கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டர்களின் எண்ணிக்கை 889 ஆக உயர்வு

Spread the love

இலங்கையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 889 ஆக அதிகரித்துள்ளது.

தேசிய தொற்று நோயியல் பிரிவு நேற்றிரவு 11.30 இற்கு விடுத்த அறிக்கையின்

பிரகாரம் கொரோனா தொற்றுடன் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவோரின்

எண்ணிக்கை 514 ஆகும். மொத்தமாக 366 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள். ஒன்பது பேர் நோய்க்குப் பலியாகியுள்ளனர்.

அதேவேளை கொரோனா-தொற்றின் பின்னர் குணமடைந்து நேற்று 23 பேர்

வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறிச் சென்றார்கள். இவர்கள் ஐடிஎச்,

வெலிகந்த, முல்லேரியா, இரணவில ஹோமாகம அரசினர் பொது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவர்கள் ஆவார்.

கொரோனா-தொற்றின் பின்னர் குணமடைந்த கடற்படை வீரர்களின் எண்ணிக்கை 52 ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *