நாடெங்கும் கனமழை
நாடெங்கும் கனமழை இலங்கையில் இன்று நாடெங்கும் கனமழை பொழியும் எனவும் மக்களை இவளை எச்சரிக்கையாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் மேல் சப்பரம் முக வடமேற்கு தென் மாகாணங்களில் கடும் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
அதிக அளவான மழை பொழிவு
நுவரெலியா சப்புர முகா மாவட்டத்தின் சில இடங்களிலும் 50 மில்லி மீட்டருக்கு மேல் அதிக அளவான மழை பொழிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
வடக்கு மற்றும் வடமத்தியமானங்களும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் எனவும் ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பாரிய மழை வீழ்ச்சி ஏற்படும் என தெரிவிக்க பட்டுள்ளது .
இதனால் வெள்ளப்பெருக்குள் ஏற்படக்கூடிய அபாயம் ஏற்படலாம் எனவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது .
இலங்கையின் பல்வேறுபட்ட குளங்களில் அதிக மழை வீழ்ச்சி காரணமாக நிரம்பி வழிவதால் தாழ் நிலா பகுதிகளை நோக்கி வெள்ளம் அடித்துப் பாய்வதால் பல ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு இருந்தனர் .
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மக்கள்
வீடுகளுக்குள் மற்றும் சொத்துக்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் மக்கள் செய்வதறியாத திணறி வருகின்றனர்.
இவ்வாறான காலப் பகுதியில் மேற்படி மாவட்டங்களில் மீளவும் அதிகளவிலான மழை பொழிச்சி ஏற்படும் என்கின்ற விடயம் அப்பகுதி வாழ் மக்கள் மத்தியில் ஒரு வித பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .
பாதிக்கப்பட்ட மக்களுக்கு பத்தாயிரம் ரூபா விகிதம் அரசு பண உதவி வழங்கியிருந்தது .
அவ்வாறான நிலையில் தற்போது மக்களை மிகவும் எச்சரிக்கையாக இருக்கும்படியும் ,அதிக மழை வீழ்ச்சி இந்த ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது











