கட்டுநாயக்க பொலிஸ் பிரிவில் ஊரடங்கு- இராணுவம் பொலிஸ் குவிப்பு

Spread the love

கட்டுநாயக்க பொலிஸ் பிரிவில் ஊரடங்கு- இராணுவம் பொலிஸ் குவிப்பு

கட்டுநாயக்க பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில்

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்குச் சட்டம் காலை 5.00 மணிக்கு அமுலுக்கு வந்ததாக

கொவிட் – 19 தடுப்பு செயற்பாட்டு மையத்தின் தலைவரும்

இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலானபோதிலும்,

கட்டுநாயக்க சுதந்திர வலயத்திலுள்ள தொழிற்சாலைகள் தொடர்ந்து இயங்கும்.

இவற்றின் பணியாளர்கள் தமது நிறுவன அடையாள அட்டையை

ஊரடங்கு அனுமதிப்பத்திரமாக பயன்படுத்த முடியுமென அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *