10 இலட்சம் பெறுமதியான பொருட்கள் கொள்ளை சிக்கிய திருடன்
இளைஞர் ஒருவரைத் தாக்கி அவரிடமிருந்து தங்க நகைகள், கைக் கடிகாரம், தொலைபேசி மற்றும் பணம் ஆகியவற்றைக் கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய அறுவரை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 27 ஆம் திகதி குறித்த குழுவினர் தொலைபேசி ஊடாக குறித்த இளைஞனை மறவன்புலவுக்கு வரவழைத்துள்ளனர்.
அங்கு இளைஞனைத் தாக்கி அவரிடமிருந்த நான்கரைப் பவுண் தங்க நகைகள், இரண்டு கையடக்க தொலைபேசிகள், கைக்கடிகாரம் மற்றும் 50 ஆயிரம் ரூபா பணம் ஆகியவற்றை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
அதன் பெறுமதி 10 இலட்சத்து 25 ஆயிரம் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 இலட்சம் பெறுமதியான பொருட்கள் கொள்ளை சிக்கிய திருடன்
இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், சிலாபத்தைச் சேர்ந்த 3 பெண்களும், கனகராயன்குளத்தை சேர்ந்த இரு ஆண்களுமாக ஐவர் கைது செய்யப்பட்டனர்.
இதன்போது குறித்த நகைகளை கொள்வனவு செய்த வவுனியாவைச் சேர்ந்த கடை உரிமையாளர் அவற்றை உருக்கி தங்க தட்டுகளாக மாற்றிய நிலையில் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், சாவகச்சேரி நீதிமன்றில் குறித்த சந்தேக நபர்கள் 6 பேரையும் நேற்றைய தினம் ஆஜர்படுத்திய போது அவர்களை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- கலவரத்தில் இறந்த சிறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
- புலம்பெயர் தொழிலாளர்களின் ஓய்வூதியத் திட்டத்திற்கு குவைத் நிதியம் 21 பில்லியன் ஆதரவை வழங்குகிறது
- எல் நினோ இலங்கையை மிரட்டும் உயிர் அழிவு ஆபத்து
- தீயணைப்புத் துறை அவசர உதவி எண் தற்காலிகமாகச் செயல்படவில்லை
- இலங்கையில் டெங்கு இறப்பு எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது
- விமானம் பறவை மோதல் அவசரமாக தரை இறங்கிய விமானம்
- இலஞ்சக் குற்றச்சாட்டின் பேரில் பதஹேவஹேட்ட பிரதேச சபை தலைவர் கைது
- மேற்கு மாகாணத்தில் டெங்கு பாதிப்புகள் 35000
- நெல் கொள்முதல் விவாசயிகள் மகிழ்ச்சி
- உல்லாச பயணிகள் வருகை அதிகரிப்பு
















