

                                                                  பெருத்த அறைகூவல்களும் கூட இச்சூழலில் நிறைந்துள்ளன. வாய்ப்புகளும் நிறைந்திருப்பதாக நான் நம்புகிறேன்.


                                                                  நம்மில் மூன்றாம் உலகில் வாழ்வோர்க்கு அந்த அறைகூவல்கள் இன்னும்கூட அழுத்தமானவை.
                                                                  மிகவும் உடனடியான சிக்கல் என்றால், புவியைப் பிடித்தாட்டும் உலகளாவிய பெருந்தொற்று நோயைத்தான் சொல்ல வேண்டும்.

                                                                  இந்த நோய்க்கிருமி தொடர்ந்து பரவிக்கொண்டும், உலகெங்கும் நூறாயிரக்கணக்கான சாவுகள் விழக் காரணமாகிக் கொண்டும் இருக்கிறது.

                                                                  அதன் முழுத் தாக்கம் இன்னும் மெய்ப்பட்டு விடவில்லை; ஆனால் இப்போதே உலகின் ஆகப்பெரிய, ஆக முதன்மையான பொருளியலமைப்புகளில் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டிருக்கக்

                                                                  காண்கிறோம். இது உலகளாவிய பொருளியல் சுணக்கத்தின் தொடக்கமாக அமைந்து விடுமென நம்பப்படுகிறது. இவ்வாறான

                                                                  நேரங்களில் அநேகமாய் எப்போதுமே வளர்பருவ உலகின் மக்களினங்களே சிக்கன நடவடிக்கைகளின் சுமைதாங்கிகள் ஆகின்றனர்.

                                                                  மறுபுறம் நாமெல்லாம் எவ்வளவு நெருக்கமாய் ஒன்றுபட்டுள்ளோம் என்பதை இந்த கொவிட்-19 நோய்க்கிருமி நமக்குச் சொல்கிறது. கெடுவாய்ப்பாக உலகத் தலைவர்களில் சிலர் இந்த

                                                                  உண்மைநிலையை உள்வாங்கத் தவறி விட்டதாகத் தோன்றுகிறது; நோய்க்கிருமியிலிருந்து விடுபட நம் செல்வவளங்களைப்

                                                                  பயன்படுத்தாமல் இவர்களில் சிலர் அற்பப் பூசல்களில் ஈடுபட்டுள்ளனர்.

                                                                  காலநிலை மாற்றத்துக்கும் முகங்கொடுக்க வேண்டியவர்களாக உள்ளோம். நீங்களே கூட, வரலாற்றில் வந்துற்ற படுமோசமான இயற்கைப் பேரிடர்களில் ஒன்றான ஆழிபேரலையால்

                                                                  துயருற்றீர்கள். கடுஞ்சூறாவளிகள், வறட்சிகள், பெரும்புயல்கள், வெள்ளப்பெருக்குகள் முன்னைக்காட்டிலும் அடிக்கடியும் கூடுதல் வலுவோடும் தாக்குவதுதான் புதிய செய்தி.

                                                                  சமூகக்களத்தில் நாடுகளுக்கிடையிலும் அந்தந்த நாட்டுக்குள்ளேயுமான ஏற்றத்தாழ்வு வளர்ந்து சமூகப் பொருளியல் அமைப்பை நார் நாராகக் கிழித்துப் போடும் ஆபத்துள்ளது.

                                                                  ஆண்டுக்கு ஆண்டு செல்வக் குவிப்பும் வளர்ந்து வரும் சார்பியல் வறுமையும் முற்றிச் செல்கின்றன. செல்வந்தருக்கும் வறியவர்க்குமான உடையார்க்கும் இல்லார்க்குமான இடைவெளி

                                                                  குடாக்கடல் போல் விரிந்துள்ளது. ஒருபுறம் வறுமை வளர்ந்து செல்ல, மறுபுறம் வீண்விரயம் மீப்பெருமளவில் தலைவிரித்தாடுகிறது.

