லொறி, ஆட்டோ நேருக்கு நேர் மோதால் ! மூவர் பலி
வெல்லவாய – மொனராகலை பிரதான வீதியின் வருணகம
பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
லொறி ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.
இன்று (10) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ள நிலையில் மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள்தாக தெரிவிக்கப்படுகிறது.






