யாழ் மாவட்டத்தை சேர்ந்த பெண் தலைமைத்துவ குடும்பங்கள் உட்பட்ட வறுமையில் வாடிய கோட்டுக்குட்பட்ட 70
பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் 31.12.2019 இன்று வழங்கி குழந்தைகளின் புன்னகையில் அக மகிழ்ந்த தருணங்களில்
தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
க்னம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே
கனக துர்க்கை அம்மன் அருளாளே
பாடசாலை தொடங்க இன்னும் இரு நாட்களே உள்ள நிலையில் கற்றல் உபகரணங்கள் வாங்க முடியாமல்
தவித்த தாய்மாரின் நெஞ்சிலே நிம்மதியையும் பிள்ளைகளின் முகத்தில் சந்தோசத்தை யும் உண்டாக்கிய. கனகதுர்க்கை அம்மன் ஆலய
நிர்வாகத்தினருக்கும்,நம்பிக்கை சபை உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்
உலகாளும் தாயின் அருளோடு உங்கள் பணி தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்











