கொழும்பு சிறைச்சாலையில் இடமில்லை
கொழும்பு விளக்கறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அங்கு நெரிசல் ஏற்பட்டுள்ளது.
குறிப்பிட்ட சிறைச்சாலையில் 650 கைதிகளை அடைக்க முடியும் என்றால், தற்போது சுமார் 2,100 பேர் அங்கு அடைக்கப்பட்டுள்ளனர் என்று, சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு விளக்கறியல் சிறைச்சாலையில் பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் ஆகியோரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், மற்ற சிறைச்சாலைகளில் நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமான கைதிகள் தற்போது அடைத்து
வைக்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்த்துள்ளன.
- மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பிறகு முதல் கச்சா எண்ணெய் கப்பல் இன்று வருகை

- 1 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது குறித்து அமைச்சு அறிவிப்பு

- அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு

- புத்தாண்டுக்குப் பிறகு கொழும்பு திரும்பும் பயணிகளுக்காக சிறப்புப் பேருந்து சேவை

- தெதுரு ஓயா நீரில் மூழ்கி 8பேர் பலி







