500 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் நீதிமன்ற அலுவலக உதவியாளர் கைது
500 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் நீதிமன்ற அலுவலக உதவியாளர் கைது ,
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் பணிபுரியும் அலுவலக உதவியாளர் ஒருவர், நீதிமன்றத் தீர்ப்பின் நகலை வழங்குவதற்காக ரூ. 500 இலஞ்சம் கோரியதாகவும்,
பெற்றதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் புலனாய்வு ஆணைக்குழுவின் (CIABOC) புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு மோசடி புலனாய்வுப் பணியகத்திற்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் தொடங்கப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தீர்க்கப்பட்ட ஒரு நிதித் தகராறு தொடர்பான வழக்கில், தீர்ப்பின் நகலை வழங்குவதற்காக சந்தேக நபர் ஜூன் 30 அன்று இலஞ்சம் கோரியதாகக் கூறப்படுகிறது.
கிடைத்த தகவலின் அடிப்படையில், CIABOC அதிகாரிகள் நேற்று (16) பிற்பகல் சுமார் 3.35 மணியளவில் கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்திற்குள் சந்தேக நபரைக் கைது செய்தனர்.
சந்தேக நபர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ள நிலையில், இச்சம்பவம் குறித்து CIABOC மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.







