கைக்குண்டுடன் பெண் ஒருவர் கைது

Spread the love

கைக்குண்டுடன் பெண் ஒருவர் கைது

மீகஹவத்த, தெல்கொட பகுதியில் உள்ள வீடொன்றில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் வௌிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதுடன் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மீகஹவத்த பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (13) காலை குறித்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.

குண்டசாலை பகுதியை சேர்ந்த 34 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மீகஹவத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *