அமெரிக்கத் தாக்குதல்களைத் தொடர்ந்து ஈரானின் தெஹ்ரான்-மஷ்ஹத் ரயில் சேவை நிறுத்தம்
அமெரிக்கத் தாக்குதல்களைத் தொடர்ந்து ஈரானின் தெஹ்ரான்-மஷ்ஹத் ரயில் சேவை நிறுத்தம்மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் சொந்த ஊரில் அவரது நல்லடக்கம் நடைபெறுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு,
அமெரிக்கத் தாக்குதல்
அமெரிக்கத் தாக்குதல்களைத் தொடர்ந்து தெஹ்ரானுக்கும் வடகிழக்கு நகரமான மஷ்ஹத்துக்கும் இடையிலான ரயில்
சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மஷ்ஹத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள இமாம் ரெஸா தர்காவில் வியாழக்கிழமை இரவு அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
அமெரிக்க-இஸ்ரேலிய எதிரி
இந்த வழித்தடத்தில் “அமெரிக்க-இஸ்ரேலிய எதிரி நடத்திய குற்றவியல் தாக்குதல்” நடந்ததாக ரயில்வே நிர்வாகம் குற்றம் சாட்டியதுடன்,
பழுதுபார்க்கும் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது. சிக்கித் தவித்த பயணிகளுக்காக சாலைப் போக்குவரத்தும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
முன்னதாக, கமேனியின் இறுதிச் சடங்கை “மறைக்கும்” முயற்சியில், மஷ்ஹத்தை நோக்கிச் செல்லும் கிழக்கு மாகாணங்களில் உள்ள இரண்டு
பாலங்களை வாஷிங்டன் குறிவைத்ததாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை குற்றம் சாட்டியிருந்தது







