ஒரு இலட்சம் இளைஞர் யுவதிகளுக்கு தொழிற்பயிற்சி
பல்துறை கலைஞர்களை இணைத்துக் கொள்ளும் வேலைத்திட்டத்தின் கீழ், ஒரு இலட்சம் இளைஞர் – யுவதிகளுக்கு தொழில் பயிற்சிகளை வழங்குவதற்கு தேசிய பயிற்சி மற்றும்
தொழில்துறை பயிற்றுவிப்பு அதிகாரசபை தயாராகிறது.
இதற்காக இளைஞர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதாக அதிகாரசபையின் தலைவர் தெரிவித்துள்ளார். இணைத்துக்
கொள்ளப்படும் இளைஞர் – யுவதிகளுக்காக 25 துறைகளில் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. ஆறு மாத காலம் இவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.






