விக்கியுடன் இணைந்து கூட்டணி அமைத்து போட்டியிட முன் பெரை மாற்றிய ஈபிஆர்எல்எப்

Spread the love

விக்கியுடன் இணைந்து கூட்டணி அமைத்து போட்டியிட முன் பெரை மாற்றிய ஈபிஆர்எல்எப்

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈபிஆர்எல்எப்) கட்சியின் பெயரை ‘தமிழர் ஐக்கிய முன்னணி’ என பெயர்

மாற்றம் செய்வதற்கான ஆட்சேபபனைகளை தேர்தல் ஆணைக்குழு கோரியுள்ளது.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கட்சியின் பெயரை ‘தமிழர் ஐக்கிய முன்னணி’ என பெயர் மாற்றம்

செய்வதற்கான கோரிக்கை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ளதாக அவ்வாணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த பெயர் மாற்றம் தொடர்பான ஆட்சேபனைகள் இருப்பின் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் எழுத்து

மூலமான மனுக்களை சமர்ப்பிக்குமாறு தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த புதிய பெயர் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் பெயருக்கு நேர் ஒத்ததாக உள்ளதா எனவும், அப்பெயரை அவர்களிற்கு வழங்குவது தொடர்பில்

விக்கியுடன் இணைந்து கூட்டணி அமைத்து போட்டியிட முன் பெரை மாற்றிய ஈபிஆர்எல்எப்

ஆட்சேபனைகள் உள்ளதா எனவும் தேர்தல் ஆணைக்குழு பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளிடம் வினவியுள்ளது.

அவ்வாறு ஆட்சேபனைகள் ஏதும் இருப்பின் உறுதிப்படுத்துவதற்கான விடயங்களுடன் எதிர்வரும்

05.02.2020க்கு முன்னர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சி.வி விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணியில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி எதிர்வரும்

தேர்தலில் களமிறங்கவுள்ள நிலையில் எந்த கட்சியின் சின்னத்தில் போட்டியிடவுள்ளனர் என்ற பரபரப்பு

காணப்படும் நிலையில், இந்த பெயர் மாற்ற கோரிக்கை தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கதாகும்.video

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *