புத்தாண்டில் இருவர் படுகொலை
புத்தாண்டில் இருவர் படுகொலை ,நாட்டில் இரண்டு பகுதிகளில் இடம்பெற்ற கொலைச் சம்பவங்களில் பெண் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்தனர்.
மாலை வெல்லவாய பொலிஸ்
நேற்று (14) மாலை வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெட்டொலகம பகுதியில் பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளதாக வெல்லவாய பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
அதன்படி, சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் காயமடைந்த பெண்ணை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் 32 வயதுடைய வெல்லவாய பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவராவார்.
உயிரிழந்த பெண்ணுக்கும் அவரது கள்ளக்காதலனுக்கும் இடையில்
உயிரிழந்த பெண்ணுக்கும் அவரது கள்ளக்காதலனுக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் தற்போது தலைமறைவாகியுள்ள நிலையில் வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை பயாகல பகுதியில் நபர் ஒருவர் தலையில் தடி ஒன்றினால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய நபர் என தெரியவந்துள்ளது.
பயாகல, விகாரகந்த பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று சித்திரை புத்தாண்டுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மதுபான விருந்தின் போது, ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் இக்கொலை நடந்துள்ளது.
தாக்குதலுக்குள்ளான நபரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதையடுத்து, களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்தார்.
இந்த கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் பயாகல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேநேரம் அநுராதபுரம், நுவரவெவ குளத்தில் இருந்து அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் ஆள் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- இஸ்ரேலுக்கு எதிராக 8 நாடுகள் கண்டனம்

- இஸ்ரேல் முழுமையாக வெளியேற வேண்டும் என லெபனான் அதிபர்

- லெபனானில் உள்ள 10 கிராமங்களை தாக்க போகிறோம் மக்களே வெளியேற இஸ்ரேல் உத்தரவு

- விபச்சார விடுதியில் சோதனை நால்வர் கைது

- கொலை வழக்கில் ஐவருக்கு மரண தண்டனை

- சிறுவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி

- வெசாக் பண்டிகைக் காலத்தில் மூளைக்காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு

- வெள்ளப் பெருக்கு 30000 பேர் பாதிப்பு

- வானில் மோதிய விமானங்கள்

- வெறும் காலுடன் மரதன் ஓட்டம் நடத்திய அமைப்பு வெடித்த சர்ச்சை

- அமெரிக்காவின் MQ-9 ரீப்பர் ஆளில்லா விமானத் தொகுப்பில் 20 சதவீதத்தை ஈரான் அழித்தது

- துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக 22 வயது இளைஞர் கைது