                                                                  உச்சத்திலும் உச்சமான படைக்கலன்கள் செய்வதற்குக் கோடானுகோடி டாலர்கள் செலவிடப்படுகின்றன. சாவு வணிகர்கள் நம்முலகின் பல்வேறு பகுதிகளிலும் பூசல்களைத் தூண்டி

                                                                  வருகின்றார்கள். இவற்றில் பலவும் மாந்தக் குல இருப்பையே அச்சுறுத்தும் அளவுக்கு ஆபத்தானவை. இது போதாதென்று நமது

                                                                  விண்வெளியை இராணுவமயமாக்குவது பற்றியும் பேசக் கேட்கிறோம். மிகவும் ஆபத்தான இந்தப் பன்னாட்டுலகச்

                                                                  சூழலில்தான் ஈழத்தமிழ் மக்கள் தமது போராட்டத்தை நடத்தியாக வேண்டும்.

                                                                  இன்றைய உலகில் நிலவும் இந்த நிலைமைகளில் இந்நேரத்துக்கான ஆகச் சிறந்த போராட்ட வடிவத்தை நீங்கள் தேர்ந்தெடுத்துள்ளீர்கள். அமைதிவழி என்பது வீர்மிகு தமிழ் மக்களின் நியாயமான

                                                                  நலன்களை மக்களிடையே கொண்டுசெல்லவும் வளர்த்தெடுக்கவும் ஆகப்பெரும் வாய்ப்பை உங்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும்.

                                                                  பெருந்திரளான மக்கள் தமது நியாயமான குறிக்கோளில் இன்னும் பெரிய அளவில் பங்கேற்கவும், பன்னாட்டுலகத் தோழமையை ஈட்டவும் ஊக்கமளிப்பதாகவும் அமையும்.

                                                                  மக்களை அணிதிரட்டவும், தமிழர்களுக்கும் மற்ற ஆற்றல்களுக்கும் இடையில் பரந்த ஒற்றுமை ஏற்படச் செய்யவும் ஆகச் சிறந்த வாய்ப்பை அது எற்படுத்திக் கொடுக்கும்.

                                                                  இப்போது நீங்கள் ஈடுபட்டுள்ள போராட்ட வடிவம் சிறிலங்காவின் ஏனைய மக்கள் பிரிவினரிடையே அமைதியை விரும்பும் ஜனநாயக

                                                                  ஆற்றல்களுடன் நேசக் கூட்டணிகள் அமைத்துக் கொள்ளவும் உங்களுக்கு உதவும் என்பது என் நம்பிக்கை.

                                                                  சமவுரிமைகளுக்கும் நீதிக்குமான உங்கள் போராட்டங்கள் எழுபத்திரண்டு ஆண்டுகள் முன் 1948இல் நாடு சுதந்திரம் பெற்ற

                                                                  காலத்தில் தொடங்கியவை ஆகும். உங்கள் இயக்கம் செறிவான பட்டறிவு பெற்று, நீதியும் நிகர்மையுமான குறிக்கோளில் உரம் பெற்றதாகும்.

                                                                  சுதந்திரம் பெற்ற நேரத்திலிருந்து போரட்டத்தின் தன்மை மாறியது. தேசியக் குறிக்கோள்களை அடைய முயலாமல் புது

                                                                  வகையானதொரு காலனியாதிக்கம் வளர்ந்து, காலனியாதிக்கம் செலுத்தியவர்களும் செலுத்தப் பெற்றவர்களும் ஒரே நாட்டில் வாழும் நிலை ஏற்பட்டதே காரணம்.

                                                                  அடுத்தடுத்த சிறிலங்க அரசுகள் தமிழர்களை இரண்டாந்தரக் குடிமக்களாக முயன்றன. இதற்காக, அவர்களை நிரந்தரமாகவே உரிமை மறுக்கப்பட்டவர்களாக வைத்துக் கொள்ளும் சட்டங்கள்

                                                                  இயற்றப்பட்டன. 1956ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தனிச் சிங்களச் சட்டம் தேசிய ஓர்மையை வார்ப்பதற்கு எதிரான பேரிடியாயிற்று.

                                                                  அது மெய்ந்நிலையில் இரு தேசங்களைத் தோற்றுவித்தது. ஒன்று ஒடுக்குண்ட தேசம், மற்றது ஒடுக்கும் தேசமெனத் தோன்றியது.

                                                                  தமிழ்மக்கள் ஒதுக்கப்படும் நிலையும் ஒரு மக்களினப் பண்பாட்டின் மிக அடிப்படைக் கூறாகிய அவர்தம் மொழி இழிவுபடுத்தப்படும் நிலையும் இந்தச் சட்டத்திலிருந்து தொடங்கின. புகழ்மிகு தமிழ்

                                                                  நூலகம் போன்ற பண்பாட்டு நிறுவனங்கள் அழிக்கப்பட்டன. இது மனிதகுலத்திற்கே இழப்பாயிற்று.


