ஈரானியக் கப்பல் மீதான தாக்குதலில் ஒருவர் பலி மூவர் காயம்
ஈரானியக் கப்பல் மீதான தாக்குதலில் ஒருவர் பலி மூவர் காயம் கெஷ்ம் தீவின் ஹெங்காம் தீவு மற்றும் ஷிப் டெராஸ் கடற்கரைக்கு அருகே ஈரானிய வர்த்தகக் கப்பல் ஒன்று தாக்கப்பட்டதில் ஒருவர் கொல்லப்பட்டார்
மற்றும் மூவர் காயமடைந்தனர் என கெஷ்ம் ஆளுநர் ஹொசைன் அமீர் தைமூரியை மேற்கோள் காட்டி ஈரானிய ஒளிபரப்பு நிறுவனமான ஐஆர்ஐபி செய்தி வெளியிட்டுள்ளது.
ஹோர்முஸ் ஜலசந்தியின் மிகப்பெரிய தீவான கெஷ்மைச் சுற்றி, இரவு முழுவதும் பல வெடிப்புகள் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு வர்த்தகத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த, முற்றுகையிடப்பட்ட இந்தப் பாதை தொடர்பாக, ஜலசந்தியை
ஒட்டியுள்ள ஓமானில் ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு இடையேயான சந்திப்பு நடைபெறுவதற்கு ஒரு நாள் முன்னதாக இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.







