அறியா பருவத்தில் புரியாதவை ….!

Spread the love

அறியா பருவத்தில் புரியாதவை ….!

உருகி உருகி அழுதேனே
உன்னால் தானே துடித்தேன
காளை உந்தன் இரசனை எல்லாம்
காமத்தின் முடிவிலா ..?

கண்டதும் நீர் பாய்ச்சும்
கால் வாயின் கோலமா ..?
வெட்டாத ஆற்றுக்குள்
வெள்ளம் தேடி வரலாமா ..?

சத்தான காய் கறிகள்
சந்தைக்கு விடலாமா ..? ..?
பட்டணத்து விலைவாசி
பட்டாடை கட்டிடவோ …?

எது சொன்னேன் புரியலையோ
என் மனசே தெரியலையோ ..?
விதி போடும் விளையாட்டில்
விவரங்கள் தாமதமே

நாள் கடந்து விழித்தெழுந்து
நமக்கேதும் பயனில்லை
முற் போக்கை முன் வைத்து
முன்னேறு கை வைத்து

வன்னி மைந்தன் (ஜெகன் )
ஆக்கம் 20-06-2020

அறியா பருவத்தில்
அறியா பருவத்தில்

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *