பேருந்துக் கட்டணம் உயர்வு
பேருந்துக் கட்டணம் உயர்வு ,ஜூலை 6 முதல் அமலுக்கு வரும் புதிய பேருந்துக் கட்டண உயர்வை என்டிசி அறிவித்துள்ளது
தேசியப் போக்குவரத்து ஆணையம்
தேசியப் போக்குவரத்து ஆணையம் (என்டிசி), திங்கட்கிழமை (ஜூலை 6) முதல் அமலுக்கு வரும் பேருந்துக் கட்டணத் திருத்தத்தை அறிவித்துள்ளது.
புதிய கட்டண அமைப்பின்படி, குறைந்தபட்ச பேருந்துக் கட்டணம் ரூ. 30-லிருந்து ரூ. 34 ஆக உயரும்.
திருத்தப்பட்ட கட்டண அமைப்பின்படி, 100 கிலோமீட்டர் வரையிலான பயணங்களுக்கு 12% கட்டண உயர்வும், 100
கிலோமீட்டருக்கு மேற்பட்ட தூரங்களுக்கான கட்டணங்கள் 20% உயர்வும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
சொகுசுப் பேருந்து சேவை
சொகுசுப் பேருந்து சேவைகளைப் பொறுத்தவரை, 100 கிலோமீட்டருக்குக் குறைவான வழித்தடங்களுக்கு 12% கட்டண உயர்வும்,
100 கிலோமீட்டருக்கு மேற்பட்ட பயணங்களுக்கு 15% கட்டண உயர்வும் இருக்கும் வகையில் கட்டணங்களும் திருத்தி உயர்த்தப்படும்.
செயல்பாட்டுச் செலவு மாற்றங்களுக்கு ஏற்ப பயணிகள் போக்குவரத்துக் கட்டணங்களைச் சரிசெய்வது குறித்து எட்டப்பட்ட ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இந்தத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது என்று என்டிசி தெரிவித்துள்ளது.







