வெறும் காலுடன் மரதன் ஓட்டம் நடத்திய அமைப்பு வெடித்த சர்ச்சை

வெறும் காலுடன் மரதன் ஓட்டம் நடத்திய அமைப்பு வெடித்த சர்ச்சை
Spread the love

வெறும் காலுடன் மரதன் ஓட்டம் நடத்திய அமைப்பு வெடித்த சர்ச்சை

வெறும் காலுடன் மரதன் ஓட்டம் நடத்திய அமைப்பு வெடித்த சர்ச்சை ,கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு வருடம்தோறும் பிரித்தானியா எடின்பிரோ நகரத்தில் நடாத்தும் மரதன் ஓட்ட நிகழ்வுக்கு வலுச்சேர்க்கும் முகமாக கிளிநொச்சியில் மரதன் ஓட்டம் இடம்பெற்றது.

இன்று காலை கிளிநொச்சி மத்திய விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக

இன்று காலை கிளிநொச்சி மத்திய விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட மரதன் ஓட்டம்

பெண்களுக்கு ஐந்து கிலோமீற்றராகவும், ஆண்களுக்கு பத்து கிலோ மீற்றராகவும் நடாத்தப்பட்டது.

கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பின் இணைப்பாளர் கி.விக்னராஜா தலைமையில் நடைபெற்ற குறித்த மரதன்

ஓட்ட நிகழ்வில் பிரதம விருந்தினராக மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சி.சேரலாதன் கலந்து கொண்டார்.

நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கிளிநொச்சி தெற்கு வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் உடற்கல்வி ப. பார்த்தீபன்,கிளிநொச்சி மாவட்ட செயலக கணக்காளர் பொ.சுயாத்குமார் கலந்து கொண்டார்.

நிகழ்வில்
கௌரவ விருந்தினராக கரைச்சி கோட்டக்கல்விப்பணிப்பாளர்,சு.தர்மரத்தினம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

குறித்த மரதன் ஓட்டத்தில் கலந்து கொண்ட ஓட்ட வீரர்கள் ஆண் பெண்கள் பலர் காலணி இன்றி ஓட்ட பந்தயத்தில் கலந்து கொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது .

மேற்படி விடயம் உலக தமிழ் மக்கள் மத்தியில் சர்ச்சையை எதிர் மறை கருத்துக்களை ஏற்படுத்தியுள்ளது .

நிகழ்வை ஒழுங்கு செய்த அமைப்பினர் ஏன் இதனை கவனத்தில் கொள்ளவில்லை என்ற விடயம் கேள்வியாக எழுப்ப பட்டுள்ளது

நன்றி நிருபர் ரவி

வெறும் காலுடன் மரதன் ஓட்டம் நடத்திய அமைப்பு வெடித்த சர்ச்சை
வெறும் காலுடன் மரதன் ஓட்டம் நடத்திய அமைப்பு வெடித்த சர்ச்சை