50 யானைகள் பலி
50 யானைகள் பலி , இந்த வருடம் இலங்கையில் மின்சாரம் தாக்கி மற்றும் ஏனைய சம்பவங்க உடைய தாக்குதல் மற்றும் பல்வேறுப்பட்ட தாக்குதல் காரணமாக 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் பலியாகி உள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர்.
இந்த யானைகளை பாதுகாப்பதற்கு பல்வேறுப்பட்ட நடவடிக்கைகள் எடுத்து வருகின்ற பொழுது விபத்துக்கள் மின்சாரம் தாக்கி பேருந்துகள் மற்றும் ரயிலில் மோதி பல யானைகள் பலியாகி உள்ள சம்பவங்கள் காணப்படுகிறது .
இந்த யானைகள் வேட்டையாடினால் சுட்டு கொலை செய்யப்பட்டு அதனுடைய தந்தங்கள் வேட்டையாடப்பட்டுள்ள தகவல்களும் வெளியாகி வருகின்றன .
ஆகவே இந்த காட்டு யானைகளை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது அவர்களை எவ்வாறு பராமரிப்பது என்பது தொடர்பில் வனவிலங்கு பாதுகாப்பு பிரிவுக்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தகவலை வெளியிட்டு இருக்கின்றனர் .
யானைகளை அதிகம் மக்கள் விரும்பி நேசிக்கின்ற ஒரு விலங்காக காணப்படுவதுடன், யானைகள் மக்களுக்காக பல அளப்பரிய சேவைகளையும் ஆற்றி வருகின்றமை இங்கே குறிப்பிடத்தக்கது.













