இலங்கையில் போதையில் ரயிலை செலுத்தியவர் பணி நீக்கம்
இலங்கையில் போதையில் ரயிலை செலுத்தியவர் பணி நீக்கம் செய்யப்பட்டுளளார் ,இலங்கையில் போதையில் ரயிலை செலுத்தி சென்ற சாரதி ஒருவர் தற்பொழுது பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை அதிகார சபை தெரிவித்துள்ளது .

பயணிகள் பயணித்த ரயிலை அதிக அளவாக போதையை அருந்தி ரயிலை செலுத்தி சென்றதன் காரணத்தினால் ,அவர் அங்கு உடனடியாக பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக போதை காரணமாக ஓடிச் சென்ற ரயிலை இடையில் நிறுத்திவிட்டு அவர் தப்பியுள்ளார் .
அதை எடுத்து மக்கள் நபரை துரத்தி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர் .
போதை காரணமாக ஓடிச் சென்ற சாரதிக்கு ஆப்பு
அதனை அடுத்து தற்போது போக்குவரத்து பிரிவு மேற்கொண்ட தீவிர விசாரணை எடுத்து அவர் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது அவர் ரயில்வே பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இவர் அதிகமான போதையில் இருந்த போதும் பயணிகள் தப்பித்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இலங்கையில் ரயில்வே சாரதிகள் பேருந்து சாரதிகள் இவ்வாறு நடந்து கொள்வது மிகப் பெரும் ஆபத்தையும் அபாயத்தையும் ஏற்படுத்தும் சம்பவமாக பார்க்கப்படுகின்றது .
சமீப காலங்களாக இலங்கையில் இடம் பெற்று வருகின்ற ரயில் விபத்துக்கள் பேருந்து விபத்துக்கள் தொடர்பான விசாரணைகள் தீவிரம் பெற்று வருகின்றன.
இலங்கையில் நாள்தோறும் பேருந்துகள் விபத்தில் சிக்கி வருகின்ற சம்பவம் சாரதிகளின் அலட்சியப் போக்கும் போதையில் அவர்கள் வண்டிகளை செலுத்துவதை காரணம் என்கின்ற தகவலும் வெளியாகியுள்ளது.
தப்பிய ரயில் பயணிகள் அரச அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை
தற்பொழுது ரயில்வே சாரதி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது .
இவ்வாறானவர்கள் தொடர்ந்து பணியில் வைத்திருந்தால், மேலும் பெரும் ஆபத்தினை மக்கள் சந்திப்பார்கள் என்பதால் ,அவர் இந்த பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் .
தனது மகிழ்வுக்காக அருந்தபட்ட போதையினால் அவர் தனது பணியை இழந்து தற்போது நிர்கதியாக நிற்கிறார் என முடியும் இந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- 13 பில்லியன் தேசிய அபிவிருத்தி வங்கி மோசடி

- மீன் விநியோகத்தை மேம்படுத்த ரூ. 200 மில்லியன் மதிப்புள்ள குளிரூட்டப்பட்ட சரக்குந்துகளை ஜப்பான் நன்கொடையாக வழங்கியது

- நீதிமன்றத்திற்கு நீதிபதிகளை நியமிப்பதில் தாமதம் குறித்து சஜித் கவலை

- சல்லேயின் நீட்டிக்கப்பட்ட தடுப்புக்காவல் குறித்து கம்யூனிஸ்ட் கட்சி கவலை

- மூன்று நாள் டெங்கு பிரச்சாரத்தின் போது 2000-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு

- சசி வீரவன்சவின் மேல்முறையீட்டை உயர் நீதிமன்றம் நிராகரித்து

- வெளிநாட்டு இலங்கையர் கட்டடம் வங்கிக்கு பணம் அனுப்ப வேண்டுமாம் பிச்சை எடுக்கும் இலங்கை

- ஈஸ்டர் ஞாயிறு விசாரணை உருட்டும் அனுரா பயங்கரவாத அரசு

- தெற்கு ஆசியாவில் இலங்கை அமைதியான நாடாம்

- கோயில் ஸ்டுடியோ உபகரணங்களைத் திருடியதற்காக நபர் கைது