                                                                  அதுமுதல் இந்தப் போராட்டம் தேசத்தின் சுயநிர்ணய உரிமைக்கான சமராயிற்று. இந்த உரிமை ஐக்கிய நாடுகளும்

                                                                  பன்னாட்டுலக அமைப்புகளும் அங்கீகரித்துள்ள உலகு தழுவிய உரிமை ஆகும்.

                                                                  மக்களது பண்பாட்டின் மீதான தாக்குதலும் விட்டுக்கொடாமையும் நவீனக்கால வரலாற்றில் மிக மூர்க்கமான உள்நாட்டுப் போர்களில் ஒன்றுக்கு இட்டுச் சென்றன. நீண்டநெடிய போரில்

                                                                  ஆயிரக்கணக்கானோர் மடிந்தனர். அவர்களில் பெரும்பாலார் தமிழர்கள். இங்கேயும் போராட்ட வடிவங்களின் முக்கியத்துவம்

                                                                  நமக்குப் புலப்படுகிறது. போராட்டம் நியாயமானதே. தமிழர்களின் நியாயமமான போராட்டத்தையும் கூட பயங்கரவாதச் செயல்களாக சாக்கிட்டு தமிழர்களின் தேசிய விடுதலைக் குறிக்கோளைச்

                                                                  சிறுமைப்படுத்தவும், அப்பாவித் தமிழ் மக்கள் மீது பாரிய அளவில் கொடுந்தாக்குதல் தொடுக்கவும் செய்தனர்.

                                                                  குறிப்பாக அந்தப் போரின் இறுதிக் கட்டங்கள் குருதிதோய்ந்தவை, காட்டுவிலங்காண்டித்தனமானவை என்றே சொல்லலாம். இறந்தவர் தொகை பற்றிய மதிப்பீட்டில் சற்றே பெரிய வேறுபாடுள்ளது.

                                                                  மிகவும் குறைத்து மதிப்பிட்டால் கூட 40.000 பேர் மடிந்தனர். அவர்கள் பெரும்பாலும் அப்பாவிப் பொதுமக்கள். 70,000 பேர் மடிந்தாகச் சொல்லும் செய்திகளும் உள்ளன.

                                                                  நடந்தவற்றில் பெரும்பகுதி சிறிலங்காவின் ஆய்தப்படைகள் இனவழிப்பு செய்த தன்மைகளைச் சுட்டிநிற்கிறது.

                                                                  ‘சூட்டுத் தவிர்ப்பு’ வலையம் என்று ஒப்புக்கொண்ட இடத்திலும் கூட ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டார்கள்.

                                                                  மருத்துவமனைகளும் கல்விக் கூடங்களும் பிறவகை முகன்மைக் கட்டமைப்புகளும் அழிக்கப்பட்டன. மேலும், சித்திரவதை இடம்பெற்றது பற்றியும், ஆயிரக்கணக்கானோர்

                                                                  காணாமற்செய்யப்பட்டது குறித்தும், அதே போது பாலியல் வல்லுறவு ஒரு போர்க்கருவியாகப் பயன்படுத்தப்பட்டது குறித்தும் அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

                                                                  சிறிலங்காவில் இந்நிலைமை கெடுவாய்ப்பாகக் குடும்ப அரசவம்ச ஆட்சி தலையெடுப்பதற்கான சூழல்களையும்

                                                                  தோற்றுவித்திருக்கிறது. சமூக வாழ்க்கையில் பல எதிர்மறை நிக்ழ்ச்சிப்போக்குகளுக்கு இது வழிகோலி விட்டது.

                                                                  இதனால் ஊழலும், வேண்டியவர்களுக்குச் சலுகையும், அன்றாடச் சமூக வாழ்வில் பயங்கரமும் தலையெடுத்திருப்பதாகச் சில குழுக்கள் அறிக்கையளித்துள்ளன.

                                                                  இந்நிலைமைகளில் சர்வாதிகாரம் செழிப்பது பற்றி வரலாறு நமக்குப் பாடம் நடத்துகிறது. இது சில நேரம் ஒற்றைச் செயலில் வெளிப்படாமல் பல செயல்களின் திரட்சியில் வெளிப்படுகிறது.

                                                                  இதன் முதலடிகள் மக்களுக்குரிய விடுமைகளையும் உரிமைகளையும் பையப்பைய அரித்தெடுப்பதாகும். முதலில்

                                                                  சிதைக்கப்படும் உரிமைகளில் ஒன்று கருத்து வெளியிடுவதற்கான உரிமை ஆகும்.

                                                                  இதன் நீட்சியாக வருவது அரசியல் வகையிலும் பிற வகையிலும் பொது வாழ்வில் இருப்பவர்களை மனம்போன போக்கில்

                                                                  தளைப்படுத்துவதாகும். தொடர்ந்து பெண்களைக் கேடுறுத்துவதாகும். அவர்களில் பலர் அச்சத்தில் வாழ நேரிடுகிறது,

                                                                  2009ஆம் ஆண்டு உள்நாட்டுப் போர் முடிவடைந்த பின் அப்போது நடந்த ஆயிரக்கணக்கான குற்றங்கள் பற்றிய செய்திகளைப் புலனாய்ந்திடப் பெரிதாக எதுவும் செய்யப்படவில்லை என்பது மிக

                                                                  மிக வருந்தத்தக்கது. இன்றும் அதே நிலை தொடர்கிறது. பன்னாட்டுலகச் சமுதாயம் கூடுமான விரைவில் இதனைச் சரிசெய்தாக வேண்டும். சிறிலங்காவில் கடைசியாக நடந்த

                                                                  தேர்தலுக்குப் பின் இன்னுங்கூட இதற்கான தேவை கூடியுள்ளது. உங்கள் நாட்டில் தமிழ்மக்கள் அச்சங்கொண்டு வாழ்வதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஏனென்றால் இப்போது நாட்டின் அதிபராக

                                                                  இருப்பவர்தான் உள்நாட்டுப் போரின் குருதி தோய்ந்த காலக்கட்டத்தில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர்; அப்போதுதான் பெரும்பாலும் பொதுமக்கள் கொலையுண்டார்கள்.

                                                                  எனவேதான் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பணி இத்துணை முக்கியத்துவம் பெறுகிறது.


                                                                  பன்னாட்டுலகக் களத்தில் அறிவூட்டினால் போதாது. சிறிலங்காவில் கட்டமைப்புகள் கட்டியெழுப்பவும் மக்களிடம் நம்பிக்கை வளர்க்கவும் வேண்டிய தேவை உள்ளது.

                                                                  இந்தப் பெரும்பணியில் பன்னாட்டுலகத் தோழமையைக் கட்டியெழுப்புவது போலவே சிறிலங்காவில் உரிமைநேய

                                                                  மக்களுடன் இணைப்புகளை வளர்த்தெடுக்க வேண்டியதும் முக்கியமானது.
                                                                  தமிழர்களின் போராட்டம் என்பது அமைதிக்கும் ஆய்த

                                                                  நீக்கத்துக்குமான போராட்டத்தில் ஒரு பகுதியாகும். பாலத்தீன மக்களும் உலகெங்கும் ஏனைய ஒடுக்குண்ட மக்களும் நடத்தி வரும் எதிர்ப்பியக்கத்தின் பிரிக்கவொண்ணாப் பகுதியாகும்.

                                                                  நம் உலகமயப்பட்ட உலகில் பன்னாட்டுலகத் தோழமை பெரிதும் பொருள்பொதிந்தது. சுரண்டப்படும், ஒடுக்கப்படும் அனைவரின்

                                                                  நன்னலனுக்கும் உங்களது வெற்றி பங்களிக்கும். அதே போல் பன்னாட்டுலகில் அடையும் நன்மைகளும் உங்கள் போராட்டங்களில் தாக்கங்கொள்ளும்.

                                                                  இறுதியாக, முதலில் உங்கள் மக்கள் மீது இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு நீதி கோரியும், தேசிய ஒடுக்குமுறையிலிருந்து அவர்களின் விடுமைக்காகவும் விடுதலைக்காகவும் நீங்கள்

                                                                  எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகள் குவியட்டுமென வாழ்த்துகிறேன் என கயானா நாட்டு முன்னாள் ஜனாதிபதி டொனல்டு ரமோத்தர் தெரிவித்துள்ளார்.

                                                                      Posted in இலங்கை செய்திகள்

                                                                      கோட்டாவுக்கு ரணில் ஆலோசனை

                                                                      கோட்டாவுக்கு ரணில் ஆலோசனை

                                                                      கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்த தான் வழங்கிய ஆலோசனைகளை அரசாங்கம் பின்பற்றியிருந்தால் மே மாத இறுதியில் நாட்டை வழமையான நிலைமைக்கு

                                                                      கொண்டுவந்திருக்க முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

                                                                      சிறிகொத்தாவில் நேற்று (07) இடம்பெற்ற கட்சி ஆதரவாளர்கள் உடனான சந்திப்பின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

                                                                      கொரோனா வைரஸ் பரவல் ஆரம்பித்த காலப்பகுதியில் நாளொன்றுக்கு ஐயாயிரம் வரையிலான பரிசோதனைகளை

                                                                      மேற்கொள்ளுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

                                                                      மார்ச் 24 ஆம் திகதி நாட்டில் கொரோனா தொற்றாளர்கள் 102 ஆக காணப்பட்டதாகவும் ஆனால் இன்று தொற்றாளர்களின்

                                                                      எண்ணிக்கை 1814 ஆக அதிகரித்து, 11 உயிரிழப்புகளும் பதிவாகியதாக அவர் குறிப்பிட்டார்.

                                                                      தனது வேண்டுகோளுக்கு செவிசாய்க்காமையே இதற்கு காரணம் எனவும் அவர் தெரிவித்தார்.

                                                                      பெப்ரவரி 18 ஆம் திகதி முதல் இதுவரை 75,239 பரிசோதனைகளே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் அப்படி பார்த்தால் நாளொன்றுக்கு 690 பரிசோதனைகளே இடம்பெறுவதாக கூறினார்.

                                                                      அதன் பிரதிபலனாகவே தற்போது கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 1800 ஐ கடந்துள்ளதாகவும், உரிய வகையில்

                                                                      பரிசோதனைகளை நடத்தியிருந்தால் தொற்றாளர்களை 500 க்குள் கட்டுப்படுத்தியிருக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

                                                                      அசியல் ரீதியான நம்மைகளை பெற்றுக் கொள்வதே அரசாங்கத்தின் நோக்கமாக இருந்தாகவும், இதற்கு இந்தியாவிடம்

                                                                      இருந்தும் சீனாவிடம் இருந்தும் நன்​கொடைகளை பெற்றுக் கொண்டதாகவும் அவர் கூறினார்.

                                                                      உலக வங்கி 230 மில்லியனை நன்கொடையாக வழங்கியதாக தெரிவித்த அவர் அந்த பணத்திற்கு என்ன நடந்தது என்பதை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

                                                                          Posted in இலங்கை செய்திகள்

                                                                          மன்னாரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேரூந்து நிலையம்

                                                                          மன்னாரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேரூந்து நிலையம்

                                                                          மன்னாரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேரூந்து நிலையம் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் இன்று ஞாயிற்றக்கிழமை (7)

                                                                          மதியம் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டு மன்னார் நகர சபையிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

                                                                          நகர அபிவிருத்தி அதிகார சபையின் சுமார் 130 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மன்னார் பஸார் பகுதியில் சகல வசதிகளுடன் பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. குறித்த பஸ் நிலையம் இன்று

                                                                          ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணியளவில் நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளினால் திறந்து வைக்கப்பட்டு மன்னார் நகர சபையிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.

                                                                          குறித்த நிகழ்வில் விருந்தினர்களாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ்,மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம்

                                                                          அன்ரனி டேவிட்சன் மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் பிரதி நிதிகள்

                                                                          இணைந்து குறித்த பேரூந்து நிலையத்தை திரை நீக்கம் செய்து திறந்து வைத்தனர்.

                                                                          இந்நிகழ்வில் மன்னார் பிரதேசச் செயலாளர் , மன்னார் நகர சபையின் செயலாளர், நகர சபையின் உப தலைவர்,

                                                                          உறுப்பினர்கள், அரச, தனியார் போக்குவரத்து சங்க பிரதி நிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர். நாட்டில் கொரோனா வைரஸ் #

                                                                          பரவல் ஏற்பட்டுள்ள நிலையில் சுகாதார முறைப்படி அரசின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக குறித்த பேரூந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது#