வவுனியாவில் வீடு புகுந்து வாள்வெட்டு – ஐவர் காயம்

Spread the love

வவுனியாவில் வீடு புகுந்து வாள்வெட்டு – ஐவர் காயம்

வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியில் வீடு புகுந்து இடம்பெற்ற

வாள்வெட்டு சம்பவத்தில் 5 பேர் காயமடைந்து வவுனியா

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (14) இரவு 7.30 மணி அளவில் மகாறம்பைக்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்குள் உள்நுளைந்த சிலர் அங்கிருந்தவர்களை

வாளால் வெட்டியதுடன், வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களையும் தாக்கி சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் பெண் ஒருவர் உட்பட ஐந்து பேர் காயமடைந்த நிலையில்

நோயாளர் காவு வண்டி மூலம் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில், பொலிஸார் விசாரணைகளை

முன்னெடுத்து வருவதுடன் சந்தேகத்தின் அடிப்படையில் இருவரை கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *