19 ஆவது மாடியில் இருந்து விழுந்து பெண் ஒருவர் பலி
வௌ்ளவத்தயில் 19 ஆவது மாடியில் இருந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (17) பிற்பகல் 2.15 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் ஹெல்லொக் பகுதியை சேர்ந்த 41 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் வௌ்ளவத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.