ரயிலில் இருந்து தவறி வீழ்ந்து பெண் உயிரிழப்பு

ரயிலில் இருந்து தவறி வீழ்ந்து பெண் உயிரிழப்பு
Spread the love

ரயிலில் இருந்து தவறி வீழ்ந்து பெண் உயிரிழப்பு

ரயிலில் இருந்து தவறி வீழ்ந்து பெண் உயிரிழப்பு ,யாழ். சாவகச்சேரியில் ரயிலில் இருந்து இறங்க முற்பட்ட குடும்பப் பெண் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

நேற்று கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த ரயில்,

நேற்று கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த ரயில், சாவகச்சேரி – சங்கத்தானையை அடைந்ததும் மேற்படி பெண் ரயிலில் இருந்து இறங்க முற்பட்டுள்ளார்.

இருப்பினும் அவர் இருந்த பெட்டியின் வாயில் ஊடாக இறங்குவதற்கு இறங்கு தளம் இல்லாத காரணத்தால் வேறு

பெட்டி ஊடாகச் சென்று இறங்க முற்பட்ட வேளையில் ரயிலும் நகர்ந்ததால் பெண் கீழே வீழ்ந்து படுகாயமடைந்திருந்தார்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை

அவர் உடனடியாகச் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சாவகச்சேரி கோவிற்குடியிருப்பைச் சேர்ந்த 53வயதான சு.சுபாசினி என்ற பெண்ணே
உயிரிழந்துள்ளார்