சுன்னாகத்திலும் கிளிநொச்சியிலும் போதை
வடக்கு மாகாணத்தில் நாளுக்குநாள் அதிகரித்துவரும் போதை சுன்னாகத்திலும் கிளிநொச்சியிலும் அகப்பட்ட போதை.
யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் இளைஞர்கள் இருவர் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
சுன்னாகம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இரு இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இளைஞனை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த போது இளைஞனின் உடைமையில் இருந்து 2 போதை மாத்திரைகளை கைப்பற்றியுள்ளனர்.
அதேவேளை, வீதியில் பயணித்த இளைஞன் ஒருவரை சுன்னாகம் பொலிஸார் வழிமறித்து சோதனையிட்ட போது இளைஞனின் உடைமையில் இருந்து 20 போதை மாத்திரைகளை கைப்பற்றியுள்ளனர்.
அதனையடுத்து போதை மாத்திரைகளுடன் கைதான இரு இளைஞர்களையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கிளிநொச்சி போதை
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதநகர் பகுதியில் பாழடைந்த வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்ட மூன்று பார்சல் கஞ்சா போதைப்பொருள் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இராணுவ புலனாய்வு துறையினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலை அடுத்து இராணுவ புலனாவுத் துறையினரால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கஅமைய கிளிநொச்சி மற்றும் முல்லைதீவு பொலிஸ்மா அதிபரின் கீழ் உள்ள சிறப்பு பிரிவினர் சம்பவ இடத்துக்கு விரைந்ததுடன் மூன்று பார்சல் கஞ்சாவை மீட்டுள்ளனர்.
இருப்பினும் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் யாரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.












