வட கொரியாவும் ரஷ்யாவும் இரு நாடுகளையும் இணைக்கும் முதல் சாலைப் பாலத்தைத் திறந்தன

வட கொரியாவும் ரஷ்யாவும் இரு நாடுகளையும் இணைக்கும் முதல் சாலைப் பாலத்தைத் திறந்தன
Spread the love

வட கொரியாவும் ரஷ்யாவும் இரு நாடுகளையும் இணைக்கும் முதல் சாலைப் பாலத்தைத் திறந்தன

வட கொரியாவும் ரஷ்யாவும் இரு நாடுகளையும் இணைக்கும் முதல் சாலைப் பாலத்தைத் திறந்தன

ரஷ்யாவையும் வட கொரியாவையும் இணைக்கும் முதல் சாலைப் பாலம் திறக்கப்பட்டுள்ளது.

இது, துமென் ஆற்றின் குறுக்கே உள்ள தங்கள் எல்லைக்கு இடையே இரு நாடுகளும் சரக்குகளையும் பயணிகளையும் எளிதாகக் கொண்டு செல்ல வழிவகுக்கிறது.

இந்தப் பாலம் “ஆட்கள் பரிமாற்றம், சுற்றுலா மற்றும் வர்த்தகத்திற்காக” பயன்படுத்தப்படும் என்று பியோங்யாங் அரசு ஊடகங்கள் தெரிவித்தன.

ஆனால், உக்ரைன் போரில் ரஷ்யாவிற்கு ஆதரவளிக்கும் வகையில், “முதன்மையாக ஒரு இரகசிய இராணுவ தளவாட வழித்தடத்தை

நிறுவுவதே” இந்தப் பாலத்தின் நோக்கம் என்று உக்ரைனிய புலனாய்வு அமைப்பான ட்ரூத் ஹவுண்ட்ஸ் கூறியது.

உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்து இரு நாடுகளுக்கும் இடையே வலுப்பெற்றுள்ள உறவுகளுக்கு மத்தியில் இது நிகழ்ந்துள்ளது.

இரு நாடுகளில் ஏதேனும் ஒன்றுக்கு எதிராக “ஆக்கிரமிப்பு” ஏற்பட்டால், ஒருவருக்கொருவர் உதவுவதாக ரஷ்யாவின் புதினும் வட கொரியாவின் கிம் ஜாங் உன்னும் முன்னதாக உறுதியளித்திருந்தனர்.

ரஷ்யப் பிரதமர் மிகைல் மிஷுஸ்டின் இந்தப் பாலத்தை “நட்பின் புதிய சின்னம்” என்று வர்ணித்தார், அதே நேரத்தில் வட கொரியப் பிரதமர் பாக் தே சோங் இது ஒரு “வரலாற்று நிகழ்வு” என்று கூறினார்.

தினமும் 300 வாகனங்கள் வரையிலும், 2,323 பேர் வரையிலும் இந்தப் பாலத்தைக் கடக்க முடியும் என ரஷ்யாவின் அரசு செய்தி நிறுவனமான TASS தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு மே மாதம் பிபிசி வெளியிட்ட செயற்கைக்கோள் படங்கள், ஒரு கிலோமீட்டர் நீளமுள்ள இந்தப் பாலத்துடன் பல புதிய அணுகு

சாலைகள், ஒரு எல்லைச் சோதனைச் சாவடி, துணை உள்கட்டமைப்புகள் மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் இருப்பதைக் காட்டின.

இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கனவே விமான மற்றும் ரயில் இணைப்புகள் உள்ளன. ஆனால், இதுவரை இருந்த ஒரே சாலை இணைப்பு ஒரு தற்காலிக தீர்வாகவே இருந்தது. அதாவது,

சிறப்பு ஏற்பாட்டின் மூலம், ரயில் பாலத்தின் மீது மரப் பலகைகள் வைக்கப்பட்டு கார்கள் அதன் மீது பயணித்தன என ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தப் பாலம் ஆரம்பத்தில் சரக்குகளைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்படும் என்றும், இந்த ஆண்டின் பிற்பகுதியில் பயணிகள்

போக்குவரத்திற்காகத் திறக்கப்படும் என்றும் ரஷ்ய அரசு கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

“வர்த்தகம், பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கலாச்சார ஒத்துழைப்பின் மேலும் வளர்ச்சிக்கு இந்தப் பாலம் ஒரு சக்திவாய்ந்த உந்துதலை வழங்கும்” என்று மிஷுஸ்டின் கூறினார்.

திறப்பு விழாவில் காணொளிக் காட்சி மூலம் கலந்துகொண்ட அவர், மாஸ்கோவிற்கும் பியாங்யாங்கிற்கும் இடையிலான உறவுகள் “முன்னெப்போதும் இல்லாத உயர் மட்டத்தில்” இருப்பதாக விவரித்தார்.