யாழ் கண்டி வீதியில் பயங்கர விபத்து
யாழ் கண்டி வீதியில் பயங்கர விபத்து ,யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியின் மருதங்கடவல, வனமல் உயன பகுதியில் அநுராதபுரத்திலிருந்து மருதங்கடவல நோக்கி பயணித்த ஸ்கூட்டர் வகை மோட்டார் சைக்கிள் ஒன்று
வீதியை விட்டு விலகி மின்சாரத் தூணுடன் மோதி
வீதியை விட்டு விலகி மின்சாரத் தூணுடன் மோதி பயங்கர விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று (20) பிற்பகல் 3.00 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில், மருதங்கடவலையிலுள்ள தனியார் கட்டுமான
நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் 25 வயதுடைய இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
அநுராதபுரம், சாலியபுர பகுதியில் உள்ள தனது வீட்டிலிருந்து பணிபுரியும் இடத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இதனையடுத்து, பிரதேசவாசிகள் இணைந்து 1990 அவசர நோயாளர் காவு வண்டி சேவைக்கு அறிவித்ததையடுத்து, காயமடைந்த இளைஞர் மருதங்கடவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காயமடைந்த இளைஞரின் நெஞ்சுப்பகுதி மின்சாரத் தூணில்
காயமடைந்த இளைஞரின் நெஞ்சுப்பகுதி மின்சாரத் தூணில் மோதியதில், விலா எலும்புகள் மற்றும் முதுகுப் பகுதியில் முறிவு ஏற்பட்டுள்ளதாகவும்,
அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் நோயாளர் காவு வண்டி ஊழியர்கள் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக மருதங்கடவல பொலிஸ் போக்குவரத்து பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- லெபனானில் முன்னாள் சிரிய இராணுவ ஜெனரல் கைது

- சவூதி எண்ணெய் வயல்கள் மீது ஹூதிகள் தாக்குதல்

- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கொழும்பு குவைத் விமான சேவை ஆரம்பம்

- 250 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான எடையுள்ள பெய்லி பாலங்களை இந்தியா இலங்கையிடம் ஒப்படைத்தது

- ரத்மலானாவில் உள்ள ஒரு வீட்டின் மீது கையெறி குண்டு தாக்குதல்

- தலத்துவோயாவில் வைரலான பூனை மீதான கொடுமைச் சம்பவம் தொடர்பாக இருவர் கைது

- வெலிகம கடற்கரையில் உல்லாச பயணி பலி

- பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் ஹெலிகாப்டர் விபத்தில் நால்வர் பலி

- முன்னாள் அதிபர் ஜோ பைடனின் புற்றுநோய் பரவியுள்ளது

- நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிப்பது தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பப்பட்டதை மகாநாயக்க தேரர்கள் உறுதிப்படுத்தினர்.

- அமெரிக்க செனட்டர்கள் தீர்மானம்

- மாரிப் நகரில் ஹூதிகளின் தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டன








