இராணுவமும் பொலிசாரும் வவுனியா ஏ9 வீதியில் விசேட சோதனை 29 பேர் கைது

Spread the love

இராணுவமும் பொலிசாரும் வவுனியா ஏ9 வீதியில் விசேட சோதனை 29 பேர் கைது

யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற வாகனங்களை வவுனியாவின் நான்கு இடங்களில் மறித்து இராணுவமும்

, பொலிசாரும் இணைந்து மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது 29 பேர் கைது

செய்யப்பட்டுள்ளதாகவும் வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 25 ஆம் திகதி தொடக்கம் இன்று வரையிலான 09 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே இவை கைப்பற்றப்பட்டுள்ளன.

வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் தம்மிக்க பிரியந்த அவர்களின் வழிகாட்டலில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் திஸல்லால்டி சில்வா மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர்

மல்வலகே ஆகியோரின் நேரடி கண்காணிப்பில் விசேட கடமையில் ஈடுபட்டிருந்த பொலிசார் வவுனியா மாவட்டத்தின் புளியங்குளம், கனகராயன்குளம், ஓமந்தை,

ஈரப்பெரியகுளம் ஆகிய பகுதிகளில் ஏ9 வீதியில் பயணித்த வாகனங்களை வழி மறித்து சோதனையிட்ட போதே, பயண பைகளில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் இருந்த 60

கிலோ கேரளா கஞ்சா மற்றும் 600 மில்லிக்கிரேம் ஹெரோயின் போதை பொருள் கண்டுபிடிக்கப்பட்டு

பொலிசாரால் கைப்பற்றப்பட்டன. இவற்றின் பெறுமதி சுமார் எண்பது இலட்சம் ரூபாய் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இவற்றை உடமையில் வைத்திருந்தமை மற்றும் கொண்டு சென்றமை தொடர்பில் 29 பேர் கைது

செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை மேலதிக விசாரணைகளின் பின் வவுனியா நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தானர்.

இராணுவமும் பொலிசாரும்
இராணுவமும் பொலிசாரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *