லொறி மீது துப்பாக்கிச்சூடு சாரதி கைது
லொறி மீது துப்பாக்கிச்சூடு சாரதி கைது ,மீகஹஜதுரவில் போக்குவரத்து சோதனையின் போது நிறுத்தத் தவறிய லொறி மீது சூரியவெவ பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
லுணுகம்வெஹரவிலிருந்து சூரியவெவ நோக்கி பயணித்த லொறியானது, பொலிஸாரின் சமிக்ஞைகளை மதிக்காமல், பொறுப்பற்ற முறையில் ஓட்டிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர். இதற்கமைய, வாகனத்தின் ஒரு டயர் மீது துப்பாக்கியால் சுட்ட பிறகு வாகனம் நிறுத்தப்பட்டது.
இதன்போது, லொரி சோதனையிட்டபோது, 17 மாடுகளை ஏற்றிச் சென்றது தெரியவந்தது.
இதற்கமைய, சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
- பிரென்ட் எண்ணெய் விலை 90 டாலரைத் தாண்டியது

- 40000 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் தொழில்நுட்ப அதிகாரி கைது

- பிரிட்டன் உள்ளிட்ட 40 நாடுகளுக்கு விசா இலவசம்

- 1948 ஆம் ஆண்டு சட்டத்திற்குப் பதிலாக புதிய குடிவரவு மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது

- கொழும்பு உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ரஜித சேனரத்ன







