பாகிஸ்தான் காவல் நிலைய வளாகத் தாக்குதலில் பலி எண்ணிக்கை 31 ஆக உயர்வு
பாகிஸ்தான் காவல் நிலைய வளாகத் தாக்குதலில் பலி எண்ணிக்கை 31 ஆக உயர்வு
வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள காவல் நிலைய வளாகத்தில் நடந்த தற்கொலைத் தாக்குதலில் பலி எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளதாக, ஒரு
காவல்துறை அதிகாரியை மேற்கோள் காட்டி ஏஎஃப்பி சனிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை அன்று, காவலர்களும் அவர்களது குடும்பத்தினரும் மசூதியில் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது,
தாக்குதல் நடத்தியவர் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட காரை காவல் நிலையத்திற்குள் மோதச் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.







