05 மாவட்டங்களில் இதுவரை யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை
05 மாவட்டங்களில் இதுவரை யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை ,இந்த ஆண்டு பொதுத் தேர்தலுக்காக இதுவரை சுயேச்சைக் குழுக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் அடங்களாக 33 குழுக்கள் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யதுள்ளன.
நேற்றைய (08) தினம் வரை 17 அரசியல் கட்சிகளும் 16 சுயேச்சைக் குழுக்களும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மாத்தளை, காலி, மாத்தறை, குருநாகல் மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களின் தேர்தல் தொகுதிகளில் நேற்று வரை எந்த அரசியல் கட்சியோ அல்லது சுயேச்சைக் குழுவோ வேட்புமனுக்களை சமர்ப்பிக்கவில்லை என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஒக்டோபர் 4ஆம் திகதி ஆரம்பமாகி 11ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை நிறைவடையவுள்ளது.
இதேவேளை, பொதுத் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் எதிர்வரும் 10ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
அதற்கான விண்ணப்பங்கள் ஏற்கும் பணி நேற்று நள்ளிரவுடன் முடிவடைய இருந்தது.
- அமெரிக்கப் பெண் சடலமாக மீட்பு

- யோஷித ராஜபக்ச வழக்கு ஒத்திவைப்பு

- மூன்றாம் பள்ளி பருவம் நாளையுடன் முடிவடைகிறது

- அனுராதபுரத்தில் உள்ள பழங்கால நீர்த்தேக்கங்கள் மற்றும் நெல் நிலங்களை விற்பனை

- உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு இலங்கை டிரில்லியன் கணக்கான ரூபாய் செலவு

- 40 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் புதிய படத்தில் இணைகிறார்கள்

- ஆட்டோ காவல் நிலையத்தில் பதிவு

- தேயிலை தொழிற்சாலை ஊழியர் இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்தார்

- இலங்கை ஸ்திரத்தன்மைக்கு இந்தியாவின் ஆதரவு

- பொலிஸாரை அச்சுறுத்திய NPP PS உறுப்பினருக்கு பிணை











