ஆரையம்பதியில் சர்வதேச மகளிர் தினம்

Spread the love

.ஆரையம்பதியில் சர்வதேச மகளிர் தினம்

மார்ச் 08ஆந் திகதி உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படும் சர்வதேச மகளிர்

தினத்தின நிகழ்வு மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தினால் ஆரையம்பதி சிறுவர் பூங்காவிற்கு அருகில் நடாத்தப்பட்டது.

இந்நிகழ்வானது மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. ந.சத்தியானந்தின்

தலைமையில் (06) திகதி ஆரம்பமானதுடன் இதில் குடும்ப வன்முறை தொடர்பான வீதியோர நாடகம் இடம்பெற்றது.

மேலும் இந்நிகழ்வில் உதவி பிரதேசசெயலாளர் திருமதி.வி. லோகினி, கிராமசேவை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் , ஆரையம்பதி கிழக்கு

மாதர் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், சிறுவர் கழக உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *