இலங்கையில் பரவும் கொரனோ – 115 பேர் பாதிப்பு

Spread the love

இலங்கையில் பரவும் கொரனோ – 115 பேர் பாதிப்பு

நேற்றைய தினம் மினுவாங்கொட கொத்தனியில் அடையாளம் காணப்பட்ட 115 தொற்றாளர்களும் நாட்டின் 13

பிரதேசங்களிலிருந்து அடையாளம் காணப்பட்டுள்ளனரென,

கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு தொற்றாளர்களாக அடையாளம் காண்பட்டவர்களுள் 32 பேர்

மினுவாங்கொட பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் 30 பேர் கட்டுநாயக்க

பிரதேசத்தையும் 24 பேர் திவுலப்பிட்டிய, 11 பேர் பிங்கிரிய, 10 பேர் கம்பஹா

பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் மத்தகம, ராகம, காலி, குளியாப்பிட்டிய, நிட்டம்புவ, கொடிகாவத்த,

கராப்பிட்டிய, கஹத்துட்டுவ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *