கடலில் வீசப்பட்ட தமிழர் சடலங்கள்

கடலில் வீசப்பட்ட தமிழர் சடலங்கள்
Spread the love

கடலில் வீசப்பட்ட தமிழர் சடலங்கள்

இறுதி போர் கால பகுதியில் கடலில் வீசப்பட்ட தமிழர் சடலங்கள் விடயம் உண்மை என முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார் .

கைது செய்யப்பட்ட தமிழர்கள் கண்கள் கட்டப்பட்டு கொலை செய்யப்பட்டு கடலில் சடலங்கள் வீசப்பட்டது மறைக்க முடியாத உண்மை என சிவாஜிலிங்கம் இடித்துரைத்துள்ளார் .

கற்கள் கட்ட பட்டு சடலங்கள் கடலில் வீசல்

சடலங்களின் உடல் பாகங்களில் கற்கள் கட்ட பட்டு அந்த தமிழர் சடலங்கள் கடலில் வீசப்பட்ட வரலாறுகள் ,ஆதாரபூர்வமாக வெளியீடு செய்ய பட்டு இருந்தது .

அவ்வாறான மிக பெரும் மனித படுகொலைகள் இடம்பெற்ற பின்னரும் ,இதுவரை ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையால் தீர்வு காணப்படவில்லை .

இலங்கை புரிந்த மனித படுகொலைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கை மேற்கொள்ளாதது ஏன் என்ற கேள்வி எழுப்ப பட்டுள்ளது .

33 புதை குழிகள் கண்டு பிடிப்பு

தமிழர் தாயாக பகுதிகளில் இதுவரை 33 க்கு மேற்பட்ட மனித புதைகுழிகள் கண்டு பிடிக்க பட்டுள்ளன .

அந்த மனித புதைகுழிகளுக்குள் கண்டு பிடிக்க பட்ட சடலங்கள் ,உடல் பாகங்கள் சிங்கள அரச படைகளினால் அழிக்க பட்டதாக சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார் .

ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவை

ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையில் இலங்கை விசாரணைக்கு உள்ளாக்க படும் திடமான பொறி முறை உருவாக்க பட்டுள்ளதாக ,சிவாஜிலிங்கம் குறிப்பிடுகின்றார் .

சர்வதேச நீதிமன்றில் இலங்கை பாரப்படுத்த படலாம் என்பதால் ,மனித புதைகுழிகளும் ,அங்கிருந்த தமிழர் சடலங்களும் காணமால் ஆக்கப்பட்டுள்ளன என தெரிவித்து பரபரப்பை கிளப்பியுள்ளார் சிவாஜிலிங்கம் .

சிங்கள இராணுவத்தை காப்பாற்ற புதைகுழிகள் அழிப்பு

தமது மக்களையும் ,இராணுவத்தையும் காப்பாற்றி கொள்ளும் நோக்கில் இவை திட்டமிட பட்டு செயல்முறைவடிவம் கொடுக்க பட்டு நகர்த்த பட்டுள்ளது .

இறுதி போர் முடிவடைந்து 14 ஆண்டுகள் கடந்த பொழுதும் ,இதுவரை தமிழர்களுக்கான தீர்வு ஏதும் கிட்டவில்லை .

கடலில் ,வீதிகள்,கடல் கரைகளில் ,நீர் ஏரிகளில் குண்டு வீசி கொலை செய்ய பட்ட தமிழர்கள் ,காணாமல் போன பட்டியலில் உள்ளடக்க பட்டனர் .

மனித புதைகுழி தடயங்கள் அழிப்பு

அவர்கள் புதைக்க பட்ட ,அல்லது பலியான பகுதிகளில் சடலங்கள் தோண்டி எடுக்க பட்டு ,அந்த தடயங்கள் அழிக்க பட்டுள்ளன என்கின்ற விடயத்தை சிவாஜிலிங்கம் மிக தெளிவாக எடுத்துரைத்துள்ளார் .

இந்த விடயங்கள் ஐக்கிய நாடுகள் சபையில் மிக தெளிவாக பாரப்படுத்த பட்டுள்ளதாகவும் ,தீர்வு ஒன்று கிடைக்க பெறும் என்ற சிறு நம்பிக்கையை சிவாஜிலிங்கம் வெளியிட்டுள்ளார் .